இந்திய நிதியமைச்சகம், அரசு ஊழியர்களுக்கும், அரசு தொடர்பான பணிகளை செய்ய அரசு வழங்கிய கணினிகளில் செயற்கை நுண்ணறிவு (AI) டூல்ஸ் மற்றும் பயன்பாடுகளை பயன்படுத்துவதை தடை செய்து அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ஜனவரி 29, 2025 தேதியிட்ட அறிக்கையில், அரசு தரவுகளுக்கு ஏற்படக்கூடிய பாதுகாப்பு அச்சுறுத்தல்களிலிருந்து பாதுகாக்க இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய நிதியமைச்சகத்தின் இணைச் செயலாளர் பிரதீப் குமார் சிங் கையெழுத்திட்ட இந்த அறிக்கையில், அரசு கணினிகளில் AI சேவைகளை பயன்படுத்துவதால் ஏற்படக்கூடிய அபாயங்கள் குறிப்பிடப்பட்டுள்ளது. ChatGPT உள்ளிட்ட பல்வேறு AI சேவைகளை பயன்படுத்தும் போது ஒருவர் உள்ளீடும் கேள்விகளை வெளிநாட்டு சர்வர்களின் செயலாக்கப்பட்டு பதில்கள் கிடைக்கிறது. இதனால் அரசு தரவுகள் கசிவு மற்றும் பாதுகாப்பு பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளது.

இந்த அபாயங்களைத் தவிர்க்க, அரசு வழங்கிய கணினிகளில் AI கருவிகளை பயன்படுத்துவதை அனைத்து ஊழியர்களும் தவிர்க்க வேண்டும் என்று அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது. நிதிச் செயலாளர் கையெழுத்திட்ட இந்த அறிக்கை வருவாய், பொருளாதார விவகாரங்கள், செலவினங்கள், பொதுத்துறை நிறுவனங்கள், DIPAM மற்றும் நிதி சேவைகள் உள்ளிட்ட முக்கிய அரசு துறைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் மத்திய நிதியமைச்சகத்திற்குள் AI சேவைகளை பயன்படுத்துவதை தடை செய்யப்பட்டு உள்ளது. மேலும் AI தொழில்நுட்பங்களை பயன்படுத்துவதன் மூலம் ஏற்படக்கூடிய பாதுகாப்பு அச்சத்தை நிதியமைச்சகத்தின் நடவடிக்கை எடுத்துரைக்கிறது.
இந்திய அரசு மட்டும் அல்லாமல் உலகின் பல நாடுகளில் ஏஐ சேவைகளை அரசு கருவிகளில் பயன்படுத்தக்கூடாது என்ற உத்தரவு வெளியாகியுள்ளது. இதேபோல் பல பன்னாட்டு நிறுவனங்களும், ஆராய்ச்சி நிறுவனங்களும் பாதுகாப்பு சார்ந்த காரணங்களுக்காக சாட்ஜிபிடி, டீப்சீக் போன்றவற்றை பயன்படுத்த வேண்டாம் என உத்தரவிட்டு உள்ளனர்.
அரசு கருவிகளில் AI கருவிகளைப் பயன்படுத்துவதை தடை செய்யும் இந்த அறிவிப்புக்கு மத்தியில், இந்திய வேலைவாய்ப்பு தளத்தில் AI இன் மாறிவரும் நிலையையும், அரசு நிறுவனங்களுக்குள் அவற்றைப் பயன்படுத்துவதற்கான தெளிவான மற்றும் விரிவான கொள்கைகளை உருவாக்குவதன் அவசியத்தையும் வலியுறுத்துகிறது.
More From GoodReturns

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?



Click it and Unblock the Notifications