சாப்ட்வேர் இன்ஜினியர், ஏஐ இன்ஜினியர் என யாராக இருந்தாலும் சரி இன்றைய தேதிக்கு வேலை நிரந்தரமில்லை என்பதை நிரூபிக்கும் வகையில் தினமும் ஏதேவது ஒரு சம்பவம் நடந்து வருகிறது. அப்படி வாயை கட்டி வயித்தை கட்டி பெரும் கனவுடன் வாழ்க்கை மாறப்போகிறது என நினைத்து அமெரிக்கா போனா ஒரு இந்திய ஏஐ இன்ஜினியரின் புலம்பல் ஒட்டுமொத்த டெக் ஊழியர்களையும் பெரும் சோகத்தில் ஆழ்த்கியுள்ளது.
ரெட்டிட் தளத்தில் ஐடி ஊழியர்கள் குறிப்பாக இளம் ஐடி ஊழியர்கள் அதிகளவில் தங்களுடைய அனுபவத்தை பகிரிந்து வருகின்றனர். இதில் ஒரு பதிவில் மேல்படிப்புக்காக அமெரிக்கா சென்ற இவர் படிப்பு + வேலை என மொத்தம் 6 வருடம் அமெரிக்காவில் இருந்துள்ளார், படிப்பை முடித்த உடன் ஒரு பார்சூன் 500 நிறுவனத்தில் ஏஐ இன்ஜினியராக பணியாற்றி வந்துள்ளார்.

இந்த நிலையில் திடீரென பணிநீக்கம் செய்யப்பட்ட காரணத்தால் 60 நாட்களில் இந்திய வர வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டு உள்ளார்.
இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் இவர் பணியாற்றி ப்ராஜெக்ட் மொத்தமாக இந்தியாவுக்கு மாற்றப்பட்ட காரணத்தாலேயே இவர் அமெரிக்காவில் பணிநீக்கம் செய்யப்பட்டு உள்ளாராம்.
அதாவது இந்தியாவை விட்டு அமெரிக்கா சென்று படித்து பட்டம் பெற்று அமெரிக்க நிறுவனத்தில் வேலை பார்த்து வந்த இவருக்கு, தனது பணியை செலவின குறைப்பிற்காக இந்தியாவுக்கு மாற்றப்பட்டு காரணத்தால் வேலையை இழந்துள்ளார்.
அமெரிக்காவில் விசா இருந்தாலும் வேலை இல்லாமல் 60 நாட்களுக்கு மேல் இருக்க முடியாது என்பதால் இந்த நபர் பல முயற்சிகள் செய்தும் புதிய வேலையை பெற முடியவில்லை என தெரிவித்துள்ளார். இதனால் இந்தியாவுக்கு திரும்பி இந்தியாவில் தனக்கான வேலையை தேட திட்டமிட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
ஆனால் இதேவேளையில் அமெரிக்காவிலேயே தொர்ந்து தங்குவதற்காக phd படிக்கலாமா அல்லது 2வது மாஸ்டர் டிகிரி பெறலாமா என்பதற்கு அறிவுரையும் கேட்டுள்ளார்.
உண்மையில் அமெரிக்காவிலும் சரி இந்தியாவிலும் சரி வேலைவாய்ப்பு மிகவும் குறைவாக உள்ளது. அதிலும் குறிப்பாக அனுபவம் வாய்ந்த நபர்கள் நல்ல சம்பளத்துடன் புதிய வேலைக்கு மாறுவது என்பது எட்டாக கணியாக மாறியுள்ளது. இதனால் அமெரிக்காவில் பட்டம் பெற்ற பலர் வேலைவாய்ப்பை தேடுவது என்பது எட்டாக்கனியாக மாறியுள்ளது.


Click it and Unblock the Notifications

