இந்திய பிரதமர் என்று சொல்வதா.. பாரத பிரதமர் என்று சொல்வதா..? என்ற குழப்பத்திற்கு மத்தியில் மக்கள் இருக்கும் வேளையில் இந்தியா என்ற பெயரை பாரத் என மாற்றினால் எவ்வளவு செலவாகும் என்பதை ஒரு பார்மூலா மூலம் கணக்கிடப்பட்டு உள்ளது
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு, இம்மாத இறுதியில் நடைபெறும் சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் இந்தியாவின் பெயரை 'பாரத்' என மாற்றலாம் என்ற கருத்து நிலவி வரும் வேளையில் ஒரு நாட்டின் பெயரை மாற்றுவது எளிதான காரியமில்லை என்பதை தாண்டி விலை உயர்ந்த பணியாகவும் உள்ளது.

தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த அறிவுசார் சொத்துரிமை வழக்கறிஞரும் வலைப்பதிவாளருமான டேரன் ஆலிவியர் கொண்டு வந்த மாதிரியைப் பயன்படுத்தி, இந்தியாவின் பெயரை பாரத் என மாற்றினால் சுமார் ரூ.14,000 கோடிக்கு மேல் செலவாகும் என கணக்கிடப்பட்டு உள்ளது.
ஸ்வாசிலாந்து அதன் பெயரை ஈஸ்வதினி என்று மாற்றியபோது 2018 இல் டேரன் ஆலிவியர் இந்த மாதிரி பார்மூலா-வை பயன்படுத்தினார். அவருடைய பார்மூலா என்னவென்றால் ஒரு நாட்டின் பெயரை மாற்றுவதையும், பெரிய நிறுவனங்களில் பெயரை மாற்றுவதையும் ஒப்பிட்டு கணக்கிடப்படுகிறது.
இந்த பார்மூலா படி ஒரு பெரிய நிறுவனத்தின் சராசரி மார்கெட்டிங் செலவு அதன் மொத்த வருவாயில் சுமார் 6 சதவீதம் ஆகும், அதே நேரம் மறுபெயரிடுதல் செலவு ஒட்டுமொத்த மார்கெட்டிங் பட்ஜெட்டில் 10 சதவீதமாக இருக்கலாம் என்பது தான் டேரன் ஆலிவியர் உருவாக்கிய பார்மூலா.
மார்ச் 31, 2023 இல் முடிவடைந்த நிதியாண்டில் இந்தியாவின் மொத்த வருவாய் வரவுகள் ரூ.23.84 லட்சம் கோடியாக இருந்தது. எனவே, ஆலிவியரின் மாதிரியின்படி, மத்திய அரசு இந்தியா என்ற பெயரை பாரத் என மாற்ற சுமார் ரூ.14,034 கோடியை செலவழிக்க வேண்டியிருக்கும்.
இந்த தொகை ஒவ்வொரு மாதமும் மத்திய அரசு உணவு பாதுகாப்பு திட்டத்திற்காக பயன்படுத்தும் ஒரு மாதத்திற்கான தொகையாகும். இது ஒட்டுமொத்த இந்தியாவுக்கான தொகை தான், ஆனால் இந்தியா என பெயர் வைத்திருக்கும் ஒவ்வொரு நிறுவனமும், அமைப்பும் பெயர் மாற்ற வேண்டுமெனில் பெரும் நிதி சுமை இந்திய பொருளாதாரத்தின் மீது விழும்.
More From GoodReturns

இந்தியாவுக்காக நாங்க இருக்கோம்.. கைகொடுக்கும் ரஷ்யா.. ஈரான் பிரச்சனையில் வந்த தீர்வு..!!

100 டாலரை தொட்ட கச்சா எண்ணெய்.. ஓரே நாளில் 25% விலை உயர்வு.. தீவிரம் அடையும் ஈரான் போர்..!!

மேற்கு ஆசிய போர் நெருக்கடி: இந்திய அரிசி, எரிசக்தி, ரத்தினங்கள் என 15 துறைகளுக்கு எச்சரிக்கை?

ஈரான் போரை விடுங்க.. இந்திய -அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் என்ன ஆச்சு? அமெரிக்க அரசு பதில்

இந்திய ஐடி பங்குகளை கைக்கழுவும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்!! எல்லாம் ஏஐ செய்யும் வேலை!!

பங்குச்சந்தை சரிவிலும் ஏற்றம் கண்ட ரயில்வே துறை பங்குகள்: இப்போது முதலீடு செய்யலாமா?

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!



Click it and Unblock the Notifications