இந்தியாவை சேர்ந்த பெரும்பாலான ஐடி நிபுணர்கள் அமெரிக்காவில் வேலை வாய்ப்பு என்றால் துள்ளிக் குதித்துக் கொண்டு ஓடுவார்கள். ஆனால் அந்த மனநிலையை மாறி இருக்கிறது.
அமெரிக்காவில் அதிபர் டொனால்ட் டிரம்ப் தலைமையிலான நிர்வாகம் விசா நடைமுறைகளை கடுமையாக்கி வருகிறது. ஏற்கனவே அங்கே வேலை செய்பவர்களுக்கு பல்வேறு நெருக்கடிகள் ஏற்பட்ட வண்ணம் இருக்கின்றன. இந்த சூழலில் தான் அமெரிக்காவில் வேலை செய்யக்கூடிய இந்தியாவை சேர்ந்து ஐடி நிபுணர்கள் மீண்டும் இந்தியாவிற்கு திரும்ப வேண்டிய நேரம் வந்துவிட்டதா என சமூக வலைத்தளங்களில் விவாதம் எழுந்துள்ளது.

அமெரிக்காவை சேர்ந்த நிறுவனங்கள் திறன்மிகு வெளிநாட்டு ஊழியர்களை பணியில் அமர்த்த ஹெச்1பி விசா திட்டத்தை பயன்படுத்துகின்றன. இந்தியாவை சேர்ந்த பெரும்பாலான ஐடி நிபுணர்கள் இந்த விசா மூலமாகவே அமெரிக்காவில் சென்று வேலை செய்கின்றனர். அமெரிக்காவில் ஹெச்1பி விசாவில் வருகை தந்திருக்கும் வெளிநாட்டவர்களில் 70% பேர் இந்தியாவை சேர்ந்தவர்கள் தான்.
இந்த சூழலில் தான் டிரம்ப் நிர்வாகம் ஹெச்1பி விசா வழங்குவதிலும், கிரீன் கார்டுகள் மீதும் எடுத்து வரக்கூடிய மாற்றங்கள் அங்கே வேலையில் இருக்கும் இந்தியர்களை அச்சத்தில் ஆழ்த்தி இருக்கிறது. பலரும் இந்தியாவிற்கே திரும்பி விடலாமா என எண்ணுகிறார்களாம். இதனிடையே ரெடிட் தளத்தில் பதிவு செய்துள்ள ஒரு பொறியாளர் அமெரிக்காவில் நான் பல ஆண்டுகளாக ஐடி துறையில் வேலை செய்கிறேன். என்னுடைய குடும்பமும் இங்கே செட்டிலாகி விட்டது. குழந்தைகள் தொடக்கப்பள்ளிக்கு செல்கின்றனர். ஆனால் கடந்த சில மாதங்களாக இந்தியாவிற்கு வேலை தேடி சென்று விடுவோமா என்ற எண்ணம் தோன்றுகிறது என கூறுகிறார்.
ஆனால் அமெரிக்காவில் எனக்கு என்னுடைய வேலையும் தனிப்பட்ட வாழ்க்கையும் சமன் செய்வதற்கான நேரம் கிடைக்கிறது தரமான வாழ்க்கை கிடைக்கிறது ஆனால் இந்தியாவிற்கு சென்றால் இதுபோல தனிப்பட்ட வாழ்க்கையும் வேலையும் சமன் செய்வதற்கான நேரம் கிடைக்காது என்பதால் ஒரே குழப்பமாக இருக்கிறது என தெரிவித்திருக்கிறார். அவருடைய இந்த பதிவுக்கு பலரும் தங்களுடைய கருத்துக்களை தெரிவித்துள்ளனர்.
ஒரு பயனர் நிச்சயமாக இது சிக்கலான ஒரு சூழல் தான் ஆனால் இரண்டில் எது சிறந்தது என்பதை நீங்கள் தான் தேர்ந்தெடுக்க வேண்டும் எனக் கூறியிருக்கிறார். உங்கள் குழந்தைகள் பெரியவர்கள் ஆவதற்கு முன்பு நீங்கள் இந்தியாவிற்கு வந்துவிட்டால் அவர்கள் இந்த சூழலுக்கு எளிதில் தங்களை மாற்றிக்கொள்வார்கள் இல்லையென்றால் மிகவும் கடினமானதாக இருக்கும் எனவே சீக்கிரம் முடிவு எடுங்கள் என கூறியிருக்கிறார்.
நீண்ட கால அடிப்படையில் பார்க்கும்போது உங்களுக்கு அங்கு ஒரு பாதுகாப்பற்ற சூழலில் இருக்கிறது என தோன்றினால் இந்தியாவிற்கு திரும்புவது எந்த தவறும் இல்லை என ஒரு பயனர் அறிவுரை வழங்கியுள்ளார்.
More From GoodReturns

ஈரான் போர்: டிரம்ப் வெளியிட்ட ஒரேயொரு அறிவிப்பு..!! டக்குன்னு குறைந்த கச்சா எண்ணெய் விலை..!!

100 டாலரை தொட்ட கச்சா எண்ணெய்.. ஓரே நாளில் 25% விலை உயர்வு.. தீவிரம் அடையும் ஈரான் போர்..!!

வெளியான ரகசியம்.. ஈரான் மீதான போர்.. டிரம்ப் சொன்னது பொய்யா..? Pentagon-ல் நடந்தது என்ன..?

டிரம்ப் அறிவிப்பால் இந்தியாவுக்கு சவால்.. ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொல்லும் முக்கிய தகவல்..!!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

வெனிசுலாவில் கிடைத்த தங்க புதையல்!! 1000 கிலோ தங்கம்னா சும்மாவா!! நினைத்ததை சாதித்த டிரம்ப்!!

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!



Click it and Unblock the Notifications