கொரோனா தொற்று இந்தியாவில் துவங்கிய நாள் முதல் பெரும்பாலான நிறுவனங்கள் வர்த்தகம் பாதிக்கக் கூடாது என்பதற்காக ஊழியர்களுக்கு வீட்டில் இருந்தே பணியாற்ற அனுமதி கொடுக்கப்பட்டது. முதலில் 3 மாதம் மட்டுமே வீட்டில் இருந்து பணியாற்ற வேண்டிய நிலை இருக்கும் என அனைவரும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது 2020 முழுவதும் ஊழியர்கள் வீட்டில் இருந்து தான் பணியாற்ற வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
நாட்டில் மொத்த ஊழியர்களும் வீட்டில் இருந்து பணியாற்றும் நிலை வரலாற்றில் இதுதான் முறை என்பதால், பலருக்கும் பல விதமான அனுபவம்.
ஆனா இந்த Work From Homeஆல் ஊழியர்களுக்குச் சராசரியாக மாதம் 5,520 ரூபாய் அளவிலான பணம் சேமிக்கப்படுகிறது..!!
Work From Home
இந்திய ஊழியர்களுக்கு Work From Home அறிவிக்கப்பட்ட பின்பு சராசரியாக ஒரு ஊழியர் மாதம் 5,520 ரூபாயம், தினமும் பயணத்தின் மூலம் 1.47 மணிநேரம் சேமிக்கின்றனர் எனக் கோவொர்க்கிங் ஸ்பேஸ் நிறுவனமான Awfis செய்த ஆய்வுகள் கூறுகிறது.
ஊழியர்கள் மத்தியில் செய்யப்பட்ட ஆய்வின் மூலம் தகவல்களை ஒருங்கிணைத்து ஆய்வறிக்கையாக வெளியிட்டுள்ளது.
வசதி
இந்த ஆய்வில் ஈடுப்பட்ட 74 சதவீதம் பேர் வீட்டில் இருந்த பணியாற்றும் நிலையில் எங்கு வேண்டுமானாலும் இருந்து பணியாற்றும் வசதி உள்ளது அதாவது சொந்த ஊர், விடுதி இன்னும் பல வசதியான இடங்கள். இதேபோல் தினமும் அலுவலகத்திற்குச் செல்லும் செலவும், நேரமும் பெரிய அளவில் மிச்சமாகும் என ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.
அதிலும் பெங்களூர், மும்பை போன்ற பெரு நகரங்களில் தினசரி பயணத்திலேயே ஊழியர்கள் குறைந்தது 2 முதல் 4 மணிநேரம் செலவு செய்து வருகின்றனர்.
சேமிப்பு
மேலும் இந்த ஆய்வில் பங்கு கொண்ட 20 சதவீத ஊழியர்கள் மாதம் 5,000 முதல் 10,000 ரூபாய் வரையிலும், 19 சதவீதம் பேர் 10,000 ரூபாய்க்கும் அதிகமான தொகை சேமிப்பதாகத் தெரிவித்துள்ளனர்.
இதோடு 40 சதவீத ஊழியர்கள் தங்களது வீடு மற்றும் அலுவலகத்திற்குமான பயண நேரத்தைப் பெரிய அளவில் சேமிப்பதாகத் தெரிவித்துள்ளனர்.
44 நாள்
இந்த ஆய்வு குறித்து Awfis நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் சிஇஓ கூறுகையில், ஊழியர்கள் work from home செய்வதால் சேமிக்கப்படும் பயண நேரத்தைக் கணக்கிட்டால் 100 பேர் கொண்டு ஒரு அலுவலகத்திற்கு வருடத்திற்குக் கூடுதலாக 44 நாள் வேலைநாள் கிடைக்கும். இந்தக் கூடுதல் 44 நாட்களுக்கு வேலைநாட்களுக்கு நிறுவனம் எவ்விதமான பணமும் செலவு செய்யத் தேவையில்லை என்பதே கூடுதல் சிறப்பு.
7 நகரங்கள்
Awfis நிறுவனம் இந்த ஆய்வை நாட்டின் 7 பெரு நகரங்களில் சுமார் 2 மாதங்களுக்குத் தோராயமாக 1000 ஊழியர்கள் மத்தியில் ஆய்வு செய்துள்ளது.
மேலும் 75 சதவீதம் ஊழியர்கள் தங்களது பணியையும், வேலை நேரத்தையும் சிறப்பான முறையில்