இந்தியாவில் பால் மற்றும் பால் பொருட்களுக்கு பற்றாக்குறை ஏற்படலாம் என்று பல அறிக்கைகள் வெளிவரும் வேளையில், இந்த தட்டுப்பாட்டை சரி செய்ய வெளிநாட்டில் இருந்து பால் பொருட்கள் இறக்குமதி செய்யப்படலாம் என்று இதற்கான சந்தை நிலவரத்தை ஆய்வு செய்து வருவதாக சில நாட்கள் முன்பு மத்திய அமைச்சர் தெரிவித்திருந்தார்.
இந்த அறிவிப்பு வெளியான நாளில் இருந்து கால்நடை வளர்ப்பவர்கள், விவசாயிகள், அரசியல் தலைவர்கள் என பல தரப்பினர் வெளிநாட்டில் இருந்து பால் மற்றும் பால் பொருட்களை இறக்குமதிக்கு கடுமையான எதிர்ப்பை தெரிவித்தனர். இதேவேளையில் தான் குஜராத் அமுல் நிறுவனம் பெங்களூரில் பால், தயிர்-ஐ ஆன்லைன் மூலம் விற்பனை செய்வதாக அறிவித்தது பெரும் பிரச்சனையாக மாறியது.

இந்த நிலையில் இந்தியாவில் பால் மற்றும் பால் பொருட்கள் எதுவும் இறக்குமதி செய்யப்படாது என்று பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு வெள்ளிக்கிழமை விளக்கம் கொடுத்துள்ளது விளக்கம் கொடுத்துள்ளது. இந்தியாவில் கடைசியாக பால் பொருட்களை இறக்குமதி செய்தது 2011 ஆம் ஆண்டில்.
இந்தியாவில் வெண்ணெய் மற்றும் பிற பால் பொருட்களை இறக்குமதி செய்யப்பட மாட்டாது, மேலும் பற்றாக்குறையை தீர்க்க இதுவரையில் பயன்படுத்தப்படாத உள்நாட்டு சந்தைகளின் உதவியுடன் விநியோகங்கள் மேம்படுத்தப்படும் என்று மத்திய மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால் வளத்துறை அமைச்சர் பர்ஷோத்தம் ரூபாலா வெள்ளிக்கிழமை விளக்கம் கொடுத்துள்ளார்.
பால் பொருட்கள், குறிப்பாக வெண்ணெய் மற்றும் நெய் போன்றவற்றின் கையிருப்பு முந்தைய ஆண்டைக் காட்டிலும் குறைவாக இருப்பதாக மத்திய மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால் வளத்துறை அமைச்சக அதிகாரி கடந்த வாரம் கூறினார். இது இந்தியா முழுவதும் பெரும் பெரும் பிரச்சனையாக வெடித்தது, இந்த நிலையில் கிட்டத்தட்ட ஒரு வாரத்திற்குப் மத்திய மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால் வளத்துறை அமைச்சகம் அறிக்கை மூலம் தெளிவுப்படுத்தியுள்ளது.

மத்திய கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத் துறை செயலர் ராஜேஷ் குமார் சிங் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில் 2022-23 ஆம் நிதியாண்டில் இந்தியாவின் பால் உற்பத்தி மந்தமாகவே உள்ளது. இதற்கு முக்கியமான காரணம் மாடுகளுக்கு வந்த தோல் நோய், இந்த நோய் காரணமாக பால் உற்பத்தி பாதிக்கப்பட்டு உள்ளது என தெரிவித்தார்.
More From GoodReturns

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!



Click it and Unblock the Notifications