இந்தியாவின் மிகப்பெரிய பணக்காரர் ஆக விளங்கும் அதானி குழுமத்தின் தலைவரான கௌதம் அதானிக்கு CRPF கமாண்டோக்களின் Z பிரிவு VIP பாதுகாப்பு வழங்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
இதற்கான அறிவிப்பு மத்திய அரசு புதன்கிழமை வெளியிட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அகில இந்திய அளவில் கௌதம் அதானிக்கு இந்த Z பிரிவு VIP பாதுகாப்பைக் கட்டண அடிப்படையில் வழங்கப்படுகிறது.
Z பிரிவு VIP பாதுகாப்பு சேவைக்குக் கௌதம் அதானி ஒரு மாதத்திற்குச் சுமார் ரூ.15-20 லட்சம் மத்திய அரசுக்கு செலுத்த வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கௌதம் அதானி
மத்திய பாதுகாப்பு ஏஜென்சிகள் தயாரித்த அச்சுறுத்தல் அறிக்கையின் அடிப்படையில், 60 வயதான இந்தியாவின் பெரும் பணக்காரர் மற்றும் உலகின் 4வது பெரும் பணக்காரர் ஆக விளங்கும் கௌதம் அதானிக்கு மத்திய அரசு பட்டியலின் கீழ் பாதுகாப்பு அளிக்கப்பட்டு உள்ளது.
சிஆர்பிஎஃப் விஐபி பாதுகாப்பு
மத்திய ரிசர்வ் போலீஸ் படை (சிஆர்பிஎஃப்) விஐபி பாதுகாப்புப் பிரிவை இந்தப் பணியை மேற்கொள்ளுமாறு மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டு உள்ளது. இந்தியாவில் பல தொழிலதிபர்களுக்கு இதுபோன்ற உயர்மட்ட பாதுகாப்புகள் வழங்கப்பட்டு உள்ளது. இந்தியாவில் Z பிரிவு பாதுகாப்பு என்பது 3வது தர பாதுகாப்பாகும்.
முகேஷ் அம்பானி
இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தகக் குழுமமாக இருக்கும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானி-க்கு 2013 ஆம் ஆண்டு CRPF கமாண்டோக்களின் Z வகைப் பாதுகாப்பு மத்திய அரசால் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இதைத் தொடர்ந்து சில ஆண்டுகளிலேயே முகேஷ் அம்பானியின் மனைவி நீதா அம்பானி-க்கு Z வகை அல்லாமல் குறைந்த பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டது.
33 பாதுகாப்பு அதிகாரிகள்
இந்த Z பிரிவு பாதுகாப்பில் 3 முதல் 4 CRPF கமாண்டோக்கள் மற்றும் சுமார் 30 காவல் துறை அதிகாரிகள் என 33 முதல் 35 பாதுகாப்பு அதிகாரிகள் எப்போது கௌதம் அதானி-யை சுற்றியே இருப்பார்கள். பொதுவாக இந்தப் பாதுகாப்பு மத்திய அரசு நாட்டின் பொருளாதாரம், அரசுக்கு முக்கியமானவர்கள், அச்சுறுத்தல் எதிர்கொள்ளும் முக்கிய நபர்களுக்கு வழங்கப்படும்.
மாபெரும் வளர்ச்சி
கௌதம் அதானி சொத்து மதிப்பு 2020 முடிவில் வெறும் 8.9 பில்லியன் டாலராக இருந்த நிலையில் 2 வருடத்தில் அதிகப்படியான நிறுவன கைப்பற்றல் மற்றும் வர்த்தக விரிவாக்கம் ஆகியவற்றின் மூலம் அதானியின் சொத்து மதிப்பு இன்றைய வர்த்தக முடிவில் சுமார் 134 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது.
More From GoodReturns

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

அட்சய திருதியைக்கு தங்கம் வாங்குற பிளான் இருக்கா? இப்படி செஞ்சா குறைஞ்ச விலைக்கு தங்கம் கிடைக்கும்

90ஸ் கிட்ஸ்களின் Gmail பிரச்சினைக்கு தீர்வு தந்த சுந்தர் பிச்சை: பழைய ஐடி-க்கு குட்பை..!!

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!



Click it and Unblock the Notifications