இந்தியாவின் மோசமான பொருளாதாரச் சூழ்நிலையில் சேமிப்புக்கான வட்டி விகிதம் சுமார் 15 வருட சரிவைச் சந்தித்து மக்களுக்கு மாபெரும் அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது. இதுமட்டும் அல்லாமல் சமானிய மக்களின் சேமிப்பின் அளவும் அதிகளவில் குறைந்துள்ளது என ஆய்வுகள் கூறுகிறது.
இதன் மூலம் நாட்டின் மேக்ரோ பொருளாதாரம் பெரிய அளவில் பாதிக்கப்பட்டு இருப்பது மட்டும் அல்லாமல் நாட்டு மக்களின் முதலீட்டு அளவு பெரிய அளவில் குறைந்து, மக்கள் அதிகமாகக் கடன் வாங்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
60 சதவீத சேமிப்பு
இந்தியாவின் சாமானிய குடும்பங்கள் பொதுவாகச் சுமார் 60 சதவீதம் வருமானத்தைச் சேமிப்பு செய்யும் பழக்கம் கொண்டவர்கள். இந்த அளவு தற்போது பெரிய அளவில் குறைந்துள்ளது எனச் சந்தை ஆய்வறிக்கை கூறுகிறது.
ஆனாலும் பிரேசில் போன்ற வளரும் நாடுகளைக் காட்டிலும் இந்தியாவையும், இந்திய சந்தையும் விருப்பான சந்தையாக இன்றும் உள்ளது என்பது தான் விநோதம்.
HSBC
இந்திய பொருளாதாரம் நிலையான வளர்ச்சியில் இருக்க வேண்டும் என்றால் அனைத்துத் தரப்பு மக்கள் மத்தியிலும் முதலீட்டு அளவு அதிகரிக்க வேண்டும். அதற்கான வாய்ப்புகள் ஏற்படுத்த வேண்டும் என HSBC இந்திய கிளையின் தலைமை பொருளாதார வல்லுனர் பிரன்ஜூல் பன்டாதிரி தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் சேமிப்பு அளவு குறையும் போது அரசு வெளிநாட்டில் இருந்து நிதி திரட்ட வேண்டிய இக்கட்டான சூழ்நிலைக்குத் தள்ளப்படும்.
சேமிப்பு அளவு
இந்தியாவின் ஜிடிபி-யில் மொத்த சேமிப்பின் அளவு 2012ஆம் ஆண்டில் 34.6 சதவீதமாக இருந்த நிலையில் 2019ஆம் ஆண்டு இதன் அளவு 30.1 சதவீதமாகக் குறைந்துள்ளது. 2007-08ஆம் ஆண்டு இதன் அளவு 36 சதவீதமாக இருந்தது என மத்திய புள்ளியியல் அமைப்பு தெரிவித்துள்ளது.
இதேபோல் ஜிடிபி கணக்கின் படி இந்திய குடும்பங்களின் சேமிப்பு அளவு 2012இல் 23 சதவீதமாக இருந்த நிலையில் 2019இல் 18 சதவீதமாகக் குறைந்துள்ளது என அதிர்ச்சி தகவல்களை வெளியிட்டுள்ளது.
வெளிநாட்டுக் கடன்
இந்தியாவில் சேமிப்பு அளவுகள் குறையும் பட்சத்தில் இந்திய நிறுவனங்கள் இந்திய வங்கியின் கடன் வாங்க முடியாமல் வெளிநாட்டு வங்கி மற்றும் முதலீட்டாளர்களிடம் இருந்து கடன் வாங்கி வருகிறது. இதன் உலகளாவிய சந்தையில் இந்தியாவை மிகவும் மோசமான நிலைக்குத் தள்ளப்படும் எனத் தெரிகிறது.
மொத்த கடன்
இந்நிலையில் ரிசர்வ் வங்கி வெயிட்டுள்ள அறிக்கையின் படி இந்தியாவின் மொத்த கடன் 2015ஆம் ஆண்டில் 475 பில்லியனாக இருந்த நிலையில் தற்போது 543 பில்லியனாக உயர்ந்துள்ளது.
More From GoodReturns

ஈரான் போரை முடிவுக்கு கொண்டு வருவாரா பிரதமர் மோடி? ரம்ஜான் நாளில் தொடங்கிய முக்கிய பேச்சுவார்த்தை..!!

பங்குச்சந்தை சரிவுக்கு மத்தியில் ஐபிஓ வெளியிடும் கோல் இந்தியா: முதலீடு செய்யலாமா?

இந்தியா நினைத்தால் ஈரான் போரை முடிவுக்கு கொண்டு வர முடியுமா? மத்தியஸ்தராக மாறுகிறதா இந்தியா?

இப்படியே போனா கஜானா காலியாகிடும்: அமெரிக்க டாலரை கைவிடும் இந்தியா? ஈரான் போரால் நடக்கும் மாற்றம்?

தங்கம் விலை ரூ.9000 குறைவு, வெள்ளி விலை ரூ.50,000 சரிவு: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை!!

சிலிண்டர் தட்டுப்பாட்ட விடுங்க!! ஈரான் போரால் நாட்டின் முதுகெலும்புக்கே பிரச்சினை வரப்போகுது!!

ஈரான் போர்: கதிகலங்கி நிற்கும் தைவான்.. 11 நாட்கள் கெடு..!!

52 வார சரிவில் HDFC வங்கி பங்குகள்.. ஓரேயொரு நபர் செய்த வேலையால்.. ரூ.1 லட்சம் கோடி காலி..!!!

என்னப்பா புது புது பிரச்சனையா கிளம்புது.. ஈரான் போரால் 'இந்த' பொருட்கள் விலை தாறுமாற உயரபோகுது..!!

இந்தியர்கள் உடனே வெளியேறலாம்; நாங்களே டிக்கெட் போட்டு தரோம்: அமெரிக்க அரசின் அட்டூழியம்

ஈரான் போரில் டிரம்ப் போடும் கணக்கே வேற..! குறி வச்சது கமேனிக்கு இல்ல..! வெளிவரும் உண்மை..!



Click it and Unblock the Notifications