ஈரானில் ஒரு மாதமாக போர் நீடிப்பதால் இந்தியாவிற்கு கச்சா எண்ணெய் வரத்து குறைந்திருக்கிறது. வளைகுடா நாடுகளில் இருந்து கச்சா எண்ணெய் விநியோகம் தடைபட்டுள்ளது. இதன் காரணமாக வெளிச்சந்தையில் அதிக விலை கொடுத்து கச்சா எண்ணெய் வாங்க வேண்டிய நிலை இந்திய எண்ணெய் நிறுவனங்களுக்கு ஏற்பட்டிருக்கிறது.
போர் தொடங்கும் முன்பு வரை ஒரு பேரல் கச்சா எண்ணெய் 80 முதல் 90 டாலருக்கே கிடைத்தது ஆனால் தற்போது கிட்டத்தட்ட 160 டாலர் கொடுத்து வாங்க வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கிறது. வழக்கமாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயரும் போதெல்லாம் எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் டீசல் மற்றும் எல்பிஜி விலைகளை உயர்த்தி விடும். ஆனால் தற்போது பல மடங்கு கச்சா எண்ணெய் விலை உயர்ந்திருந்தாலும் எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் விலையில் கை வைக்கவில்லை.

ஏற்கனவே மக்கள் மத்தியில் பெட்ரோல், டீசலுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு விடுமோ என்ற அச்சம் நிலவி வருவதால் மேற்கொண்டு சிக்கலை ஏற்படுத்த வேண்டாம் என்பதற்காக எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றம் செய்யவில்லை. கடந்த வாரம் ப்ரீமியம் பெட்ரோல் விலை மட்டும் உயர்த்தப்பட்டது. சாதாரண பெட்ரோல் விலை மாறாமல் அப்படியே இருக்கிறது.
இதற்கிடையே இந்தியாவின் தனியார் பெட்ரோல் மற்றும் டீசல் விற்பனை நிறுவனமான நயாரா எனர்ஜி நேற்றைய தினம் தங்களுடைய பெட்ரோல் மற்றும் டீசல் விலையை சற்றே உயர்த்தியது. பெட்ரோல் விலை லிட்டருக்கு 5 ரூபாயும் டீசல் விலை லிட்டருக்கு 3 ரூபாயும் உயர்த்தப்பட்டது.
இந்த சூழலில் நயாரா நிறுவனத்தை பின்தொடர்ந்து பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களும் பெட்ரோல் டீசல் விலையை உயர்த்தி விடுமோ என மக்கள் அச்சம் அடைந்தனர். ஆனால் இனி அந்த அச்சம் தேவையில்லை. ஏனெனில் மத்திய அரசு பொதுமக்களுக்கும், எண்ணெய் நிறுவனங்களுக்கும் பெரிய அளவில் நிவாரணம் தரக்கூடிய வகையில் பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை குறைத்துவிட்டது.
இது தொடர்பாக மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் பெட்ரோல் மீது விதிக்கப்பட்டு வந்த கலால் வரி 13 ரூபாயில் இருந்து 3 ரூபாய் என குறைக்கப்பட்டு இருக்கிறது. அதாவது பெட்ரோல் மீதான கலால் வரியில் 10 ரூபாயி குறைத்துள்ளது. அதே போல டீசலுக்கு விதிக்கப்பட்டு வந்த கலால் வரி முற்றிலுமாக நீக்கப்பட்டுள்ளது. ஒரு லிட்டருக்கு 10 ரூபாய் என விதிக்கப்பட்ட கலால் வரி பூஜ்ஜியமாக மாற்றப்பட்டுள்ளது.
இது உடனடியாக அமலுக்கு வருவதாக அரசு தெரிவித்திருக்கிறது. வரி சுமை குறைந்திருப்பதால் எண்ணெய் நிறுவனங்கள் மேற்கொண்டு பெட்ரோல், டீசல் விலை உயர்வு முடிவினை எடுக்காது. எண்ணெய் நிறுவனங்களுக்கு இது நற்செய்தி. அதே போல வாகன ஓட்டிகளுக்கும் போர் காரணமாக பெட்ரோல், டீசல் விலை உயருமோ என்ற கவலை இனி தேவையில்லை. அதேவேளையில் வரி குறைந்திருப்பதால் தற்போதைக்கு எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் விலையை குறைக்காது அதே வேளையில் உயர்த்தவும் செய்யாது என்பதே வாகன ஓட்டிகளுக்கு கிடைத்திருக்கும் நிவாரணம்.
More From GoodReturns

டீசல் விலை லிட்டருக்கு 22 ரூபாய் உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்..!

பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு என தகவல் பரப்பினால் சட்ட நடவடிக்கை: மத்திய அரசு கடும் எச்சரிக்கை!!

பேருந்து டிக்கெட் கட்டணங்கள் குறைப்பு: எரிபொருளை சேமிக்க பொது போக்குவரத்தை பயன்படுத்த அறிவுரை!!

பெட்ரோல், டீசல் விலை உயர்வு: நயாரா நிறுவன பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டதால் மக்கள் ஷாக்

பெட்ரோல் விலை ரூ.40 வரை உயர வாய்ப்பு? ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்.. மீண்டும் வருகிறதா Oil Bond?

இந்தியா வாங்கும் கச்சா எண்ணெய்-யின் உண்மையான விலை 160 டாலர்.. அதிர்ச்சி அளிக்கும் தகவல்..!!

ரேஷன் அட்டை வைத்திருப்பவர்களுக்கு முக்கிய அப்டேட்.. 3 மாதத்திற்கான பொருள் ஒரே நேரத்தில்.. மத்திய அரசின் முடிவு

ஆனந்த் ஸ்ரீனிவாசன்: படிச்சு படிச்சு சொன்னேன்.. யாரும் கேட்ல 'Big Drop'.. வெள்ளி அதோ கதி..!!

1986-ல் ஒரு புல்லட் இவ்வளவு தானா? வைரலாகும் பழைய பில்! அப்பவே கெத்து தான்!

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!



Click it and Unblock the Notifications

