பாகிஸ்தானின் முக்கிய நபர்களுக்கான விசா வசதி ரத்து.. இந்தியா வைத்த ஆப்பு.!!

ஏப்ரல் 22 அன்று ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்தத் தாக்குதலில் பாகிஸ்தானைச் சேர்ந்த பயங்கரவாதக் குழுக்கள் ஈடுபட்டுள்ளன என்ற சந்தேகத்தின் காரணமாக இந்திய அரசு சில முக்கியமான முடிவுகளை எடுத்துள்ளது. அதில் முக்கியமானது சார்க் விசா விலக்கு திட்டம் (SAARC Visa Exemption Scheme - SVES) பாகிஸ்தான் குடிமக்களுக்கு ரத்து செய்தது.

இந்த திட்டம் 1992-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. தெற்கு ஆசிய நாடுகள் - இந்தியா, பாகிஸ்தான், நேபாளம், பங்களாதேஷ், இலங்கை, பூட்டான், மாலத்தீவுகள், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளுக்கிடையே நல்ல உறவை வளர்க்கும் நோக்கில் இது உருவாக்கப்பட்டது.

பாகிஸ்தானின் முக்கிய நபர்களுக்கான விசா வசதி ரத்து.. இந்தியா வைத்த ஆப்பு.!!

இந்த திட்டத்தின் மூலம், முக்கியமான நபர்கள், நீதிபதிகள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், பத்திரிகையாளர்கள், விளையாட்டு வீரர்கள், தொழிலதிபர்கள் உள்ளிட்டவர்கள் விசா இல்லாமல் அந்தந்த நாடுகளுக்குப் பயணம் செய்ய அனுமதி அளிக்கப்படுகிறது. அவர்களுக்கு விசா ஸ்டிக்கர் என்று சொல்லப்படும் ஒரு சிறப்பு பயண ஆவணம் வழங்கப்படுகிறது. இது ஒரு வருடத்திற்கு செல்லுபடியாகும்.

இந்த பயங்கரவாத தாக்குதலுக்குப் பாகிஸ்தான் தொடர்புடையதாக இருப்பதாகக் கருதி, இந்திய அரசு பாகிஸ்தான் குடிமக்களுக்கு வழங்கப்பட்டிருந்த SVES அனுமதிகளை முழுமையாக ரத்து செய்துள்ளது. இந்தியாவில் தற்போது உள்ள பாகிஸ்தான் குடிமக்கள் 48 மணி நேரத்தில் நாட்டை விட்டு வெளியேற வேண்டும். இனிமேல் பாகிஸ்தான் குடிமக்களுக்கு SVES ஆவணம் வழங்கப்படாது. ஏற்கனவே வழங்கப்பட்ட விசா ஸ்டிக்கர்கள் செல்லாது என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த முடிவை வெளியுறவு செயலாளர்(Foreign Secretary) விக்ரம் மிஸ்ரி புதன்கிழமை அறிவித்தார்.

இந்த முடிவுடன் சேர்த்து இந்திய அரசு சில முக்கியமான கட்டாய நடவடிக்கைகளையும் எடுத்துள்ளது.
டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்தில்(Pakistani Embassy) பணிபுரியும் பாதுகாப்பு மற்றும் ராணுவ ஆலோசகர்கள் 7 நாட்களுக்குள் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. இந்தியாவின் இராணுவ அதிகாரிகள் இஸ்லாமாபாத்தில் பணியாற்றி வந்தனர். இப்போது அவர்களையும் திரும்ப அழைத்துக் கொள்கிறார்கள். அமிர்தசரஸில்(Amritsar) உள்ள பாகிஸ்தான் எல்லை சாவடி உடனடியாக செயல்பாட்டிற்கு வரவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

1960ஆம் ஆண்டில் இந்தியா - பாகிஸ்தான் இடையே கையெழுத்திட்ட சிந்து நதி நீர் ஒப்பந்தம், பாகிஸ்தான் பயங்கரவாத ஆதரவை நிறுத்தும் வரை அமலுக்கு வராது என முடிவெடுக்கப் பட்டுள்ளது. இந்திய அரசின் இந்த நடவடிக்கை பாகிஸ்தானுக்கு பெரும் அதிர்ச்சியாக இருக்கிறது. இரு நாடுகளுக்கு இடையில் உள்ள முக்கிய அதிகாரிகளின் பயண அனுமதி நிறுத்தப்பட்டுள்ளதால், தூதரக உறவுகள்(Diplomatic relations) மேலும் மோசமடையலாம். சார்க் நாடுகளுக்கு இடையில் உள்ள நல்ல உறவுகள் மீது இது தாக்கம் ஏற்படுத்தலாம் என்றாலும், இந்திய அரசு தனது தேசிய பாதுகாப்பையே முதன்மையாக எடுத்துள்ளது.

இந்தியாவில் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கத்தில் பாகிஸ்தான் குடிமக்களுக்கான SVES ரத்து செய்யப்பட்டுள்ளது. இது பாகிஸ்தான் மீது இந்தியா எடுத்துள்ள மிக கடுமையான நடவடிக்கையாக பார்க்கப்படுகிறது. பயங்கரவாதத்துக்கு உறுதியாக எதிராக இந்தியா நின்றிருப்பதை இந்த முடிவுகள் காட்டுகின்றன.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+