கடும் வெயிலின் தாக்கத்தால் காய்கறி விலை கடுமையாக உயர்ந்துள்ளதால், 70 சதவீத வீடுகளில், வாரத்திற்கு காய்கறி செலவுகள் மட்டும் 25 சதவீதம் முதல் 100 சதவீதம் வரை அதிகரித்துள்ளதாக, LocalCircles நடத்திய கணக்கெடுப்பு தெரிவிக்கிறது. இந்த விலை ஏற்றம் காரணமாக சாமானிய மக்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
கடந்த வாரத்திலேயே, மூன்றில் இரண்டு சதவீத நுகர்வோர் தக்காளி விலை கிலோவுக்கு ரூ.30-லிருந்து ரூ.50-க்கு அதிகரித்துள்ளதாக கூறியுள்ளனர். சில மாநிலங்களில் கிலோவுக்கு 100 ரூபாய்க்கு மேல் தக்காளி விலை உயர்ந்துள்ளது. சில பகுதிகளில் காய்கறிகள் விதைப்பதற்கு முக்கியமான ஜூலை மாதத்தில் போதிய பருவமழை பெய்யா விட்டாலோ அல்லது அதிக மழைப்பொழிவு காய்கறி சாகுபடியை பாதித்தாலோ காய்கறி விநியோகம் மற்றும் விலைகளில் மாற்றம் ஏற்படும்.

இந்த விலை ஏற்றத்தைத் தடுக்க உள்ளூர் நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம் என்று இந்த கணக்கெடுப்பு பரிந்துரைக்கிறது. மேலும், மிக அதிக விலையில் காய்கறிகள் விற்கப்படும் மாவட்டங்களில் காய்கறிகளை மானிய விலையில் கிடைப்பதை உறுதி செய்வதற்காக நுகர்பொருள் துறை அமைச்சகம் (NCCF) மூலம் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் கணக்கெடுப்பு தெரிவித்துள்ளது.
இந்தியாவின் பல பகுதிகளில் நிலவி வரும் கடுமையான வெயில் காரணமாக காய்கறி விநியோகம் கணிசமாகக் குறைந்துள்ளது. உணவு ஏற்றுமதியைக் கட்டுப்படுத்துவதற்கும் இறக்குமதி வரிகளை குறைப்பதற்குமான நடவடிக்கைகள் அவ்வளவு பலனளிக்கவில்லை. கோடை காலத்தில் பொதுவாக காய்கறி கிடைப்பது குறைவாகவே இருக்கும். இந்த வருடத்தில் காய்கறிகள் பற்றாக்குறை வெயிலால் மேலும் மோசமடைந்துள்ளது. நாடு முழுவதும் வெப்பநிலை சராசரி அளவை விட 4 டிகிரி செல்சியஸ் முதல் 9 டிகிரி செல்சியஸ் வரை அதிகரித்துள்ளது.
பருவமழை சீக்கிரம் தொடங்கியிருந்தாலும், இதுவரை பெய்த மழைப்பொழிவில் 18 சதவீதம் குறைவு ஏற்பட்டுள்ளது. இந்த தாமதம் மற்றும் சில பகுதிகளில் போதுமான மழைப்பொழிவு இல்லாததால், கோடை கால பயிர்களின் நடவு தாமதமாகியுள்ளது. இந்த வகை பயிர்கள் சரியான வளர்ச்சிக்கு போதுமான மழைப்பொழிவை பெரிதும் சார்ந்தே இருக்கின்றன.
2023-ஆம் ஆண்டு முதல், உணவுப் பணவீக்கம் இந்தியப் பொருளாதாரத்தில் பெரும் மாற்றத்தைக் கொண்டு வந்துள்ளது. அரசாங்க தரவுகளின்படி, பணவீக்க விகிதம் காய்கறிகளில் 28 சதவீதமும், பருப்பு வகைகளில் 17 சதவீதமும், தானியங்ககளில் 8.6 சதவீதமும், இறைச்சி மற்றும் மீன் வகைகளில் 8.2 சதவீதம், மசாலாப் பொருட்களில் 7.8 சதவீதமும், மற்றும் முட்டையில் 7.1 சதவீதமும் அதிகரித்துள்ளது.
ஜூலை முதல் வாரத்தில் மழைப்பொழிவு அதிகரித்தால், சப்ளை பற்றாக்குறையை பெருமளவில் ஈடுகட்ட முடியும் என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். ஜூலை மாதத்தில் காய்கறிகள் வரத்து பாதிக்கப்படவில்லை என்றால், காய்கறிகளின் விலை குறையலாம். உதாரணமாக, தென் மாநிலங்களில் தக்காளி விலை கணிசமாக உயர்ந்துள்ளது.
More From GoodReturns

ஈரான் போர்: பல ஆயிரம் கோடிகளை இழந்த இந்திய விமான நிறுவனங்கள்!! நிலைமை இன்னும் மோசமடையுமா?

100 டாலரை தொட்ட கச்சா எண்ணெய்.. ஓரே நாளில் 25% விலை உயர்வு.. தீவிரம் அடையும் ஈரான் போர்..!!

ஈரான் போர் நீடிப்பதால் மனம் மாறிய அமெரிக்கா!! திடீரென இந்தியாவுக்கு சலுகை!!

மேற்கு ஆசிய போர் நெருக்கடி: இந்திய அரிசி, எரிசக்தி, ரத்தினங்கள் என 15 துறைகளுக்கு எச்சரிக்கை?

இந்தியாவுக்காக நாங்க இருக்கோம்.. கைகொடுக்கும் ரஷ்யா.. ஈரான் பிரச்சனையில் வந்த தீர்வு..!!

ஈரான் போரை விடுங்க.. இந்திய -அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் என்ன ஆச்சு? அமெரிக்க அரசு பதில்

இந்திய ஐடி பங்குகளை கைக்கழுவும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்!! எல்லாம் ஏஐ செய்யும் வேலை!!

பங்குச்சந்தை சரிவிலும் ஏற்றம் கண்ட ரயில்வே துறை பங்குகள்: இப்போது முதலீடு செய்யலாமா?

துபாய், சவுதி வாழ் இந்தியர்களுக்கு மத்திய அரசின் முக்கிய அறிவிப்பு!! இந்த நம்பரை சேவ் பண்ணிக்கோங்க!!

ஈரான் தாக்குதல்: இந்தியர்களுக்கு பாதுகாப்பான இடம் தர மறுத்ததா இஸ்ரேல்? வைரலாகும் புகைப்படம்

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?



Click it and Unblock the Notifications