இந்தியா மற்றும் பிரிட்டன் இடையே நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட சமூக பாதுகாப்பு ஒப்பந்தம் (Social Security Agreement) இந்த வாரம் சைலெண்டாக கையெழுத்தானது.
மத்திய வெளியுறவு செயலாளர் விக்ரம் மிஸ்ரி மற்றும் பிரிட்டிஷ் உயர் ஆணையர் லிண்டி கேமரூன் ஆகியோர் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். இந்த ஒப்பந்தம் இந்தியாவில் இருந்து பிரிட்டன் நாட்டில் குறுகிய காலத்திற்கு பணியில் அமர்த்தப்படும் (short-term assignments) ஊழியர்களுக்கு விதிக்கப்படும் இரட்டை சமூக பாதுகாப்பு பங்களிப்பை (double contributions) முடிவுக்கு கொண்டுவருகிறது.

இந்திய ஊழியர்களுக்கு பலன்
இந்த ஒப்பந்தத்தின்படி, இந்திய ஊழியர்கள் பிரிட்டனில் 36 மாதங்கள் வரை தற்காலிக பணிக்கு அனுப்பப்பட்டால், இந்தியாவின் சமூக பாதுகாப்பு திட்டத்தில் (EPF, ESI போன்றவை) மட்டுமே பங்களிப்பு செய்ய வேண்டும். பிரிட்டன் சமூக பாதுகாப்பு திட்டத்தில் (National Insurance) பங்களிக்க வேண்டிய அவசியம் இல்லை. அதேபோல் பிரிட்டன் ஊழியர்கள் இந்தியாவில் பணியாற்றும்போதும் இதே விதி பொருந்தும்.
TCS, Infosys-க்கு ஜாக்பாட்
இந்த ஒப்பந்தம் இந்திய ஐடி துறைக்கு மிகப்பெரிய நிவாரணமாக அமைந்துள்ளது. TCS, Infosys, Wipro, HCL Tech போன்ற நிறுவனங்கள் ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான ஊழியர்களை பிரிட்டனுக்கு தங்களுடைய வாடிக்கையாளர்களுக்கு சேவை அளிக்க அனுப்பி வருகின்றன. முன்பு இந்த ஊழியர்களுக்கு இரு நாடுகளிலும் சமூக பாதுகாப்பு பங்களிப்பு (double contribution) செய்ய வேண்டியிருந்தது.
இதனால் நிறுவனங்களுக்கு கூடுதல் செலவும், நிர்வாக சிக்கல்களும் ஏற்பட்டன. இப்போது 36 மாதங்கள் வரை இந்த இரட்டை செலவு தவிர்க்கப்படும். இதனால் நிறுவனங்களின் இயக்க செலவு குறையும், லாப வீதம் (profit margins) மேம்படும், உலகளாவிய பணியாளர் மேலாண்மை எளிதாகும். ஏஐ மூலம் ஏற்படும் லாப சரிவை இந்த ஒப்பந்தம் மூலம் சிறிய அளவு மேம்படுத்த முடியும்.
75,000 இந்திய ஊழியர்களுக்கு நேரடி பயன்
வெளியுறவு அமைச்சகம் (MEA) தெரிவித்துள்ளபடி, இந்த ஒப்பந்தம் மூலம் பிரிட்டனில் தற்காலிக பணியில் உள்ள சுமார் 75,000 இந்திய ஊழியர்களுக்கு நேரடி பயன் கிடைக்கும். நிதி சுமை குறைவதோடு, சமூக பாதுகாப்பு (pension, health benefits) தொடர்ச்சியாக கிடைக்கும். இது இந்தியா-பிரிட்டன் இடையேயான பொருளாதார உறவுகளை மேலும் வலுப்படுத்தும். இந்த ஒப்பந்தம் இந்திய ஐடி துறைக்கு பெரும் நம்பிக்கையை அளித்துள்ளது.
More From GoodReturns

Work From Home.. அடுத்தடுத்து அறிவிப்பை வெளியிட்ட ஐடி நிறுவனங்கள்.. சென்னை ZOHO ஊழியர்களுக்கு 2 வார WFH..!!

டிரம்ப் எடுத்த ஒற்றை முடிவு.. இந்தியா-வுக்கு பெரும் இழப்பு..!!

கச்சாஎண்ணெய் கையிருப்பு: அமெரிக்கா, சீனா, ஜப்பான் மத்தியில் இந்தியா எங்கே நிற்கிறது?

பங்குச்சந்தை சரிவுக்கு மத்தியில் ஐபிஓ வெளியிடும் கோல் இந்தியா: முதலீடு செய்யலாமா?

Indane வாடிக்கையாளர்களே உஷார்!! சிலிண்டர் புக் செய்ய புதிய எண்கள், வழிமுறைகள் அறிவிப்பு!!

வேறு வழியில்லை.. சீனாவிடம் உதவி கேட்கும் இந்தியா.. ஈரான் போருக்கு மத்தியில் புது பிரச்சனை..!!

சிலிண்டர் தட்டுப்பாட்ட விடுங்க!! ஈரான் போரால் நாட்டின் முதுகெலும்புக்கே பிரச்சினை வரப்போகுது!!

எல்பிஜி தட்டுப்பாட்டுக்கு முடிவு: இந்தியாவுக்கு வரும் 92,700 மெட்ரிக் டன் கேஸ்.. மத்திய அரசு அறிவிப்பு!!

ஈரான் போர்: கதிகலங்கி நிற்கும் தைவான்.. 11 நாட்கள் கெடு..!!

LPG தட்டுப்பாடு.. அதானிக்கு அடித்த யோகம்.. 2 நாளில் கோடி கோடியாய் பண மழை..

Work From Home.. அடுத்தடுத்து அறிவிப்பை வெளியிட்ட ஐடி நிறுவனங்கள்.. சென்னை ZOHO ஊழியர்களுக்கு 2 வார WFH..!!



Click it and Unblock the Notifications