இந்தியாவை உலகின் முன்னணி எலக்ட்ரிக் வாகன உற்பத்தி ஹப் ஆக மாற்றுவதற்கான இலக்குடன், மத்திய அரசு பொதுத்தேர்தல் நாள் அறிவிப்பதற்கு ஒரு நாளுக்கு முன்னதாக புதிய எலக்ட்ரிக் வாகன திட்டத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது.
இந்த புதிய எலக்ட்ரிக் வாகன கொள்கை மூலம் டெஸ்லா போன்ற வெளிநாட்டு நிறுவனங்களை இந்தியாவில் உற்பத்தி செய்யவும், முதலீடு செய்யவும் கவர்ந்திழுக்கும் நோக்கில் கொண்டு வரப்பட்டு உள்ளது.

இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் டெஸ்லா நீண்ட காலமாகக் கேட்டுவந்த வரி தள்ளுபடியும் இதில் கொடுக்கப்பட்டு உள்ளது.
மத்திய அரசி புதிய எலக்ட்ரிக் வாகன திட்டத்தின் கீழ் தேர்ந்தெடுக்கப்பட்ட எலக்ட்ரிக் வாகனங்களுக்கான இறக்குமதி வரிகளை குறைக்க இந்திய அரசு திட்டமிட்டுள்ளது. ஆனால் இந்த வரி சலுகையைப் பெற வெளிநாட்டு ஆட்டோமொபைல் நிறுவனங்கள் இந்தியாவில் குறைந்தது 500 மில்லியன் டாலர் அதாவது 4,150 கோடி ரூபாய் அளவுக்கு முதலீடு செய்ய வேண்டும்.
இதுமட்டும் அல்லாமல் சில பல முக்கிய கண்டிஷன்களையும் வைத்துள்ளது மத்திய அரசு, முதலீடு செய்யும் நிறுவனங்கள் மூன்று ஆண்டுகளுக்குள் உற்பத்தி தொழிற்சாலையை அமைக்கப்பட்டு இருக்க வேண்டும். இதை செய்தும் பட்சத்தில் தான் கார்களை இறக்குமதி செய்யும் நிறுவனங்களுக்கு வரிச் சலுகை வழங்கப்படும்.

மத்திய அரசின் இந்த முடிவு டெஸ்லா போன்ற முன்னணி நிறுவனங்களை ஈர்ப்பது மட்டுமல்லாமல், உள்ளூர் உற்பத்தியை ஊக்குவிப்பதற்காக வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்கும் இந்தியாவின் நிலைப்பாட்டையும் வலியுறுத்துகிறது. மேலும் வெளிநாட்டு நிறுவனங்களின் அதிநவீன உற்பத்தி தொழில்நுட்பத்தையும் இதன் மூலம் இந்தியாவுக்குக் கொண்டு வர முடியும்.
"இந்த திட்டம், நம்பகமான உலகளாவிய எலக்ட்ரிக் வாகன உற்பத்தியாளர்களை இந்திய எலக்ட்ரிக் வாகன துறையில் முதலீடு செய்ய கவரும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது," என்று மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது. இதன் மூலம், இந்தியாவின் "ஆத்மநிர்பார் பாரத்" திட்டம் கூடுதல் வலிமை பெறும்.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?



Click it and Unblock the Notifications