இந்தியாவில் 250 பில்லியன் டாலருக்கும் அதிக மதிப்புடைய வர்த்தக சந்தை கொண்ட ஐடி துறை பல வர்த்தக பாதிப்புகளைக் கடந்து, ஐரோப்பியச் சந்தையிலும், அமெரிக்க சந்தையில் இருந்தும் புது புது திட்டங்களை பெற்று வருகிறது.
இதேவேளையில் டிசிஎஸ் பிரஷ்ஷர்களை பணியில் சேர்க்கும் பணிகளை வேகப்படுத்தியுள்ளது, இதற்காக அறிவிப்புகளையும் தேசிய அளவிலான நடக்கும் தேர்வு குறித்த அறிவிப்புகளையும் விடுத்துள்ளது. இவை அனைத்தும் ஐடித் துறைக்கு மிகவும் சாதகமான சூழ்நிலை உருவாகி வருவதைக் காட்டுகிறது.

இந்த சூழ்நிலையில் ஐடி துறை நிறுவனங்கள் மத்தியில் மீண்டும் உயர் அதிகாரிகளை ஈர்க்கும் பணிகள் துவங்கியது. ஒரு வருடத்திற்கு முன்பு நாட்டின் அனைத்து முன்னணி ஐடி சேவை நிறுவனங்களும் சக போட்டி நிறுவனத்தில் இருந்து மூத்த அதிகாரிகளை ஈர்த்து வந்தது பெரும் பிரச்சனையாக வெடித்தது.
இந்த நிலையில் தகவல் தொழில்நுட்ப (IT) துறையில் கிட்டத்தட்ட ஒரு வருடமாக நிறுத்தப்பட்டிருந்த அல்லது குறைவாக இருந்த தலைமை நிலை ஊழியர்களுக்கான (CXO and CXO-1) தேடல் மீண்டும் அதிகரித்து வருகிறது.
இதுகுறித்து நிர்வாக பணியிட தேடல் மற்றும் பணியமர்வு நிறுவனங்களின் கூறுகையில், இந்தியா, அமெரிக்கா மற்றும் பிரிட்டன் உள்ளிட்ட முக்கிய நாடுகளில் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு சாதகமான சூழ்நிலை ஏற்படும் என்ற எதிர்பார்ப்பில், காலியாக இருக்கும் அல்லது தேவைப்படும் தலைமை மற்றும் மூத்த நிலை பணியிடங்களை நிரப்பவும், புதிய பதவிகளை உருவாக்கி வர்த்தகத்தை விரிவாக்கம் செய்யும் பணியில் ஐடி நிறுவனங்கள் வேகம் காட்டி வருகின்றன.
இதனால் அடுத்த சில காலாண்டுகளுக்கு CXO மற்றும் CXO-1 பிரிவில் இருக்கும் அதிகாரிகள் இடம் மாற்றுவது தொடர் கதையாகும். இது பணம் பலம் அதிகம் கொண்டு நிறுவனங்களுக்குச் சாதகமாக இருந்தாலும், ஏற்கனவே புதிய வர்த்தகத்தைப் பெற முடியாமல் தவிக்கும் நிறுவனங்களுக்குக் கூடுதல் பாதிப்பை ஏற்படுத்தும் என தெரிகிறது.
மேலும் இரண்டாம் நிலை நிறுவனங்கள் கூட சி-சூட் (C-suite - தலைமை செயல் அதிகாரி குழு) அதிகாரிகளைத் தேடி வருகின்றன. முன்னணி ஐடி நிறுவனங்களும் கூட கணிசமான அளவில் தேடல் பணிகளைத் தொடங்கியுள்ளன என்று நிர்வாக பணி தேடல் மற்றும் திறமை ஆலோசனை நிறுவனமான ஏபிசி கன்சல்டன்ட்ஸின் (ABC Consultants) மூத்த பங்குதாரர் திருமதி ரத்னா குப்தா தெரிவித்தார்.
தகவல் தொழில்நுட்ப துறையில் நிலவும் தற்போதைய போக்கு, பொருளாதார வளர்ச்சிக்கான நம்பிக்கையை அளிக்கிறது. தேர்தல் முடிவுகளுக்கும் (இந்தியா, அமெரிக்கா) பிறகு அரசியல் ஸ்திரத்தன்மை ஏற்படுவதும், உலகளவில் பொருளாதாரம் மேம்படுவதும் எதிர்பார்க்கப்படுவதால், ஐடி நிறுவனங்கள் தங்கள் வளர்ச்சி திட்டங்களை மீண்டும் தூசி தட்ட தொடங்கியுள்ளனர்.
தகவல் தொழில்நுட்ப துறையில் தலைமை நிலை பணியிடங்களுக்கான தேடல் அதிகரிப்பது, இந்த துறையில் வேலைவாய்ப்பு சந்தை களைக்கட்டத் தொடங்கியிருப்பதற்கான சிக்னஸ். நீங்களும் ஐடி ஊழியராக இருந்தால் புதிய வேலைக்கு மாற தயாராக இருங்க.
More From GoodReturns

படாத பாடு படுத்தும் ஏஐ!! 30,000 பேரை பணிநீக்கம் செய்ய தயாராகும் டெக் நிறுவனம்!!

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!



Click it and Unblock the Notifications