உக்ரைன் மீதான போரை நிறுத்தியுள்ள ரஷ்யா தனது வர்த்தகத்தையும் வருவாய் ஈட்டும் அனைத்து வழிகளையும் மேம்படுத்தி வருகிறது. ஒருபக்கம் தனது ரூபிள் நாணயத்தின் மதிப்பை மேம்படுத்த வேண்டும் என்பதற்காக ஐரோப்பாவிடம் ரூபிள் நாணயம் வாயிலாகப் பேமெண்ட் செய்தால் மட்டுமே கச்சா எண்ணெய் எரிவாயு அளிக்க முடியும் என அறிவித்துள்ளது.
இதேபோல் ரஷ்யாவின் மிக நெருங்கிய நட்பு நாடான சீனா மற்றும் துருக்கி நாடுகளுக்கு யுவான் அல்லது லிரா ஆகியவற்றின் வாயிலாகவும், தங்கத்தின் வாயிலாகவும் எண்ணெய் முதல் அனைத்து பொருட்களையும் அளிக்கச் சலுகை அளித்துள்ளது.
இந்நிலையில் இன்று ரஷ்ய வெளியுறவு அமைச்சர் வெளியிட்டுள்ள அறிவிப்பு, ரஷ்யாவுக்கு இந்தியாவுடன் வர்த்தகம் எந்த அளவிற்கு முக்கியமானதாக உள்ளது என்பதைக் காட்டுகிறது.
ரஷ்யா- இந்தியா
ரஷ்யாவிடம் இருந்து இந்தியா எதை வாங்க விரும்பினாலும், ஆலோசனை செய்து இரு தரப்புக்கும் சாதகமான முடிவுகளை எடுக்க நாங்கள் தயாராக உள்ளோம் என ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் இன்று கூறியுள்ளார்.
செர்ஜி லாவ்ரோவ்
ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் இன்று இந்தியா வந்துள்ள நிலையில் இந்திய வெளியுறவு அமைச்சரான ஜெய்சங்கர்-ஐ சந்தித்த போது "இந்தியா எங்களிடம் இருந்து எதையும் வாங்க விரும்பினாலும், பரஸ்பரம் ஏற்றுக்கொண்டு உரிய முடிவை எடுக்க ஒத்துழைப்பை அளிக்கத் தயார்" எனக் கூறினார்.
வர்த்தகம்
மேலும் இந்திய ரஷ்யா இடையேயான நட்புறவும் சிறப்பாக இருக்கும் நிலையிலும், இரு நாடுகளின் வெளியுறவுக் கொள்கை
சுதந்திரம் மற்றும் உண்மையான தேசிய நலன்களில் கவனம் செலுத்துகிறது. இதனால் இரு நாடுகள் மத்தியிலான வர்த்தகத்தில் எவ்விதமான தங்கு தடையும் இருக்காது எனச் செர்ஜி லாவ்ரோவ் தெரிவித்துள்ளார்.
ரூபாய் - ரூபிள் நாணய பரிமாற்றம்
ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் மற்றும் இந்திய வெளியுறவு அமைச்சரான ஜெய்சங்கர் ஆகியோரின் இந்த முக்கியச் சந்திப்பின் மூலம் இந்தியா ரூபாய் - ரூபிள் நாணய பரிமாற்றத்தை ஏற்றுக்கொண்டு கச்சா எண்ணெய்-ஐ வாங்க ஒப்புக்கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பிரதமர் மோடி
மேலும் ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் பிரதமர் மோடியை சந்திக்க உள்ளது. மேலும் செர்ஜி லாவ்ரோவ் இரண்டு நாள் சீன பயணத்தை முடித்துக்கொண்டு இந்தியா வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் இந்திய பணத்தின் மூலம் இரு நாடுகளின் வர்த்தகம் பெரிய அளவில் மேம்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
More From GoodReturns

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?



Click it and Unblock the Notifications