குட் நியூஸ்.. இந்தியாவில் வேலைவாய்ப்பின்மை சரிவு.. மக்கள் கையில் பணம்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கொரோனாவும், லாக்டவுனும் இந்தியர்களையும், இந்திய வேலைவாய்ப்பு சந்தையையும் மொத்தமாகப் புரட்டிப்போட்டு உள்ளது என்றால் மிகையில்லை.

 

லாக்டவுன் காரணமாக ஒரு பக்கம் நிறுவனங்கள் வர்த்தகம் இல்லாமல் கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கி வரும் வேளையில், மறுபக்கம் நிறுவனங்கள் ஊழியர்களைப் பணிநீக்கம் செய்தும் சம்பளத்தைக் குறைத்தும் வந்தது.

இந்த நிலை ஜூன் காலாண்டில் மாறியுள்ளது என்றால் மிகையில்லை, 2வது கொரோனா அலை இருந்தாலும் அனைத்து மாநிலத்திலும் தளர்வுகளுடன் லாக்டவுன் அறிவிக்கப்பட்ட காரணத்தால் மூடப்பட்ட நிறுவனங்கள் மீண்டும் இயங்க துவங்கியது. இதனால் வேலைவாய்ப்புகள் எண்ணிக்கை அதிகரித்தது.

 ஜூன் காலாண்டு

ஜூன் காலாண்டு

இந்தியாவில் வேலைவாய்ப்பின்மை அளவீடு மார்ச் காலாண்டில் யாரும் எதிர்பார்க்காத அளவிற்கு 20.9 சதவீதமாக உயர்ந்து வரலாற்று உச்சத்தை அடைந்தது. இது ஜூன் காலாண்டில் 13.3 சதவீதமாகக் குறைந்துள்ளது, இதன் இந்தியாவில் கடந்த 3 மாதத்தில் எந்த அளவிற்கு வேலைவாய்ப்புகள் உருவாக்கியுள்ளது என்பதைக் காட்டுகிறது.

 வேலைவாய்ப்பின்மை அளவு

வேலைவாய்ப்பின்மை அளவு

கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தை ஒப்பிடுகையில் நாட்டின் மொத்த வேலைவாய்ப்பின்மை அளவு 8.4 சதவீதமாக இருந்ததது எனத் தேசிய புள்ளியியல் அலுவலகம் கூறுகிறது. வேலைவாய்ப்பின்மை அளவீடு என்பது இந்தியாவில் வேலைவாய்ப்புச் செல்லும் மக்கள் எண்ணிக்கையில் எத்தனை பேர் வேலைவாய்ப்பு இல்லாமல் இருக்கிறார்கள் என்பது தான்.

 வேலைவாய்ப்பின்மை - தற்கொலை
 

வேலைவாய்ப்பின்மை - தற்கொலை

இதேவேளையில் மற்றொரு தகவல் நாட்டு மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்தியாவில் வேலைவாய்ப்பு இல்லாதவர் தற்கொலை செய்துக்கொள்ளவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக மத்திய அரசு முக்கியமான தரவுகளை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது.

 கூலி வேலை

கூலி வேலை

இந்தப் போட்டி மிகுந்த வாழ்க்கை முறையில் வேலைவாய்ப்பு பெறுவது என்பது மிகவும் கடினமான ஒன்றாக மாறியுள்ளது. படித்த பல பட்டதாரிகள் கூலி வேலைக்குச் செல்லும் நிலை பல இடத்தில் பார்க்க முடிகிறது. இதேபோல் சந்தையில் வர்த்தக வளர்ச்சிக்கான வாய்ப்புகள் மிகவும் குறைவாக இருக்கும் காரணத்தால் வேலைவாய்ப்புகளை உருவாக்குவதிலும் தொய்வு ஏற்பட்டு உள்ளது.

 ராமேஸ்வர் டெலி

ராமேஸ்வர் டெலி

இந்தச் சூழ்நிலையில் மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை அமைச்சர் ராமேஸ்வர் டெலி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்துள்ள தரவுகள் நாட்டு மக்களுக்கு அதிர்ச்சியை அளித்துள்ளது. வேலைவாய்ப்பின்மை காரணமாகத் தற்கொலைக்கும் செய்தோர் எண்ணிக்கையில் கர்நாடக மாநிலம் முதல் இடத்தைப் பிடித்துள்ளது.

 கர்நாடக முதல் இடம்

கர்நாடக முதல் இடம்

2018 மற்றும் 2019ஆம் ஆண்டுக்கான தரவுகளை மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை அமைச்சர் ராமேஸ்வர் டெலி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்துள்ள நிலையில், கர்நாடக மாநிலத்தில் வேலைவாய்ப்பு இல்லாமல் தற்கொலை செய்துகொண்டோர் எண்ணிக்கை 2018ல் 464 ஆகவும், 2019ல் 553 ஆகவும் அதிகரித்துள்ளது.

 கர்நாடகாவில் அதிகரிப்பு

கர்நாடகாவில் அதிகரிப்பு

2017ல் கர்நாடகா இப்பட்டியலில் 2வது இடத்தில் இருந்தது, ஆனால் அடுத்த இரண்டு வருடத்தில் முதல் இடத்தைப் பிடித்துள்ளது. கர்நாடக மாநிலத்திற்கு வேலைவாய்ப்புக்காக இந்தியா முழுவதிலும் இருந்து மக்கள் வருகின்றனர். இதில் பலருக்கு வேலைவாய்ப்பு என்பது எளிதாகக் கிடைப்பது இல்லை.

 மகாராஷ்டிரா, தமிழ்நாடு

மகாராஷ்டிரா, தமிழ்நாடு

கர்நாடகா-வை தொடர்ந்து 2வது இடத்தில் மகாராஷ்டிரா உள்ளது, 2018ல் 394 ஆக இருந்த எண்ணிக்கை 2019ல் 452 ஆக அதிகரித்துள்ளது. இதைத் தொடர்ந்து தமிழ்நாடு 2019ல் 251 உயிர்களை இழந்து 3வது இடத்தைப் பிடித்துள்ளது.

தற்கொலை

தற்கொலை

மேலும் நாடு முழுவதும் வேலைவாய்ப்பு இல்லாமல் தற்கொலை செய்துகொண்டோர் எண்ணிக்கை 2016ல் 2298 ஆக இருந்த நிலையில் 2017ல் 2404, 2018ல் 2471ஆகவும், 2019ல் 2,851 ஆகவும் அதிகரித்துள்ளது. இந்த எண்ணிக்கை 2020ல் புதிய உச்சத்தை அடையவும் வாய்ப்பு உள்ளது, இதற்குக் கொரோனாவும் முக்கியக் காரணமாக இருக்கும்.

 கொரோனா அலை

கொரோனா அலை

இந்தியாவில் வேலைவாய்ப்புகளை உருவாக்க மத்திய அரசு பல திட்டங்களை அறிவித்துள்ளது. சமீபத்தில் முதல் கொரோனா அலையில் இருந்து மீள நாட்டில் அதிக வேலைவாய்ப்புகளை உருவாக்க வேண்டும் என்பதற்காக Atma Nirbhar Bharat Rojgar Yojana என்ற திட்டம் அக்டோபர் 2020 முதல் நடைமுறையில் இருப்பதாகத் தெரிவித்துள்ளார் மத்திய அமைச்சர் ராமேஸ்வர் டெலி.

 ஆத்மநிர்பர் பாரத் ரோஸ்கர் யோஜனா

ஆத்மநிர்பர் பாரத் ரோஸ்கர் யோஜனா

மத்திய நிதியமைச்சகம் அறிவித்த ஆத்மநிர்பர் பாரத் ரோஸ்கர் யோஜனா திட்டத்தின் கீழ் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கும் நிறுவனங்களுக்கு ஊக்கத் தொகை அளிக்கப்படும் எனக் கூறப்பட்டு இருந்தது. இத்திட்டத்தின் மூலம் சுமார் 91,129 நிறுவனங்கள் 25.57 லட்சம் வேலைவாய்ப்புகளை உருவாக்கியதன் வாயிலாக 1,193.18 கோடி ரூபாய் கொடுத்துள்ளது.

 71.80 லட்சம் மக்களுக்குப் பலன்

71.80 லட்சம் மக்களுக்குப் பலன்

மத்திய அரசு ஆத்மநிர்பர் பாரத் ரோஸ்கர் யோஜனா திட்டத்தை அக்டோபர் 1, 2020 முதல் மார்ச் 2020 வரை நீட்டித்துள்ளக் காரணத்தால் பல நிறுவனங்கள் ஆர்வத்துடன் வேலைவாய்ப்புகளை உருவாக்கி வருகிறது. இந்தத் திட்டத்தின் மூலம் சுமார் 71.80 லட்சம் மக்கள் பயன் அடைவார்கள் எனக் கணிக்கப்பட்டு உள்ளது.

 MSME நிறுவனங்கள்

MSME நிறுவனங்கள்

ஆத்மநிர்பர் பாரத் ரோஸ்கர் யோஜனா திட்டத்தின் மூலம் நிதிநெருக்கடியில் சிக்கியுள்ள MSME நிறுவனங்களைக் காப்பாற்றவும், இக்காலகட்டத்தில் பணியில் சேருவோருக்கு 2 வருடம் பிஎப் தொகையை முழுமையாக அரசே செலுத்தும். இதனால் நிறுவனங்களின் சுமை மட்டும் அல்லாமல் ஊழியர்களும் கூடுதலான வருமானத்தைப் பெற முடியும்.

 மத்திய அரசின் திட்டம்

மத்திய அரசின் திட்டம்

மேலும் இந்தியாவில் அதிகளவிலான வேலைவாய்ப்புகள் குறைந்த காலகட்டத்தில் உருவாக்கச் சரியான தேர்வாக MSME நிறுவனங்கள் இருக்கும் காரணத்தால் இத்துறைக்குச் சாதகமாகப் பல திட்டங்களை அறிவித்துள்ளது மத்திய அரசு. குறிப்பாகப் பல கடன் திட்டங்கள் மிகவும் குறைவான வட்டியில் அளிக்கப்பட்டு வருகிறது, இதேபோல் ஜிஎஸ்டி வரி விதிப்பிலும் சில முக்கியத் தளர்வுகள் அளிக்கப்பட்டு வருகிறது.

 வேலைவாய்ப்பு

வேலைவாய்ப்பு

இந்தத் திட்டங்கள் வாயிலாகவே தற்போது வேலைவாய்ப்பின்மை அளவீடு மார்ச் காலாண்டில் 20.9 சதவீதத்தில் இருந்து ஜூன் காலாண்டில் 13.3 சதவீதமாகக் குறைந்துள்ளது. அனைத்திற்கும் மேலாக 3வது கொரோனா அலை வேலைவாய்ப்பு சந்தையைப் பாதிக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

இந்திய நிறுவனத்தை கைப்பற்ற திட்டமிடும் நேபாள நூடுல்ஸ் நிறுவனம்..!இந்திய நிறுவனத்தை கைப்பற்ற திட்டமிடும் நேபாள நூடுல்ஸ் நிறுவனம்..!

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

India's Unemployment Rate Drops to 13.3% in June quarter

Good news: India's Unemployment Rate Drops to 13.3% in the June quarter, but Suicides are linked to unemployment increase in India. Karnataka tops the list, after Maharashtra and Tamilnadu into the top 3 places
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X