இந்திய ஐடி சேவை துறை மிகவும் சோதனை மிக்க காலக்கட்டத்தில் உள்ளது, ஒருபக்கம் அமெரிக்க பொருளாதாரத்தில் மந்த நிலை, மறுபுறம் பிரிட்டன் நாட்டில் ரெசிஷன் அச்சம், ஐரோப்பாவில் வட்டி விகித உயர்வால் தேக்கம் நிலை, மத்திய கிழக்கு நாடுகளின் பொருளாதாரம் இஸ்ரேல் போர் காரணமாக நிலையற்ற தன்மைக்குள் நுழைந்துள்ளது.
இதனால் இந்திய ஐடி சேவை துறை நிறுவனங்களான டிசிஎஸ், இன்போசிஸ், ஹெச்சிஎல், விப்ரோ, டெக் மஹிந்திரா, எல்டிஐமையின்டுட்ரீ போன்ற முன்னணி நிறுவனங்களால் புதிய வர்த்தகத்தை பெற முடியவில்லை. அதிலும் குறிப்பாக அமெரிக்காவில் வட்டி விகித உயர்வால் நிறுவனங்கள் டெக் சேவைக்காக செலவு செய்வதை பெரிய அளவில் குறைந்துள்ளதால் பல திட்டங்கள் தற்காலிமாக நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது.

இந்த இக்கட்டான சூழ்நிலையில் ஐடி நிறுவனங்கள் எப்படியெல்லாம் செலவுகளை குறைத்து முதலீட்டாளர்களுக்கு லாபத்தை கூட்டி காட்டுவது என்பதில் தீவிரமாக ஆலோசனை செய்து வருகிறது. இதேபோல் தற்போது நிறுவனத்தில் இருக்கும் ஊழியர்களை எப்படி முழுமையாகவும், சிறப்பாகவும் பயன்படுத்திக்கொள்வது என்பதில் தீவிரமாக உள்ளது.
இதன் படி ஐடி சேவை நிறுவனங்களுக்கு தற்போது இருக்கும் அதிகப்படியான செவவுகள் என்றால் இது ஐடி ஊழியர்களுக்கு அளிக்கப்படும் சம்பளம் தான். குறிப்பாக செப்டம்பர் காலாண்டில் ஐடி நிறுவனங்களில் வருவாய் வளர்ச்சியை காட்டிலும் ஊழியர்களுக்கு அளிக்கப்படும் சம்பள செலவுகள் அதிகரித்துள்ளது.
ஐடி சேவை நிறுவனங்களின் மொத்த வருவாயில் சம்பளத்திற்கான செலவுகளின் பங்கீடு மட்டுமே செப்டம்பர் மாதத்தில் 56.6 சதவீதமாக உள்ளது. இது ஜூன் காலாண்டில் 56.9 சதவீதமாக இருருந்தது குறிப்பிடத்தக்கது.
இதை நிறுவனத்தின் அளவில் பார்க்கும் போது டிசிஎஸ் 58.8 சதவீதமும், ஹெச்சிஎல் 57.2 சதவீதமும், இன்போசிஸ் 53.8 சதவீதமாக உள்ளது. விப்ரோ வருகிற அக்டோபர் 18 ஆம் தேதி தனது காலாண்டு முடிவுகளை வெளியிட உள்ளது. Wage Cost அதாவது சம்பள செலவுகள் அதிகரிப்பு என்பது ஊழியர்களை தொடர்ந்து தக்கவைக்க முடியவில்லை என்பதை காட்டுக்கிறது.
ஐடி சேவை நிறுவனங்களில் 4- 10 வருட அனுபவம் கொண்ட ஊழியர்கள் தற்போது 30 சதவீத சம்பள உயர்வுடன் இந்தியாவில் இருக்கும் வெளிநாட்டு நிறுவனங்களான GCC-க்கு மாறி வருகின்றனர். இத்தகைய ஊழியர்களை தக்க வைத்துக்கொள்ள இந்திய ஐடி நிறுவனங்கள் கூடுதல் சம்பள உயர்வை கொடுத்து தக்க வைக்க வேண்டிய கட்டாயம் உள்ளது.
More From GoodReturns

படாத பாடு படுத்தும் ஏஐ!! 30,000 பேரை பணிநீக்கம் செய்ய தயாராகும் டெக் நிறுவனம்!!

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!



Click it and Unblock the Notifications