தங்கம், வெள்ளியை அடுத்து மூன்றாவது உலோகமாக மக்கள் விரும்பி வாங்குவது வைரம் தான்.
பெரும்பாலும் பணக்காரர்கள் மட்டுமே வைரங்களை வாங்குவார்கள் என்று கூறப்படும் நிலையில் தற்போது நடுத்தர வர்க்கத்தினரின் பார்வையும் வைரத்தின் மீது விழுந்துள்ளது.
இந்த நிலையில் உலக சந்தையில் இந்தியாவுக்கு 3வது இடம் கிடைத்துள்ளது என தி நேச்சுரல் டயமண்ட் கவுன்சிலின் தலைவர் தெரிவித்துள்ளார். இது இந்தியாவிற்கு ஒரு பெருமையானதாக கருதப்படுகிறது.
தி நேச்சுரல் டயமண்ட் கவுன்சில்
கொரோனா வைரஸ் பாதிப்பின் போது உலக அளவில் வைர சந்தை மிகவும் மோசமாக இருந்த நிலையில் தற்போது படிப்படியாக மீண்டு வருவதால் வைர வியாபாரத்தின் வளர்ச்சி அதிகரித்து வருவதாக தி நேச்சுரல் டயமண்ட் கவுன்சில் தலைமை நிர்வாகி டேவிட் கெல்லி அவர்கள் சமீபத்தில் அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.
தங்கம் - வெள்ளி - வைரம்
உலக அளவில் உள்ள பெண்கள் ஆடம்பரமான பொருட்கள் மற்றும் ஐபோன்களை மட்டுமே வாங்கிக் கொண்டிருந்த நிலையில் தற்போது தங்கம், வெள்ளி, வைரம் போன்ற மதிப்புமிக்க உலோகங்களையும் வாங்க ஆரம்பித்து உள்ளார்கள் என்பது ஆரோக்கியமான வளர்ச்சி என்று அவர் மேலும் அந்த பேட்டியில் கூறியுள்ளார்.
வைர ஷோரூம்கள்
உலக அளவில் தற்போது வைரத்தின் தேவை அதிகரித்துள்ளது என்றும் இதனால் வைர வியாபாரம் எதிர்பார்ப்பையும் தாண்டி நல்ல நிலையில் உள்ளது என்றும் அவர் மேலும் தெரிவித்தார். தற்போது ஷோரூம்கள் தங்கம், வெள்ளி மட்டுமின்றி வைரத்திற்கு என தனிப்பிரிவுகள் பல கடைகளில் ஆரம்பித்துள்ளது வைர வியாபார துறையில் ஒரு நல்ல வளர்ச்சி என டேவிட் கெல்லி தெரிவித்தார்.
ஆன்லைனில் வைரம்
மேலும் ஷோரூம்களில் மட்டுமின்றி ஆன்லைனிலும் வைர வியாபாரமும் செய்யப்படுவதாகவும் இது வைர வியாபாரத் துறையில் ஒரு குறிப்பிடத்தக்க வளர்ச்சி என்றும் வைர வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
அமெரிக்கா - சீனா
உலக அளவில் வைர வியாபாரத்தில் நம்பர் ஒன் இடத்தில் அமெரிக்கா தான் உள்ளது. அந்நாடு உலக வைர சந்தையில் சுமார் 50% வைரத்தை விற்பனை செய்து வருகிறது. அமெரிக்காவை அடுத்து வைரச்சந்தையில் சீனா உள்ளது. அந்நாடு உலக அளவில் 16 முதல் 17 சதவீதம் வரை விற்பனை செய்து வருகிறது.
இந்தியாவின் வைரச்சந்தை
அமெரிக்கா, சீனாவை அடுத்து உலக வைரசந்தையில் இந்தியா 3வது இடத்தை பிடித்துள்ளது. தற்போது 5 முதல் 6 சதவீதம் வைரங்களை இந்தியா விற்பனை செய்து வந்தாலும் வருங்காலத்தில் இன்னும் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக இந்திய வைர வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
இளம்பெண்கள்
இன்றைய காலத்தில் கிட்டத்தட்ட 20 சதவீதம் இளம் பெண்கள் வைர நகை வாங்குவதில் மிகுந்த ஆர்வம் காட்டுகிறார்கள் என்று கூறும் இந்திய வைர வியாபாரிகள், தங்கம் நமது பாரம்பரியமான மற்றும் சேமிப்பு உலோகமாக இருந்தாலும் இளம் பெண்கள் தற்போது வைரத்தை வாங்குவதில் ஆர்வம் காட்டுகிறார்கள் என்றும் வாங்கிய வைரத்தை அவர்களின் இன்ஸ்டாகிராமில் பதிவு செய்வதால் வைரத்தை வாங்க வேண்டும் என்ற இளம் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும் கூறப்பட்டு வருகிறது.
ஆய்வக வைரம்
மண்ணில் வெட்டி வெட்டி எடுக்கும் வைரங்கள் தவிர ஆய்வகத்தில் செய்யப்படும் வைரங்களுக்கும் உலக அளவில் ஒரு தனி இடம் கிடைத்து வருகிறது என்றும் இது வைர வியாபார சந்தையில் ஒரு மிகச்சிறந்த அம்சமாகவே பார்க்கப்படுகிறது என்றும் வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
More From GoodReturns

ஈரான் போர்: பல ஆயிரம் கோடிகளை இழந்த இந்திய விமான நிறுவனங்கள்!! நிலைமை இன்னும் மோசமடையுமா?

100 டாலரை தொட்ட கச்சா எண்ணெய்.. ஓரே நாளில் 25% விலை உயர்வு.. தீவிரம் அடையும் ஈரான் போர்..!!

மேற்கு ஆசிய போர் நெருக்கடி: இந்திய அரிசி, எரிசக்தி, ரத்தினங்கள் என 15 துறைகளுக்கு எச்சரிக்கை?

இந்தியாவுக்காக நாங்க இருக்கோம்.. கைகொடுக்கும் ரஷ்யா.. ஈரான் பிரச்சனையில் வந்த தீர்வு..!!

ஈரான் போரை விடுங்க.. இந்திய -அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் என்ன ஆச்சு? அமெரிக்க அரசு பதில்

இந்திய ஐடி பங்குகளை கைக்கழுவும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்!! எல்லாம் ஏஐ செய்யும் வேலை!!

பங்குச்சந்தை சரிவிலும் ஏற்றம் கண்ட ரயில்வே துறை பங்குகள்: இப்போது முதலீடு செய்யலாமா?

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!



Click it and Unblock the Notifications