கோடை கால விடுமுறை காரணமாக இந்தியாவில் மே மாதத்தில் பெட்ரோல் விற்பனை மே மாத முதல் பாதியிலேயே 10 சதவிகிதம் உயர்ந்திருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது.
மே 16ஆம் தேதி நிலவரப்படி பெட்ரோல் விற்பனை நிறுவனங்கள் வெளியிட்டுள்ள தகவலில் மே மாதம் 1ஆம் தேதியிலிருந்து 15ஆம் தேதி வரையிலான முதல் 15 நாட்களில் பெட்ரோல் விற்பனை 10% அதிகரித்து இருப்பதாக தெரிவித்து ள்ளது. மே மாதம் கோடை வெயில் சுட்டெரிக்கும் காலம், அதுமட்டுமின்றி பள்ளி கல்லூரிகளிக்கு ஒரு மாத காலம் கோடை விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

கோடை விடுமுறை காரணமாக நாடு முழுவதும் பலரும் தங்களின் சொந்த ஊர் மற்றும் பல்வேறு இடங்களுக்கு சுற்றுலாவும் செல்கின்றனர். இதன் காரணமாக நாட்டில் பெட்ரோல் பயன்பாடு உயர்ந்திருக்கிறது. கடந்த ஆண்டு மே மாதத்தின் முதல் பாதியுடன் ஒப்பிடும்போது இந்த ஆண்டு பெட்ரோல் பயன்பாடு அதிகரித்திருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. கடந்த ஆண்டு மே மாதத்தின் முதல் பாதியில் 1.37 மில்லியன் டன்கள் பெட்ரோல் விற்பனை செய்யப்பட்ட நிலையில் இந்த ஆண்டு 1.5 மில்லியன் டன்களாக உயர்ந்திருக்கிறது.
இதுவே 2023 ஆம் ஆண்டு இதே காலகட்டத்தில் பெட்ரோல் விற்பனை 1.36 மில்லியன் டன்களாக இருந்தது. டீசல் விற்பனை இரண்டு சதவீதம் அதிகரித்து இருக்கிறது. மே 1 முதல் மே 15 ஆம் தேதி வரை 3.36 மில்லியன் டன்கள் டீசல் விற்பனை செய்யப்பட்டிருக்கிறது. கடந்த ஏப்ரல் மாதத்தில் டீசல் விற்பனை என்பது 8.23 மில்லியன் டன்களாக இருந்தது என்றும் கடந்த ஆண்டுடன் ஒப்பிடும் போது ஏப்ரல் மாதம் டீசல் விற்பனை 4 சதவீதம் அதிகரித்து இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
அதே போல விமான எரிபொருள் விற்பனையும் எதிர்பார்த்த அளவு உயரவில்லை. மே 1ஆம் தேதியிலிருந்து மே 15ஆம் தேதி வரை விமான எரிபொருள்களுக்கான விற்பனையும் 1.1% என அதிகரித்திருப்பதாக தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. ஆனால் இது எதிர்பார்த்த அளவு உயரவில்லை. மே 1ஆம் தேதியிலிருந்து 15ஆம் தேதி வரை 3, 27, 900 டன்கள் விமான எரிபொருள் விற்பனை செய்யப்பட்டு இருக்கிறது. இது கடந்த ஆண்டு இதே காலகட்டத்துடன் ஒப்பிடும் போது 1.1% அதிகமாகும்.
பாகிஸ்தான் உடனான மோதலை தொடர்ந்து பல்வேறு விமான நிலையங்கள் மூடப்பட்டு விமான சேவைகள் நிறுத்தப்பட்டதே இதற்கு காரணம் என தெரிய வந்திருக்கிறது. அதே வேளையில் எல்பிஜி பயன்பாடு 10.4% அதிகரித்து இருக்கிறது. மே 1ஆம் தேதி முதல் மே 15ஆம் தேதி வரை 1.34 மில்லியன் டன்கள் எல்பிஜி விற்பனை செய்யப்பட்டிருக்கிறது.
More From GoodReturns

LPG வடிவில் வந்த முதல் ஷாக்.. அடுத்து பெட்ரோல் - டீசல்.. விலை உயர்வுக்கு உண்மையான காரணம் என்ன..?

பாகிஸ்தான் எடுத்த திடீர் முடிவு.. பள்ளி, கல்லூரிகள் மூடல்.. அரசு ஊழியர்களுக்கு Work From Home..!!

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!



Click it and Unblock the Notifications