இந்தியாவின் மிக நீளமான எக்ஸ்பிரஸ்வே டெல்லி மற்றும் மும்பை இடையில் கட்டமைக்கப்பட்டு வருகிறது. இதனை முன் உதாரணமாகக் கொண்டு இந்தியாவின் இரண்டாவது மிகப்பெரிய எக்ஸ்பிரஸ்வே இரண்டு நகரங்களுக்கிடையே கட்டப்பட்டு வருகிறது. குறிப்பாக இந்த எக்ஸ்பிரஸ்வேயின் குறிப்பிட்ட பகுதி பாலைவனத்தின் மீது கட்டப்படுவது தான் இந்த திட்டத்தின் தனித்துவமாகும்.
பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் இருந்து குஜராத் மாநிலம் ஜாம்நகர் வரை 1,316 கிலோ மீட்டர் தொலைவிற்கு இந்தியாவின் இரண்டாவது மிகப்பெரிய எக்ஸ்பிரஸ்வே கட்டமைக்கப்பட்ட வருகிறது. இந்த பணிகள் அடுத்த ஆண்டு டிசம்பர் மாதத்துடன் நிறைவடையும் என தெரிவிக்கப்படுகிறது.

இந்த எக்ஸ்பிரஸ்வேயின் ஒரு குறிப்பிட்ட பகுதியானது பாலைவனத்தின் மீது கட்டப்பட உள்ளது. இந்த சாலை பணிகள் நிறைவடைந்தால் பஞ்சாப் மற்றும் குஜராத் இடையிலான போக்குவரத்து நேரம் தற்போது இருப்பதை விட பாதியாக குறையும்.
தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் இந்த சாலை பணிகளில் பகுதி அளவு பணியை முடித்துள்ளது , 2025 டிசம்பர் மாதம் பணிகள் முழுமையாக நிறைவடையும் என தெரிவித்துள்ளது. தொழிற்சாலைகள் ரீதியாக இது மிக முக்கியமான எக்ஸ்பிரஸ்வேயாக கருதப்படுகிறது. இந்த சாலையில் குறிப்பிட்ட பகுதிகள் ராஜஸ்தானில் பாலைவனத்தின் மீது கட்டப்படுகிறது. இதன் நீளம் கிட்டத்தட்ட 500 கிலோ மீட்டர்.
இந்த சாலை பணிகள் முடிவடையும் பட்சத்தில் இந்தியாவின் தொழிற்சாலை மையமான அமிர்தசரஸ் மற்றும் குஜராத்தின் ஜாம்நகர் இடையிலான போக்குவரத்து இன்னும் எளிதாகிவிடும். தற்போது அமிர்தசரஸில் இருந்து ஜாம்நகருக்கு 1516 கிலோ மீட்டர் தொலைவு இருக்கிறது.
இதனை கடக்க 26 மணி நேரங்கள் ஆகும். ஆனால் இந்த புதிய எக்ஸ்பிரஸ்வே செயல்பாட்டுக்கு வரும்போது இந்த தொலைவு என்பது 216 கிலோ மீட்டர் என்ற அளவுக்கு குறையும் பயண நேரமும் 13 மணி நேரங்களாக குறைந்த விடும். இதற்கு முக்கிய காரணம் இந்த எக்ஸ்பிரஸ்வேயில் வாகனங்கள் மணிக்கு 100 கிலோ மீட்டர் வேகத்தில் செல்ல முடியும்.
அமிர்தசரஸ் ஜாம்நகர் எக்ஸ்பிரஸ் மூலம் டெல்லி என்.சி.ஆர் பகுதியை சேர்ந்த மக்களும் பயனடையலாம். அதாவது பஞ்சாப் ,டெல்லி, ராஜஸ்தான், ஹரியானா மற்றும் குஜராத் ஆகிய நகரங்களுக்கு இடையிலான போக்குவரத்து நேரம் என்பது கணிசமாக குறையும் . இந்த எக்ஸ்பிரஸ்வே டெல்லி காத்ரா எக்ஸ்பிரஸ்வேயுடன் இணைக்கப்பட உள்ளது. இதன் காரணமாக குஜராத்தில் இருந்து காஷ்மீர் வரையிலும் பயண நேரம் கணிசமாக குறைந்துவிடும்.
More From GoodReturns

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

ஹார்முஸ் ஜலசந்தியில் சிக்கி இருக்கும் 700 எண்ணெய் கப்பல்கள்:ஒரு இன்ச் நகர்ந்தா கூட சோலி முடிஞ்சிடும்



Click it and Unblock the Notifications