2025-ஆம் ஆண்டில்.. இந்தியாவில் ஊதிய உயர்வு மற்றும் வேலை வாய்ப்பு அதிகரிப்பு ஆகியவை இருக்கும் என மெர்சர் வெளியிட்ட தரவுகள் தெரிவிக்கின்றன. திறமையான தொழிலாளர்களுக்கான தேவை தொடர்ந்து அதிகரித்து வருவதால் திறமையான ஊழியர்களுக்கான ஊதியம் 9.4 சதவீதம் வரை உயரும் என கணிக்கப்பட்டுள்ளது. இதில் 37 சதவீத நிறுவனங்கள் தங்களுடைய ஊழியர் எண்ணிக்கையை இன்னும் அதிகரிக்க திட்டமிட்டு வருவதாகவும் மெர்சர் அறிக்கை தெரிவித்துள்ளது.
இந்த கருத்து கணிப்பை நடத்தி முடிவுகளை வெளியிட மெர்சர், 1550-க்கும் மேற்பட்ட நிறுவனங்களிடமிருந்து கருத்துக்களை பெற்றுள்ளது. இதன் மூலம் தான், இந்த ஆண்டு ஊழியர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க பல்வேறு நிறுவனங்கள் திட்டமிட்டதும் கண்டறியப்பட்டது. மெர்சர் வெளியிட்ட கணக்கெடுப்பின்படி கடந்த 5 ஆண்டுகளில் சம்பள உயர்வுகள் சீராக இருந்ததையும் தெரிந்து கொள்ள முடிகிறது. 2020-ஆம் ஆண்டில் 8 சதவீதமாக இருந்த ஊதிய உயர்வு.. 2025-ஆம் ஆண்டில் 9.4 சதவீதமாக அதிகரிக்கும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.

இந்த ஊதிய உயர்வுக்கு ஆட்டோமேட்டிவ் துறை பெரும் பங்களிக்கவுள்ளது. இந்த ஆண்டு ஆட்டோமேட்டிவ் துறையில் 10 சதவீத ஊதிய உயர்வு எதிர்பார்க்கப்படுகிறது. இதைத் தொடர்ந்து உற்பத்தி மற்றும் பொறியியல் பிரிவுகளில் 8 சதவீதத்திலிருந்து 9.7 சதவீதம் வரை ஊதிய உயர்வு இருக்கும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. அதேபோல 2025-ஆம் ஆண்டில் 37 சதவீத நிறுவனங்கள் தங்கள் பணியாளர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க திட்டமிட்டுள்ளதாகவும் கணக்கெடுப்பில் கண்டறியப்பட்டுள்ளது.
மேக் இன் இந்தியா முயற்சி பல்வேறு துறைகளுக்கும் மிகப்பெரிய உத்வேகத்தை வழங்கியுள்ளது. இந்தியாவில் பல்வேறு துறைகளைச் சேர்ந்த நிறுவனங்கள் பங்கேற்ற இந்த கணக்கெடுப்பில், திறமையான தொழிலாளர்களுக்கான வளர்ச்சி மற்றும் புதிய தொழில்நுட்பங்களின் வருகை ஆகியவற்றை பற்றிய முக்கிய தகவல்களும் வெளியானது. அதோடு சமீபத்திய ஆண்டுகளில் இந்தியா பெருவாரியாக டிஜிட்டல் மாற்றத்திற்கு உட்பட்டதும் தெரியவந்துள்ளது.
ஏற்கனவே பல்வேறு அறிக்கைகளில் 2025 ஆம் ஆண்டு வேலை வாய்ப்புகள் அதிகரிக்கும் என்ற செய்தி வெளியாகியுள்ளது. அதோடு தற்போது வெளியாகியிருக்கும் அறிக்கையிலும் இதே போன்ற தகவல் வந்துள்ளது. சமீபத்தில் டிசிஎஸ் நிறுவனம் 2025-ஆம் நிதியாண்டில் 40,000 ஆயிரம் பணியாளர்களை ட்ரைனி ரோல்களுக்கு பணியமர்த்த இருப்பதாக தெரிவித்தது. இந்த ஆண்டு வேலை சந்தையில் பல்வேறு மாற்றங்கள் நிகழும் என்ற எதிர்பார்ப்பு நிலவு வருகிறது. இது போன்ற விஷயங்கள் எந்த அளவுக்கு வேலை தேடுபவர்களுக்கு உதவியாக இருக்கப் போகிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
More From GoodReturns

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

ஈரான் போர்: பல ஆயிரம் கோடிகளை இழந்த இந்திய விமான நிறுவனங்கள்!! நிலைமை இன்னும் மோசமடையுமா?

8th Pay Commission: மத்திய அரசு ஊழியர்களுக்கு 5 முறை பதவி உயர்வு.. இதுக்கு மேல என்ன வேண்டும் சொல்லுங்க..!!

100 டாலரை தொட்ட கச்சா எண்ணெய்.. ஓரே நாளில் 25% விலை உயர்வு.. தீவிரம் அடையும் ஈரான் போர்..!!

மேற்கு ஆசிய போர் நெருக்கடி: இந்திய அரிசி, எரிசக்தி, ரத்தினங்கள் என 15 துறைகளுக்கு எச்சரிக்கை?

இந்தியாவுக்காக நாங்க இருக்கோம்.. கைகொடுக்கும் ரஷ்யா.. ஈரான் பிரச்சனையில் வந்த தீர்வு..!!

ஈரான் போரை விடுங்க.. இந்திய -அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் என்ன ஆச்சு? அமெரிக்க அரசு பதில்

இந்திய ஐடி பங்குகளை கைக்கழுவும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்!! எல்லாம் ஏஐ செய்யும் வேலை!!

பங்குச்சந்தை சரிவிலும் ஏற்றம் கண்ட ரயில்வே துறை பங்குகள்: இப்போது முதலீடு செய்யலாமா?

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!



Click it and Unblock the Notifications