ஐசிசி சாம்பியன்ஸ் டிராஃபி 2025ஆம் ஆண்டிற்கான இறுதி போட்டி நேற்று துபாயில் நடைபெற்றது. இதில் இந்திய அணியும், நியூசிலாந்து அணியும் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் முதலில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இதனையடுத்து களமிறங்கிய நியூசிலாந்து அணி 50 ஓவர்கள் முடிவில் 251 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்தது. 252 ரன்கள் டார்கெட்டுடன் அதனை தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணியில் துவக்க ஆட்டக்காரர்களாக கேப்டன் ரோகித் ஷர்மா மற்றும் சுப்மன் கில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.
முதல் விக்கெட்டுக்கு 105 ரன்களை எடுத்து கில் அவுட் ஆனார். அதனை தொடர்ந்து அதிரடியாக விளையாடிய ரோகித் 76 ரன்களில் அவுட் ஆனார். இதனை தொடர்ந்து மற்ற வீரர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். குறிப்பாக, ஸ்ரேயாஸ் ஐயர் 48 ரன்களும், கே.எல். ராகுல் 34 ரன்களும் குவித்து அணியின் வெற்றிக்கு முக்கிய அங்கம் வகித்தார்கள். இந்த தொடரில் இந்திய அணி ஒரு போட்டியில் கூட தோல்வியைச் சந்திக்காமல் கோப்பையை வென்றுள்ளது. கடந்த ஆண்டு இதேபோல், இந்திய அணி டி20 உலகக் கோப்பையை வென்றது. அதேபோல், ஒருநாள் உலகக் கோப்பையின் இறுதிப் போட்டி வரை சென்று ஆஸ்திரேலியாவிடம் உலகக்கோப்பையை இழந்தது.

இந்தியா வெற்றி பெற்றது. இதனையடுத்து ஐசிசி தொடர்களில் 7 முறையாகவும், சாம்பியன்ஸ் டிராஃபி 3-வது முறையாகவும் டைட்டில் வின்னர் ஆனது. இதனையடுத்து இந்திய அணிக்கு 19.5 கோடி பரிசுத் தொகை வழங்கப்பட்டது. நியூசிலாந்து அணிக்கு 9.75 கோடி பரிசு வழங்கப்பட்டது. இதனையடுத்து வெற்றி பெற்ற இந்திய அணிக்கு ரசிகர்கள் தொடங்கி பிரபலங்கள் வரை வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.
இந்த நிலையில், சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பங்கேற்ற வீரர்களின் சொத்துமதிப்பு என்ன என்பது குறித்து அப்டேட் கிடைத்துள்ளது. அதன்படி கேப்டன் ரோகித் ஷர்மாவில் தொடங்கி குல்தீப் யாதவ் வரை 15 வீரர்கள் எவ்வளவு சொத்துக்களை வைத்துள்ளனர் என்பதை பார்க்கலாம்.
கேப்டன் ரோகித் ஷர்மா சொத்துமதிப்பு, ரூ. 214 கோடி
விராட் கோலி சொத்துமதிப்பு ரூ. 1050 கோடி
சும்பன் கில் ரூ. 34 கோடி
யஷஸ்வி ஜெய்ஸ்வால் ரூ. 16 கோடி
அர்ச்தீப் சிங் ரூ. 10 கோடி
ஷ்ரேயாஸ் ஐயர் ரூ. 58 கோடி
ஜாஸ்பிரித் பும்ரா ரூ.60 கோடி
அக்சர் படேல் ரூ. 49 கோடி
கே.எல். ராகுல் ரூ. 101 கோடி
முகமது ஷமி ரூ.47 கோடி
ரிஷப் பண்ட் ரூ.100 கோடி
ஹர்திக் பண்டியா ரூ. 91 கோடி
ரவீந்திர ஜடேஜா ரூ.120 கோடி
வாசிங்டன் சுந்தர் ரூ.32 கோடி
குல்தீப் யாதவ் ரூ.32 கோடி
இதில் விராட் கோலி சொத்து மதிப்பு ரூ.1050 கோடியுடனும், கேப்டன் ரோகித் ஷர்மா ரூ.214 கோடியுடனும் அதிகபட்சமாக உள்ளனர்.
More From GoodReturns

ஈரான் போர்: பல ஆயிரம் கோடிகளை இழந்த இந்திய விமான நிறுவனங்கள்!! நிலைமை இன்னும் மோசமடையுமா?

100 டாலரை தொட்ட கச்சா எண்ணெய்.. ஓரே நாளில் 25% விலை உயர்வு.. தீவிரம் அடையும் ஈரான் போர்..!!

ஈரான் போர் நீடிப்பதால் மனம் மாறிய அமெரிக்கா!! திடீரென இந்தியாவுக்கு சலுகை!!

மேற்கு ஆசிய போர் நெருக்கடி: இந்திய அரிசி, எரிசக்தி, ரத்தினங்கள் என 15 துறைகளுக்கு எச்சரிக்கை?

ஈரான் போரை விடுங்க.. இந்திய -அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் என்ன ஆச்சு? அமெரிக்க அரசு பதில்

இந்திய ஐடி பங்குகளை கைக்கழுவும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்!! எல்லாம் ஏஐ செய்யும் வேலை!!

பங்குச்சந்தை சரிவிலும் ஏற்றம் கண்ட ரயில்வே துறை பங்குகள்: இப்போது முதலீடு செய்யலாமா?

ஈரான் தாக்குதல்: இந்தியர்களுக்கு பாதுகாப்பான இடம் தர மறுத்ததா இஸ்ரேல்? வைரலாகும் புகைப்படம்

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!



Click it and Unblock the Notifications