சிவில் ஏபியேஷன் அமைச்சகம் சமீபத்தில் ஹேண்ட் பேக்குகளை எடுத்துச் செல்வதற்கான முக்கிய விதிகளை வகுத்துள்ளது. இதனால் விமானங்களில் பயணிக்கும் பயணிகள் சில விதிகளைப் பின்பற்ற வேண்டும். இந்த விதிகள் சர்வதேச விமானங்கள் மற்றும் உள்நாட்டு விமானங்களுக்கும் பொருந்தும் என்று கூறப்படுகிறது. சுமுகமான பயணத்திற்கு நடைமுறைப்படுத்தப்பட்ட விதிகள் குறித்து தெரிந்து வைத்திருக்க வேண்டும்.
திருத்தப்பட்ட விதிகள் என்னென்ன?: விமானத்தில் பயணிக்கும் பயணிகள் ஏறுவதற்கு முன்பு ஏதேனும் கூடுதல் பொருட்கள் இருக்கிறதா என்பதை சரி பார்க்க வேண்டும். எக்கனாமி அல்லது பிரிமியம் கிளாஸில் பயணிக்கும் பயணிகள் அதிகபட்சமாக 7 கிலோ எடையுள்ள ஹேண்ட் பேக்குகளை எடுத்துச் சொல்லலாம். ஏர் இந்தியாவின் அறிக்கையின் படி பிசினஸ் கிளாஸில் பயணிக்கும் பயணிகள் அதிகபட்சமாக 10 கிலோ வரை எடுத்துச் செல்லலாம்.

புதிய விதிகளின் படி ஒரு ஹேண்ட்பேக்கின் நீளம் அகலம் ஆகியவற்றையும் சரிபார்க்க வேண்டும். ஹேண்ட் பேக்கின் உயரம் 15.7 அங்குலம் நீளம் மற்றும் 7.8 அங்குலம் அகலம் இருக்கலாம்.
விலக்குகள்: 2024-ஆம் ஆண்டின் மே 4-ஆம் தேதிக்கு முன் விமான டிக்கெட் முன்பதிவு செய்த பயணிகளுக்கு இந்த ஹேண்ட்பேக் வழிகாட்டுதல்கள் பொருந்தாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற பயணிகளுக்கு இந்த புதிய வழிகாட்டுதல்களில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. எகனாமி கிலாஸில் 8 கிலோவும், பிரீமியம் எக்கானமி கிளாஸில் 10 கிலோவும், ஃபர்ஸ்ட் அல்லது பிசினஸ் கிளாஸில் 12 கிலோவும் எடுத்துச் செல்லலாம்.
கடந்த சில மாதங்களில் விமான பயணிகளின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து வருகிறது. 2024 ஆம் ஆண்டின் நவம்பர் மாதம் இந்திய விமானங்கள் உள்நாட்டு வழித்தடங்களில் ஏறக்குறைய 1.42 கோடி பயணிகளை ஏற்றிச் சென்றுள்ளன. இது 2023-ஆம் ஆண்டின் இதே காலக்கோட்டத்தோடு ஒப்பிடுகையில் சுமார் 12 சதவீத அதிகரிப்பாகும்.
சிவில் விமான போக்குவரத்து அமைச்சகத்தின் சமீபத்திய தரவுகளின்படி 2024-ஆம் ஆண்டின் ஜனவரி முதல் நவம்பர் வரையிலான மாதங்களில் உள்நாட்டு விமான பயணிகளின் எண்ணிக்கை 1,464.02 லட்சமாக இருந்தது. இந்த எண்ணிக்கை 2023-ஆம் ஆண்டின் ஜனவரி முதல் நவம்பர் வரையிலான மாதங்களில் 1,382.34 லட்சமாக இருந்தது. இது சுமார் 5.91 சதவீத அதிகரிப்பாகும். சுமூகமான பயணத்தை உறுதி செய்வதற்கு பயணிகள் இது போன்ற புதிய விதிகள் குறித்து தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டும்.
More From GoodReturns

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!



Click it and Unblock the Notifications