இந்தியாவில் வேலைவாய்ப்பின்மை ஜூலை மாதம் சிறிய அளவிலான முன்னேற்றத்தை கண்டுள்ளது, மத்திய அரசு நாடு முழுவதும் 15 வயது மற்றும் அதற்கு அதிகமாக உள்ள மக்களின் வேலைவாய்ப்புகள் பெறுவதை தொடர்ந்து ஆய்வு செய்து தரவுகளை வெளியிட்டு வருகிறது. இந்த தரவுகள் நாட்டின் தொழிற்துறை, வர்த்தக சந்தை வளர்ச்சி பாதையில் உள்ளதா என்பதை காட்டும் முக்கியமான காரணியாகவும் உள்ளது.
இதன் அடிப்படையில் 15 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்களின் ஒட்டுமொத்த வேலையின்மை விகிதம், ஜூலை மாதத்தில் 5.1 சதவீதமாக குறைந்துள்ளது, இது ஜூன் மாதத்தில் 5.5% ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த சரிவுக்கு மிக முக்கியமான காரணம் கிராமப்புறங்களில் வேலையின்மை கணிசமாக குறைந்தது மூலம் மொத்த வேலைவாய்ப்பின்மை விகிதம் குறைந்துள்ளது. ஒரு மாத இடைவெளியில் சுமார் 0.4 சதவீதம் வரையில் குறைந்துள்ளது.

கிராமப்புற வேலையின்மை விகிதம் ஜூன் மாதத்தில் 5 சதவீதமாக இருந்த நிலையில், ஜூலை மாதத்தில் 4.5% ஆக குறைந்துள்ளது.
ஆனால் நகர்ப்புறங்களில் நிலைமை இதற்கு மாறாக உள்ளது. ஜூன் மாதத்தில் 6.6% ஆக இருந்த நகர்ப்புற வேலையின்மை, ஜூலையில் 6.7% ஆக சற்று உயர்ந்துள்ளது.
சுருக்கமாக சொல்ல வேண்டும் என்றால் இந்திய கிராமபுறத்தில் அதிகப்படியான வேலைவாய்ப்புகள் உருவான காரணத்தால் நாட்டின் மொத்த வேலைவாய்ப்பு சந்தை காப்பாற்ப்பட்டு உள்ளது.
நகரப்புறங்களில் ஜூஸை மாதம் வேலைவாய்ப்பின்மை அதிகரித்தது கவனிக்கப்பட வேண்டிய விஷயமாக உள்ளது. மேலும் இந்த வேலைவாய்ப்பு சந்தையில் பெண்களின் பங்கீடு ஜூன் மாதத்தில் 54.4 சதவீதமாக இருந்த நிலையில் ஜூலை மாதத்தில் 55.4% ஆக உயர்ந்துள்ளது.
இதன் மூலம் பெண்களின் பங்கீடு அதிகரித்துள்ளது. கிராமபுறம் + பெண்களின் பங்கீடு ஆகியவற்றின் மூலம் இந்தியாவின் ஒட்டுமொத்த வேலைவாய்ப்பு நிலை ஜூலை மாதம் மேம்பட்டுள்ளது. இதன் மூலம் ஜூலை மாதத்தில் பெரு நகரங்களை காட்டிலும் கிராமபுறத்தில் அதிகப்படியான முதலீடுகள் குவிந்து, இதனால் வர்த்தகம் அதிகமாகி வேலைவாய்ப்பு சந்தை மேம்பட்டு உள்ளது.
மத்திய அரசின் கீழ் செயல்படும் தேசிய புள்ளியியல் அமைப்பு ஒவ்வொரு மாதமும் வேலைவாய்ப்பின்மை தரவுகளை வெளியிட்டு வருகிறது.


Click it and Unblock the Notifications