இந்தியா-அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம் ஏற்பட்டால் பங்குச்சந்தையே தலைகீழாக மாறும்: ரகுராம் ராஜன்

இந்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன், அமெரிக்காவுடனான வர்த்தக ஒப்பந்தம் முடிவடைந்தவுடன் இந்தியப் பங்குச்சந்தை ஏற்றம் அடையும் என தெரிவித்துள்ளார். அமெரிக்கா இந்தியா மீது விதித்துள்ள இறக்குமதி வரிகளால் இந்திய சந்தை மீது இருந்த நம்பிக்கை குறைந்திருப்பதாக கூறியுள்ளார்.

அமெரிக்காவின் 50% வரி நியாயமாக இல்லை என்றும், இது 20%க்கும் குறைவாக தான் இருக்க வேண்டும் என்றும் ராஜன் கூறியுள்ளார். உலகிலுள்ள எந்த நாட்டையும் விட இந்தியாவுக்கு அதிக வரி விதிக்க எந்தக் காரணமும் இல்லை என்று அவர் சுட்டிக்காட்டினார். இருநாடுகளுக்கும் இடையே வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தானால் அது வெளிநாட்டு முதலீட்டாளர்களின் நம்பிக்கையை மேம்படுத்தி, இந்தியாவின் வளர்ச்சியையும், பங்குச்சந்தையின் செயல்பாட்டையும் அதிகரிக்கும் என்பது அவரது கருத்து.

இந்தியா-அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம் ஏற்பட்டால் பங்குச்சந்தையே தலைகீழாக மாறும்: ரகுராம் ராஜன்

இந்தியச் சந்தையில் கீழ்நோக்கிய அழுத்தமும், அமெரிக்கச் சந்தையில் மேல்நோக்கிய அழுத்தமும் நிலவுவதைச் சுட்டிக்காட்டிய ரகுராம் ராஜன், இவற்றுக்கிடையேயான பெரும் வித்தியாசம் செயற்கை நுண்ணறிவின் (AI) பயன்பாட்டால் உருவானது என தெரிவித்தார். ஏஐ தொழில்நுட்பம் அமெரிக்கச் சந்தைக்கு புதிய உத்வேகத்தைத் தந்துள்ளது.

புதிய தொழில்நுட்பங்கள் உருவாகும்போதெல்லாம், முதலில் ஒருவித பரவசமும், பின்னர் ஏமாற்றமும், இறுதியில் அவை வெற்றிகரமாக அமையும் ஒரு முறையும் இருப்பதாக ராஜன் விளக்கியுள்ளார். இதற்கு உதாரணமாக இணையப் பங்குகளை அவர் சுட்டிக்காட்டினார். டாட்-காம் காலகட்டத்தில் பெரும் ஏற்றம் கண்ட அமேசான் பங்குகள் பின்னர் சரிந்தன. ஆனால், தற்போது செயற்கை நுண்ணறிவால் அதன் கிளவுட் சேவைகளில் சிறப்பாகச் செயல்பட்டு மீண்டும் உச்சத்தை எட்டியுள்ளது எனக் குறிப்பிட்டார்.

இந்தியா மற்றும் அமெரிக்கப் பங்குச்சந்தைகளின் மதிப்பீடுகளை ஒப்பிடும் கேள்விக்கு ராஜன் பதிலளித்தபோது, "ஒரு காலத்தில் எல்லாருமே இந்தியாவைப் பற்றி பெருமகிழ்ச்சியில் இருந்தார்கள். இப்போது வரிகளால் இந்தியா மீது அவநம்பிக்கை அதிகமாக இருக்கலாம்," என்றார். இதன் அடிநாதமாக, "பரவசம் இந்தியாவிடமிருந்து அமெரிக்காவிற்கு மாறிவிட்டது" என்றும் அவர் தெரிவித்தார்.

கடந்த ஓராண்டாகப் பெரிய ஏற்றம் காணாத இந்தியச் சந்தை, அமெரிக்காவுடனான வர்த்தகப் பேச்சுவார்த்தைகள் முடிந்தவுடன் மீண்டும் வேகம் பெறும் என ராஜன் நம்பிக்கை தெரிவித்தார். "உலக நாடுகள் அனைத்திலும் உள்ள போட்டியாளர்களின் வரி விகிதங்களுக்கு (10% முதல் 20% வரை) இந்திய வரியும் குறைக்கப்பட்டால், இந்தியாவின் வளர்ச்சி குறித்த நம்பிக்கையும் அதிகரிக்கும்," என்று அவர் வலியுறுத்தினார்.

நீண்டகாலத்தில் இந்தியப் பங்குச்சந்தையின் செயல்பாடு குறித்துக் கேள்வி எழுப்பப்பட்டபோது, "இந்தியா உறுதியளித்தபடி வளர்ச்சி அடைந்தால், இந்தியப் பங்குச்சந்தை பின்வாங்க எந்தக் காரணமும் இல்லை. அதிக மற்றும் குறைவான மதிப்பீட்டுக் காலங்கள் இருந்தாலும், நீண்ட காலத்திற்கு நிலைத்து இருந்தால் போதுமான வருமானத்தை நிச்சயம் பெறலாம்," என்று அவர் உறுதியாகத் தெரிவித்தார்.

Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+