இந்தியா அனைத்து துறைகளிலும் தற்போது முன்னேறி வருகிறது என்பதும் நாட்டின் வளர்ச்சி ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்துக் கொண்டே வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
அந்த வகையில் இந்தியா தற்போது எஃகு உற்பத்தியில் உலகின் 2-வது இடத்தில் இருக்கும் நிலையில் மிக விரைவில் முதலிடத்தை பிடித்து விடும் என மத்திய அமைச்சர் ஜோதிராதித்யா சிந்தியா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
தற்போது சீனா முதலிடத்தில் இருந்தாலும் இந்தியா முதல் இடத்தை அடைவதற்கு வெகு தூரம் இல்லை என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
எஃகு உற்பத்தி
தேசிய கனிம வளர்ச்சிக் கழகம் (என்எம்டிசி) மற்றும் இந்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை கூட்டமைப்பு (எஃப்ஐசிசிஐ) ஏற்பாடு செய்த இந்திய கனிமங்கள் மற்றும் உலோக தொழில் குறித்த மாநாட்டில் மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய எம்.சிந்தியா கலந்து கொண்டார். இந்த மாநாட்டில் அவர் பேசியபோது, 'தற்போது, இந்தியா உலகின் இரண்டாவது பெரிய கச்சா எஃகு உற்பத்தியாளராக உள்ளது என்றும், வரும் நாட்களில், உருக்கு உற்பத்தியில் இந்தியா முதலிடத்தில் இருக்கும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.
சீனா முதலிடம்
தற்போதைய நிலையில் கச்சா எஃகு உற்பத்தியில் சீனா முதலிடத்திலும் சீனாவுக்கு அடுத்தபடியாக இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது. இருப்பினும் வெகுவிரைவில் சீனாவை பின்னுக்கு தள்ளிவிட்டு இந்தியா எஃகு உற்பத்தியில் முதலிடத்தை பிடிக்கும் என்ற நம்பிக்கை தனக்கு இருப்பதாக அமைச்சர் கூறினார்.
ஏற்றுமதி
எஃகுக்கு நிகர இறக்குமதி செய்யும் நாடாக இருந்து இந்தியா உருக்கு ஏற்றுமதி செய்யும் நாடாக மாறியுள்ளது என்று கூறிய அமைச்சர் 2013-14 ஆம் ஆண்டில் இந்தியாவின் தனிநபர் எஃகு நுகர்வு 57.8 கிலோவிலிருந்து 78 கிலோவாக அதிகரித்துள்ளது என்றும் அவர் கூறினார்.
300 மில்லியன் டன் இலக்கு
வரும் 2030ஆம் ஆண்டுக்குள் 300 மில்லியன் டன் எஃகு உற்பத்தி இலக்கை அடைய அரசாங்கம் உத்தேசித்துள்ளது என்று கூறிய அமைச்சர் ஜோதிராதித்ய எம்.சிந்தியா உலகெங்கிலும் உள்ள துறைகளில் எஃகு முதன்மையான துறை என்றும், இது பொருளாதாரம், மூலதனம் மற்றும் உள்கட்டமைப்பு வளர்ச்சியில் பெரும் பங்கு வகிக்கின்றது என்றும் தெரிவித்தார்.
கொள்கை வகுப்பதில் கவனம்
இந்தியாவை ஒரு எஃகு உற்பத்தி சக்தியாக மாற்ற வேண்டும் என்பதே அரசின் இலக்கு என்றும், அதற்கான கொள்கை வகுப்பதில் அரசு கவனம் செலுத்தி வருகிறது என்றும், எஃகு துறையில் இந்தியா ஒரு அசைக்க முடியாத சக்தியாக விரைவில் மாறும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
More From GoodReturns

சிலிண்டர் பிரச்சனைக்கு தீர்வு: அமெரிக்காவிலிருந்து இந்தியா வந்தடைந்தது மிகப்பெரிய எல்பிஜி கப்பல்!!

ஜியோ ஹாட் ஸ்டாரின் தலைமை அதிகாரியை தேடி வந்து பதவி கொடுத்த ஓபன் ஏஐ நிறுவனம்!!

ஈரான் போரை முடிவுக்கு கொண்டு வருவாரா பிரதமர் மோடி? ரம்ஜான் நாளில் தொடங்கிய முக்கிய பேச்சுவார்த்தை..!!

ரேஷன் அட்டை வைத்திருப்பவர்களுக்கு முக்கிய அப்டேட்.. 3 மாதத்திற்கான பொருள் ஒரே நேரத்தில்.. மத்திய அரசின் முடிவு

1986-ல் ஒரு புல்லட் இவ்வளவு தானா? வைரலாகும் பழைய பில்! அப்பவே கெத்து தான்!

ஆனந்த் ஸ்ரீனிவாசன்: படிச்சு படிச்சு சொன்னேன்.. யாரும் கேட்ல 'Big Drop'.. வெள்ளி அதோ கதி..!!

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!



Click it and Unblock the Notifications