டெல்லி: இந்தியாவில் ஏப்ரல் மாதத்தில் வேலை வாய்ப்பின்மை விகிதம் 5.1% ஆக இருந்தது என மத்திய அரசு வெளியிட்டுள்ள தரவு தெரிவிக்கிறது. முதன்முறையாக மத்திய அரசு இந்தியாவில் மாதாந்திர வேலைவாய்ப்பின்மை தரவுகளை வெளியிட்டு இருக்கிறது.
மத்திய புள்ளியியல் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலின் படி 2025 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் இந்தியாவில் 15 வயது மேற்பட்டவர்கள் மத்தியில் வேலைவாய்ப்பின்மை விகிதம் 5.1% ஆக உள்ளது. இது ஆண்கள் மத்தியில் 5 .2% ஆகவும் பெண்கள் மத்தியில் 5% ஆகவும் இருக்கிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது. கிராமங்களில் வேலைவாய்ப்பின்மை விகிதம் 4.5% என்ற அளவிலும் நகர்ப்புறங்களில் 6.5% என்ற அளவிலும் உள்ளது.

Periodic Labour Force Survey (PLFS) எனப்படும் காலமுறை தொழிலாளர் கணக்கெடுப்பின் கீழ் Current Weekly Status (CWS) எனப்படும் வாராந்திர நிலவரத்தை எடுத்து இந்த தரவுகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. இதன் இந்தியாவின் வேலை வாய்ப்பின்மை விகிதம் மற்றும் இந்தியாவின் வேலை வாய்ப்பு குறித்த நிலவரங்களை நிகழ் நேரத்தில் வெளிப்படையாக தெரிவிக்க அரசு முயற்சி செய்கிறது. இதனால் தான் சர்வதேச தரத்துக்கு இணங்க மத்திய அரசு முதன்முறையாக மாதாந்திர அறிக்கையை வெளியிட தொடங்கி இருக்கிறது.
இதற்கு முன்பு வரை மத்திய அரசு ஒவ்வொரு காலாண்டிற்கும் மற்றும் ஆண்டுதோறும் என்ற அளவில்தான் வேலைவாய்ப்பின்மை விகிதம் குறித்த தரவுகளை வெளியிட்டு வந்தது. ஏப்ரல் மாதத்தில் தேசிய அளவில் Labour Force Participation Rate எனப்படும் தொழிலாளர் பங்களிப்பு விகிதம் என்பது 55.6% ஆக இருக்கிறது என அறிக்கை கூறுகிறது. கிராமப்புற இந்தியாவில் இந்த தொழிலாளர் பங்களிப்பு என்பது அதிகமாக இருக்கிறது. கிராமப்புறங்களில் தொழிலாளர் பங்களிப்பு 58 % என்றும் நகர்புறங்களில் 50.7 % என்ற அளவிலும் இருக்கிறது.
ஆண்களை பொறுத்தவரை தொழிலாளர் பங்களிப்பு விகிதம் கிராம மற்றும் நகர்ப்புறம் என இரண்டிலுமே அதிகமாக இருக்கிறது. ஆண்களின் தொழிலாளர் பங்களிப்பு விகிதம் கிராமப்புறங்களில் 79 % ஆகவும் நகர்புறங்களில் 75 % ஆகவும் இருக்கிறது. இதுவே பெண்கள் என வரும்போது கிராமங்களில் பெண்களின் தொழிலாளர் பங்களிப்பு 38.2 %ஆக மட்டுமே இருக்கிறது.
Worker Population Ratio எனப்படும் உழைக்கும் வயதில் இருக்கும் மக்களில் வேலைவாய்ப்பை பெற்றவர்களின் கணக்கீடு ஒட்டுமொத்தமாக நாட்டில் 52.8 % ஆக உள்ளது. கிராமப்புறங்களில் இது 55.4 %ஆகவும், நகர்ப்புறங்களில் 47.4 % ஆகவும் இருக்கிறது. மத்திய அரசு இனி மாதம்தோறும் இதுபோல மாதாந்திர வேலை வாய்ப்பின்மை விவரங்களை வெளியிட உள்ளது.
More From GoodReturns

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!



Click it and Unblock the Notifications