2020ல் பட்டையைக் கிளப்பி வந்த பிட்காயின், 2021ல் பல்வேறு காரணங்களுக்காக அதிகளவிலான வர்த்தகப் பாதிப்புகளை எதிர்கொண்டு 40000 டாலரில் இருந்து 3000 டாலருக்குச் சரிந்தது.
ஆனால் பிப்ரவரி மாத துவக்கம் முதல் ஏறுமுகத்திலிருந்த பிட்காயின் மீது எலான் மஸ்க் தலைமை வகிக்கும் உலகின் மிகப்பெரிய எலக்ட்ரிக் கார் தயாரிப்பு நிறுவனமான டெஸ்லா பிட்காயின் மீது சுமார் 1.5 பில்லியன் டாலர் அளவிலான முதலீட்டைச் செய்துள்ளது.
இந்த அறிவிப்பு வெளியான அடுத்த 24 மணிநேரத்தில் இந்திய கிரிப்டோகரன்சி எக்ஸ்சேஞ்ச் மற்றும் டிரேடிங் தளத்தில் முதலீட்டுக்கான கோரிக்கைக்கான எண்ணிக்கை 4 மடங்கு அதிகரித்துள்ளது. டெஸ்லா-வின் பிட்காயின் மீதான முதலீடு இந்திய முதலீட்டாளர்களுக்குப் புதிய நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது என்று தான் சொல்ல வேண்டும்.
WazirX தளம்
பிட்காயின் மற்றும் கிரிப்டோகரன்சி எக்ஸ்சேஞ்ச் தளமான WazirX தளத்தில் டெஸ்லா அறிவிப்பு வெளியான அடுத்த சில 24 மணிநேரத்தில் முதலீட்டாளர்கள் தங்களது வர்த்தகக் கணக்கில் டெப்பாசிட் செய்வதற்காக request அளவீடுகள் 300 சதவீதம் அதிகரித்தது என இத்தளத்தின் நிறுவனர் நிஷ்சால் ஷெட்டி தெரிவித்தார்.
காயின்ஸ்விச் கூபர்
இதேபோல் பெங்களூரைத் தலைமையிடமாகக் கொண்டு இருக்கும் காயின்ஸ்விச் கூபர் தளத்தில் டெப்பாசிட் செய்வதற்கான கோரிக்கைகள் எண்ணிக்கை கிட்டத்தட்ட 200 சதவீதம் அதிகரித்துள்ளது என இந்நிறுவனத் தலைவர் சரன் நாயர் தெரிவித்துள்ளார்.
கிரிப்டோகரன்சி தளம்
இத்தளங்களில் இருக்கும் கிரிப்டோகரன்சி முதலீட்டாளர்கள் திடீரென அதிக எண்ணிக்கை டெபாசிட் செய்யக் கோரிக்கைகள் வைக்கத் துவங்கியதால் பரிமாற்றங்கள் முழுமை அடைய காலத் தாமதம் ஆனது குறிப்பிடத்தக்கது. இந்தியச் சந்தையில் இருக்கும் கிரிப்டோகரன்சி வர்த்தகச் சந்தையில் அதிகளவிலான முதலீட்டாளர்கள் இல்லாத காரணத்தால் திடீரென முதலீட்டாளர்கள் வந்த காரணத்தால் இத்தளத்தில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
மசோதா
இந்தியாவில் கிரிப்டோகரன்சி வர்த்தகம் மற்றும் அதன் வர்த்தகத்தை முறைப்படுத்த மத்திய அரசு புதிய மசோதா கொண்டுவரத் திட்டமிட்டு வருகிறது. இதேவேளையில் ரிசர்வ் வங்கி ரூபாய் மதிப்பில் புதிய கிரிப்டோகரன்சியை உருவாக்க ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறது.
More From GoodReturns

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

தங்கம் - வெள்ளி: ஆனந்த் ஸ்ரீனிவாசன் வார்னிங்.. பேண்ட் சட்டை எல்லாம் ஊறிவிடுவாங்க..!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

மதுரை மக்களுக்கு மோடி அரசு கொடுத்த பரிசு!! இனி நினைச்ச நேரத்துக்கு எல்லாம் வெளிநாட்டுக்கு பறக்கலாம்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

மீண்டும் Work From Home.. கொரோனாவை விட மோசமானது இந்த ஈரான் போர்..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?



Click it and Unblock the Notifications