சிந்து நீர் ஒப்பந்தம் என்றால் என்ன? இந்தியாவின் தடை உத்தரவால் பாகிஸ்தான் எப்படியெல்லாம் பாதிக்கும்?

ஜம்மு மற்றும் காஷ்மீர் மாநிலத்தின் பஹல்காம் பகுதியில் ஏற்பட்ட பயங்கரவாத தாக்குதல், இந்தியாவின் பாதுகாப்பில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த தாக்குதலில் 26 பேர் உயிரிழந்துள்ளனர். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக மத்திய அரசு தயாராகி வருகிறது. அந்த வகையில், பாகிஸ்தானுடன் இந்தியாவின் நீண்டகால நீர் ஒப்பந்தமான "சிந்து நீர் ஒப்பந்தம்" (Indus Waters Treaty) தற்காலிகமாக நிறுத்தப்படும் என மத்திய அமைச்சரவை பாதுகாப்பு குழு (Cabinet Committee on Security - CCS) நேற்று அறிவித்துள்ளது. இது இந்தியாவின் பாதுகாப்பு வரலாற்றில் மிக முக்கியமான ஒரு முடிவாக பார்க்கப்படுகிறது.

இந்த ஒப்பந்தம் 1960ம் ஆண்டு இந்தியாவின் பிரதமர் ஜவஹர்லால் நேரு மற்றும் பாகிஸ்தான் அதிபர் அயூப் கான் ஆகியோரால் கையெழுத்திடப்பட்டது. உலக வங்கியின் நடுவராக இருந்து இந்த ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டது. இது இரு நாடுகளுக்கும் இடையே நீர் விநியோகத்தை பகிர்ந்து கொள்வதற்கான ஒப்பந்தமாகும். இந்த ஒப்பந்தத்தின் படி, இந்தியாவுக்கு ரவி, பீயாஸ், சத்லெஜ் ஆகிய கிழக்கு நதிகள் மீதான முழு கட்டுப்பாடு கொடுக்கப்பட்டது. இவை ஆண்டுக்கு சுமார் 41 பில்லியன் கன மீட்டர் நீரை வழங்குகின்றன.

சிந்து நீர் ஒப்பந்தம் என்றால் என்ன? இந்தியாவின் தடை உத்தரவால்  பாகிஸ்தான் எப்படியெல்லாம் பாதிக்கும்?

பாகிஸ்தானுக்கு சிந்து நதி, செனாப், ஜெஹ்லம் ஆகிய மேற்கு நதிகள் மீதான கட்டுப்பாடு வழங்கப்பட்டது. இவை ஆண்டுக்கு சுமார் 99 பில்லியன் கன மீட்டர் நீருடன் இணைக்கப்படுகின்றன. இந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில், இந்தியா இந்த நதிநீர் தொகையின் சுமார் 30% மட்டுமே பயன்படுத்தலாம், மீதமுள்ள 70% பாகிஸ்தானுக்கே அனுப்பப்படுகிறது.

இந்தியாவும் பாகிஸ்தானும் இடையே 1965, 1971 மற்றும் 1999 ஆகிய மூன்று போர்கள் நடந்தாலும் கூட, இந்த ஒப்பந்தம் எந்த நேரத்திலும் நிறுத்தப்படவில்லை. ஆனால், தற்போது நடந்த பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு பாகிஸ்தானைச் சேர்ந்த பயங்கரவாத அமைப்புகள் தொடர்புடையவை என்பதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளன. இதனையடுத்து இந்தியா கடுமையான நடவடிக்கையை மேற்கொண்டு, நீர் ஒப்பந்தத்தை நிறுத்தியுள்ளது.

இதனால், இந்தியாவின் இந்த முடிவால் பலவிதமான விளைவுகள் ஏற்படும். பாகிஸ்தானின் விவசாயம் மற்றும் குடிநீர் தேவைகள் மிக மோசமாக பாதிக்கப்படும். பாகிஸ்தான் அரசின் மீது உள்ள உள்நாட்டு பிரச்சனைகள் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. இந்தியாவின் ஜம்மு & காஷ்மீர், ஹிமாசல் பிரதேசம் மற்றும் பஞ்சாப் மாநிலங்களில் கூடுதல் நீர் வளங்கள் கிடைக்கும். இந்தியா உள்நாட்டு பயன்பாட்டிற்காக புதிய அணைகள், நீர்வழி திட்டங்களை தொடங்கும் வாய்ப்பு உள்ளது. நீர் சேமிப்பு, பாசன வசதி, மின்சாரம் உற்பத்தி போன்ற துறைகளில் அரசு புதிய முதலீடுகளை மேற்கொள்ளும்.

சிந்து நதிநீர் ஒப்பந்தம் பல ஆண்டுகள் சாதாரண நிலை மற்றும் நம்பிக்கையின் அடிப்படையில் நடைமுறைப்பட்ட ஒப்பந்தமாக இருந்தது. ஆனால், நாட்டின் பாதுகாப்புக்கு எதிரான அச்சுறுத்தல்களை கருத்தில் கொண்டு, இந்தியா எடுத்த இந்த முடிவு வரலாற்றில் ஒரு முக்கியமான மாற்றமாக கருதப்படுகிறது. இந்த ஒப்பந்தம் நிறைவேற்றப்பட்ட 63 ஆண்டுகளுக்குப் பிறகு, முதல் முறையாக இந்தியா அதன் நடைமுறையை நிறுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த முடிவு, இந்தியாவின் நீரின் பாதுகாப்பு, உள்நாட்டு வளர்ச்சி மற்றும் அண்டை நாடுகளுடன் உள்ள உறவுகளில் புதிய மாற்றத்தை உருவாக்கலாம்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+