டிரம்பின் பரஸ்பர வரி எதிரொலி!. இந்திய ரத்தினக் கற்கள் மற்றும் நகைத் துறைக்கு அடிமேல் அடி!.

இந்தியாவின் பொருளாதாரத்தை உலுக்கும் வகையில் 26% பரஸ்பர வரியை அமெரிக்க அதிபர் விதித்துள்ளார். தனது 'Liberation day' உரையின் போது அறிவிக்கப்பட்ட இந்த பரஸ்பர வரி விகித அறிவிப்பில், புதிய வர்த்தக தடைகளை விட கட்டண சலுகைகளை மத்திய அரசு மிகவும் எதிர்பார்த்திருந்ததாக கூறப்படும் நிலையில், தற்போது அமெரிக்காவிற்குள் நுழையும் அனைத்து இந்திய பொருட்களுக்கும் ஏப்ரல் 9 முதல் குறைந்தபட்சம் 26% வரி விதிக்கப்படும் என்று டிரம்ப் பெரிய இடியை இறக்கியுள்ளார். அதாவது, இந்தியாவைப் பொறுத்தவரை, இந்த பரஸ்பர வரி கட்டணங்கள் ஒரு பெரிய பொருளாதார தலைவலியாக மாறக்கூடும்.

டிரம்ப்பின் வரி காரணமாக இந்தியாவில் பல்வேறு துறைகள் கடும் நெருக்கடியை எதிர்கொள்ளும் என்று நிபுணர்கள் கூறி வருகின்றனர். அந்தவகையில், இந்திய ரத்தின கற்கள் மற்றும் நகைத் துறைக்கு இந்த வரி விதிப்பு பெரும் தடையாக மாறியுள்ளது. அதாவது, இந்தியாவின் மொத்த நகை ஏற்றுமதி 33 பில்லியன் டாலராக உள்ளது. இதில் 9.9 பில்லியன் டாலர் அமெரிக்காவுக்குதான் செல்கிறது. அதாவது 30% நகைகளை அமெரிக்கர்கள் வாங்குகிறார்கள்.

டிரம்பின் பரஸ்பர வரி எதிரொலி!. இந்திய ரத்தினக் கற்கள் மற்றும் நகைத் துறைக்கு அடிமேல் அடி!.

டிரம்ப் விதிக்கும் புதிய வரி காரணமாக அமெரிக்க மக்கள் இந்திய தயாரிப்பு நகைகளை தவிர்த்துவிட்டு சிங்கப்பூர், UAE, ஓமன் போன்ற நாடுகளிலிருந்து தயாரிக்கப்படும் நகைகளை வாங்குவார்கள் என்று கூறப்படுகிறது. எனவே இந்தியாவில் நகை தயாரிப்பு துறையில் பணியாற்றும் தொழிலாளர்கள் வேலையை இழக்கும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் டிரம்பின் வரி விதிப்பு தொடர்பாக Linked in தளத்தில் Rupesh Jain என்பவரின் பதிவு தற்போது வைரலாகி வருகிறது. அதில் அவர், இந்திய ரத்தினக் கற்கள் மற்றும் நகைத் தொழிலுக்கு டிரம்பின் வரிவிதிப்பு செய்தி மிகுந்த துயரத்திற்கும் வருத்தத்திற்கும் காரணமாக மாறியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். டொனால்ட் ட்ரம்பின் புதிய 26% பரஸ்பர வரி, ஏற்கனவே உள்ள 10% அடிப்படை வரிக்கு மேலாக விதிக்கப்பட்டிருப்பது, இந்தியாவின் 8.5 பில்லியன் டாலர் மதிப்புள்ள ரத்தினக் கற்கள் மற்றும் நகைத் துறைக்கு கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தும் என்று தெரிவித்துள்ளார்.

அமெரிக்க இறக்குமதிகளில் இந்தியா 52% வரிகள், வரி நிவாரணங்கள் மற்றும் மானியங்களை விதிக்கிறது என்று ட்ரம்ப் கூறுகிறார், அதனால் தான் அவர் 26% வரியை "பிரதிபலிப்பு" செய்கிறதாக விளக்குகிறார். ஆனால், ரத்தின கற்கள் மற்றும் நகைத் துறைக்கு இந்தியாவில் வெறும் 5-10% வரியே விதிக்கப்படுகிறது, 52% இல்லை என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும், ட்ரம்பின் குழு இதை மதிப்பு கூட்டப்பட்ட வரிகள் (VAT), இது ஒரு உள்நாட்டு கொள்கை, இறக்குமதி வரி அல்ல மற்றும் விதிமுறைகள் போன்ற தெளிவற்ற "தடைகள் மூலம் சேர்த்து கணக்கிடுகிறது. ஆனால் இதற்கு எந்த ஆதாரமும் இல்லை என்றும் கூறியுள்ளார். இது முழுமையாக தெளிவில்லாத அபத்தமானது, மேலும் ஏற்கனவே கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள ரத்தினக் கற்கள் மற்றும் நகைத் துறை இந்த வரி விதிப்பால் மீண்டும் மிகப்பெரிய தாக்கத்தைச் சந்திக்கும்.

இந்த 8.5 பில்லியன் டாலர் மதிப்புள்ள தொழிலில் 40-50% அமெக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது, மேலும் 40-50 லட்சம் இந்தியர்களுக்கு வேலைவாய்ப்பையும், இரண்டு கோடி குடும்பங்களுக்கு நேரடியான ஆதாரத்தையும் வழங்குகிறது. 2024ல் தங்கத்தின் விலை 30% உயர்ந்ததால், இந்தத் துறையின் தேவை மந்தநிலை ஏற்கனவே கடுமையாக உள்ளது. மேலும், சூரத் மற்றும் மும்பையில் வைரத் துறை மிகப்பெரிய சிக்கல்களை எதிர்கொண்டு, தொழிற்சாலைகள் மூடல், வேலை நீக்கங்கள் மற்றும் கடன் தவறுகளுக்கு வழிவகுத்து வருகிறது.

இதனால் 20-30% அல்லது அதற்கு மேற்பட்ட எங்கள் ஏற்றுமதிகள் அழிவுக்கு ஆளாகக்கூடும், இப்போது, ஏற்கனவே இருந்த வரிகளுக்கு மேலாக, ட்ரம்பின் 26% வரி (ஏப்ரல் 5 முதல் 10% அடிப்படை வரி, ஏப்ரல் 9 முதல் 26% பரஸ்பர வரி) காரணமாக, ஏற்கனவே இருந்த கட்டணங்களுக்கு மேல் 500 டாலர் நெக்லஸை ஒரே இரவில் 680 டாலராக உயருகிறது. இதனால் 20-30% அல்லது அதற்கு மேற்பட்ட ஏற்றுமதிகள் குறையக்கூடும், லட்சக்கணக்கானோர் வேலை இழக்க நேரிடும். சிறிய வெட்டும் தொழிலாளர்கள் மற்றும் பாலிஷ் செய்யும் தொழிலாளர்களும் மிகக் கடுமையாக பாதிக்கப்படுவர், அவர்கள், குடும்பங்கள் வீடுகளை இழக்கலாம், குழந்தைகள் கல்வியை நிறுத்தலாம், கடன்கள் அதிகரிக்கலாம்.

மேலும், பெரிய ஏற்றுமதியாளர்கள் மாற்றுவழிகளை தேடக்கூடும், ஆனால் இந்த தொழிலாளர்கள் அதனை செய்ய முடியாது. இந்தத் தொழில் திருச்சூர், சூரத், மும்பை போன்ற பகுதிகளில் தாக்கம் மிகக் கடுமையாக இருக்கும். சிலர் யூரோப்பிய சந்தைகளை நோக்கி விரிவுபடுத்தலாம் எனக் கூறினாலும், இது முழுமையாக இழப்பை ஈடு செய்ய முடியாது, ஏனெனில் அந்த சந்தைகள் சிறியது மற்றும் ஏற்கனவே நிறைந்துள்ளவை ஆகும். பதில் நடவடிக்கையாக அமெரிக்காவின் ஆடம்பரப் பொருட்களுக்கு வரி விதிக்கலாம், ஆனால் அது வேலைவாய்ப்புகளை விரைவில் காப்பாற்ற முடியாது. ஆனால், ட்ரம்ப் ஏற்கனவே 26% பரஸ்பர வரியை விதித்துள்ளதாக அறிவித்து விட்டார், மேலும் இந்தியா பதிலடி கொடுத்தால் அதை 52% ஆக உயர்த்தலாம் என்றும் கூறியுள்ளார். எனவே, இங்கு எளிதான தீர்வுகள் எதுவும் இல்லை. உண்மையிலேயே இது ஒரு சோகமான நாள், கவலையளிக்கும் செய்தி என்று ரூபேஷ் குறிப்பிட்டுள்ளார்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+