இந்தியாவில் வேலைவாய்ப்பின்மை விகிதம் 5.1%.. வேலையில்லாமல் தவிக்கும் ஆண்கள்..!

டெல்லி: இந்தியாவில் ஏப்ரல் மாதத்தில் வேலை வாய்ப்பின்மை விகிதம் 5.1% ஆக இருந்தது என மத்திய அரசு வெளியிட்டுள்ள தரவு தெரிவிக்கிறது. முதன்முறையாக மத்திய அரசு இந்தியாவில் மாதாந்திர வேலைவாய்ப்பின்மை தரவுகளை வெளியிட்டு இருக்கிறது.

மத்திய புள்ளியியல் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலின் படி 2025 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் இந்தியாவில் 15 வயது மேற்பட்டவர்கள் மத்தியில் வேலைவாய்ப்பின்மை விகிதம் 5.1% ஆக உள்ளது. இது ஆண்கள் மத்தியில் 5 .2% ஆகவும் பெண்கள் மத்தியில் 5% ஆகவும் இருக்கிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது. கிராமங்களில் வேலைவாய்ப்பின்மை விகிதம் 4.5% என்ற அளவிலும் நகர்ப்புறங்களில் 6.5% என்ற அளவிலும் உள்ளது.

இந்தியாவில் வேலைவாய்ப்பின்மை விகிதம் 5.1%.. வேலையில்லாமல் தவிக்கும் ஆண்கள்..!

Periodic Labour Force Survey (PLFS) எனப்படும் காலமுறை தொழிலாளர் கணக்கெடுப்பின் கீழ் Current Weekly Status (CWS) எனப்படும் வாராந்திர நிலவரத்தை எடுத்து இந்த தரவுகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. இதன் இந்தியாவின் வேலை வாய்ப்பின்மை விகிதம் மற்றும் இந்தியாவின் வேலை வாய்ப்பு குறித்த நிலவரங்களை நிகழ் நேரத்தில் வெளிப்படையாக தெரிவிக்க அரசு முயற்சி செய்கிறது. இதனால் தான் சர்வதேச தரத்துக்கு இணங்க மத்திய அரசு முதன்முறையாக மாதாந்திர அறிக்கையை வெளியிட தொடங்கி இருக்கிறது.

இதற்கு முன்பு வரை மத்திய அரசு ஒவ்வொரு காலாண்டிற்கும் மற்றும் ஆண்டுதோறும் என்ற அளவில்தான் வேலைவாய்ப்பின்மை விகிதம் குறித்த தரவுகளை வெளியிட்டு வந்தது. ஏப்ரல் மாதத்தில் தேசிய அளவில் Labour Force Participation Rate எனப்படும் தொழிலாளர் பங்களிப்பு விகிதம் என்பது 55.6% ஆக இருக்கிறது என அறிக்கை கூறுகிறது. கிராமப்புற இந்தியாவில் இந்த தொழிலாளர் பங்களிப்பு என்பது அதிகமாக இருக்கிறது. கிராமப்புறங்களில் தொழிலாளர் பங்களிப்பு 58 % என்றும் நகர்புறங்களில் 50.7 % என்ற அளவிலும் இருக்கிறது.

ஆண்களை பொறுத்தவரை தொழிலாளர் பங்களிப்பு விகிதம் கிராம மற்றும் நகர்ப்புறம் என இரண்டிலுமே அதிகமாக இருக்கிறது. ஆண்களின் தொழிலாளர் பங்களிப்பு விகிதம் கிராமப்புறங்களில் 79 % ஆகவும் நகர்புறங்களில் 75 % ஆகவும் இருக்கிறது. இதுவே பெண்கள் என வரும்போது கிராமங்களில் பெண்களின் தொழிலாளர் பங்களிப்பு 38.2 %ஆக மட்டுமே இருக்கிறது.

Worker Population Ratio எனப்படும் உழைக்கும் வயதில் இருக்கும் மக்களில் வேலைவாய்ப்பை பெற்றவர்களின் கணக்கீடு ஒட்டுமொத்தமாக நாட்டில் 52.8 % ஆக உள்ளது. கிராமப்புறங்களில் இது 55.4 %ஆகவும், நகர்ப்புறங்களில் 47.4 % ஆகவும் இருக்கிறது. மத்திய அரசு இனி மாதம்தோறும் இதுபோல மாதாந்திர வேலை வாய்ப்பின்மை விவரங்களை வெளியிட உள்ளது.

FAQs
அரசு ஏன் மாதாந்திர வேலைவாய்ப்பின்மை அறிக்கையை வெளியிடுகிறது?

.இதற்கு முன்பு வரை மத்திய அரசு ஒவ்வொரு காலாண்டிற்கும் மற்றும் ஆண்டுதோறும் என்ற அளவில்தான் வேலைவாய்ப்பின்மை விகிதம் குறித்த தரவுகளை வெளியிட்டு வந்தது. ஆனால் சர்வதேச தரத்திற்கு ஏற்பவும் வெளிப்படைத்தன்மையை அதிகரிக்கவும் மாதாந்திர வேலைவாய்ப்பின்மை அறிக்கையை வெளியிடுகிறது.

ஆண்கள் மத்தியில் வேலைவாய்ப்பின்மை அதிகரித்துள்ளதா?

ஆண்கள் மத்தியில் வேலைவாய்ப்பின்மை  5 .2% ஆகவும் பெண்கள் மத்தியில் 5% ஆகவும் இருக்கிறது கிராமங்களில் வேலைவாய்ப்பின்மை விகிதம் 4.5% என்ற அளவிலும் நகர்ப்புறங்களில் 6.5% என்ற அளவிலும் உள்ளது.

ஏப்ரல் மாதத்தில் இந்தியாவில் வேலைவாய்ப்பின்மை விகிதம் எவ்வளவு?

மத்திய புள்ளியியல் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலின் படி 2025 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் இந்தியாவில் 15 வயது மேற்பட்டவர்கள் மத்தியில் வேலைவாய்ப்பின்மை விகிதம் 5.1% ஆக உள்ளது.

GoodReturns Finance

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+