அமெரிக்க அதிபராக பொறுப்பேற்ற பிறகு டொனால்டு டிரம்ப் தினமும் அதிரடி உத்தரவுகளை பிறப்பித்து வருகிறார். அமெரிக்க பொருட்களுக்கு வரி விதிக்கும் நாடுகளுக்கு பதிலுக்கு பதில் வரி விதிப்பதாக மிரட்டி வருகிறார். அவரது வரிவிதிப்பு அறிவிப்புகளால் கனடா, மெக்ஸிகோ, ஐரோப்பிய நாடுகள், சீனா கடும் அதிருப்தி அடைந்துள்ளன.இந்தியாவும் அமெரிக்க பொருட்களுக்கு அதிக வரி விதிப்பதாக டிரம்ப் தொடர்ந்து குறை கூறி வருகிறார். அனைத்துலக வர்த்தகப் பங்காளிகளுக்குமான கூடுதலான வரிவிதிப்புகள் அடுத்த 90 நாள்களுக்குத் தற்காலிகமாக நிறுத்தப்படும் என்று அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் அறிவித்தார்.
இருந்தபோதும், அவர் ஏற்கெனவே விதித்துள்ள 10 விழுக்காடு அடிப்படை வரிகள் தொடர்ந்து செயல்பாட்டில் இருக்கும். ஆனாலும், சீனாவுக்கும் - அமெரிக்காவுக்குமான வர்த்தக போர் ஓய்ந்தப்பாடில்லை. இந்த நாட்டின் மீது 145 சதவீதம் வரியை ட்ரம்ப் விதித்துள்ளார். பதிலுக்கு 125 சதவீத வரியை அமெரிக்க பொருட்கள் மீது சீனா விதித்துள்ளது.

இத்தகைய நடவடிக்கையால் சீனாவின் பொருளாதாரம் ஆட்டம் காணும். உலகின் இரண்டு பெரிய பொருளாதார நாடுகளான அமெரிக்காவும்,சீனாவும் பரஸ்பர வரி விதிப்பு நடவடிக்கையை 6 மாதம் தொடர்ந்தாலே, இருநாடுகளின் பொருளாதாரமும் கடுமையாகப் பாதிப்படையும். அதனால் உலக பொருளாதாரமும் சீர்குலையும் என்று பொருளாதார வல்லுநர்கள் கணித்துள்ளனர்.
இந்தநிலையில், இந்தியா மற்றும் அமெரிக்கா இருநாட்டு வர்த்தக ஒப்பந்தத்தின் முதல் கட்ட ஒப்பந்த விதிமுறைகளில் கையெழுத்திட்டுள்ளன என்று இந்திய வர்த்தக அதிகாரி ஒருவர் தகவல் தெரிவித்துள்ளார். அதாவது, இந்தியா மற்றும் அமெரிக்கா, இருநாட்டு வர்த்தகத்தை 2030க்குள் $500 பில்லியன் ஆக உயர்த்தும் நோக்கில், இந்த ஆண்டின் இறுதியில் முடிக்கவுள்ள வர்த்தக ஒப்பந்தத்தின் முதல் கட்ட பணிகளை தொடங்க பிப்ரவரியில் ஒப்புக்கொண்டன. அதாவது, 2030க்குள் இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக மதிப்பை 500 பில்லியன் அமெரிக்க டாலருக்கு (660 பில்லியன் வெள்ளி) உயர்த்த அவ்விரு நாடுகளும் பிப்ரவரியில் ஒப்புக்கொண்டன.
More From GoodReturns

100 டாலரை தொட்ட கச்சா எண்ணெய்.. ஓரே நாளில் 25% விலை உயர்வு.. தீவிரம் அடையும் ஈரான் போர்..!!

இந்தியாவுக்காக நாங்க இருக்கோம்.. கைகொடுக்கும் ரஷ்யா.. ஈரான் பிரச்சனையில் வந்த தீர்வு..!!

மேற்கு ஆசிய போர் நெருக்கடி: இந்திய அரிசி, எரிசக்தி, ரத்தினங்கள் என 15 துறைகளுக்கு எச்சரிக்கை?

ஈரான் போரை விடுங்க.. இந்திய -அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் என்ன ஆச்சு? அமெரிக்க அரசு பதில்

இந்திய ஐடி பங்குகளை கைக்கழுவும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்!! எல்லாம் ஏஐ செய்யும் வேலை!!

பங்குச்சந்தை சரிவிலும் ஏற்றம் கண்ட ரயில்வே துறை பங்குகள்: இப்போது முதலீடு செய்யலாமா?

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!



Click it and Unblock the Notifications