இந்தியாவின் 150 பில்லியன் டாலர் மதிப்பிலான ஐடி சேவைத் துறை அடுத்த 5 வருடம் வரலாறு காணாத வளர்ச்சியைப் பதிவு செய்ய வாய்ப்பு உள்ளது. இதற்கு முக்கியக் காரணம் அமெரிக்க அதிபரான ஜோ பைடன் கடந்த வாரம் வெளியிட்ட புதிய அறிவிப்பு தான்.
அமெரிக்கா - சீனா மத்தியில் இருக்கும் போட்டியில் வெற்றிபெற வேண்டும் என்பதற்காகப் பல முயற்சிகளில் அமெரிக்கா இறங்கியுள்ளது, இதன் ஒரு பகுதி தான் டெக்னாலஜி.
ஜோ பைடன் தலைமையிலான அமெரிக்க அரசு தற்போது வெளியிட்டுள்ள அறிவிப்பு இந்தியாவிற்கும், இந்திய ஐடி நிறுவனங்களுக்கும் சாதகமாக அமைந்துள்ளது.
அமெரிக்க அதிபர் ஜோ பைடன்
அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கடந்த வாரம் அமெரிக்கப் பொருளாதாரத்தின் போட்டி தன்மையை அதிகரிக்க வேண்டும் என அனைத்து நிறுவனங்களுக்கும் உத்தரவிட்டார். இந்த உத்தரவின் மூலம் பல அமெரிக்க நிறுவனங்கள் தங்கள் வர்த்தகத்தை டிஜிட்டலாக மாற்றும் பணிகளைப் பெரிய அளவில் வேகப்படுத்தியுள்ளது.
டிஜிட்டல் சேவை
அமெரிக்காவில் இருக்கும் அனைத்துத் துறை சார்ந்த நிறுவனங்களும் தற்போது தங்களது வர்த்தகம் மற்றும் நிர்வாகத்தைக் கிளவுட் தளத்திற்கு மாற்றவும், சேவைகளை மேம்படுத்தச் செயற்கை நுண்ணறிவு, இண்டர்நெட் ஆப் திங்ஸ் போன்ற பல புதிய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த முடிவு செய்துள்ளது.
ஆட்டோமேஷன் மாற்றம்
கொரோனா தொற்றுப் பாதிப்புக் காலகட்டத்திலேயே அமெரிக்காவின் பெரும்பாலான நிறுவனங்கள் தனது வர்த்தகத்தை ஆட்டோமேஷன் செய்யவும், டிஜிட்டல் மயமாக்கவும் முடிவு செய்துள்ளது. ஜோ பைடன் அறிவிப்புக்குப் பின் இந்தப் பணிகள் அனைத்தையும் வேகப்படுத்த முடிவு செய்துள்ளது அமெரிக்க நிறுவனங்கள்.
இந்திய ஐடி நிறுவனங்கள்
இந்த மாற்றம் இந்திய ஐடி நிறுவனங்களுக்கு ஜாக்பாட் ஆக மாறியுள்ளது. பொதுவாக அமெரிக்க நிறுவனங்கள் குறைந்த செலவில் டெக் சேவைகளைப் பெற வேண்டும் என்றால் 3ஆம் தரப்பு நிறுவனங்களைத் தான் அதிகளவில் விரும்புவார்கள். அந்த வகையில் தான் இந்திய ஐடி நிறுவனங்கள் இதுநாள் வரையில் அதிகளவிலான வர்த்தகத்தை அமெரிக்காவில் இருந்து பெற்றுவருகிறது.
ஜோ பைடன் அறிவிப்பு
தற்போது ஜோ பைடன் அறிவிப்புக்குப் பின்பு அமெரிக்க நிறுவனங்கள் மத்தியில் ஏற்பட்டு உள்ள மாற்றம் அடுத்த 5 வருடத்திற்கு இந்திய ஐடி நிறுவனங்கள் ஏராளமான வர்த்தகத்தைப் பெற வாய்ப்பு உள்ளது. இதனால் இந்திய ஐடி நிறுவனங்களின் வளர்ச்சி வரலாற்று உச்சத்தை அடைய வாய்ப்பு உள்ளது.
எவரெஸ்ட் குரூப் கருத்து
இதுகுறித்து அமெரிக்க ஐடி ஆலோசகர் மற்றும் ஆய்வு நிறுவனமான எவரெஸ்ட் குரூப் சிஇஓ பீட்டர் பென்டார்-சாமுவேல் கூறுகையில், அமெரிக்க அரசின் அறிவிப்புக்குப் பின்பு டிஜிட்டல் ட்ரான்ஸ்பர்மேஷன் திட்டங்கள் எண்ணிக்கை சந்தையில் பெரிய அளவில் அதிகரித்துள்ளது. ஏற்கனவே இத்துறையில் ஆதிக்கம் செய்யும் இந்திய ஐடி துறைக்கு இது சிறந்த வர்த்தக வாய்ப்பாக இருக்கும் எனத் தெரிவித்துள்ளார்.
5 வருடம் மெகா வளர்ச்சி
மேலும் இந்திய ஐடி நிறுவனங்கள் அடுத்த 5 வருடம் மெகா சைக்கிள்-ஐ சந்திக்க உள்ளதாக எவரெஸ்ட் குரூப் சிஇஓ பீட்டர் பென்டார்-சாமுவேல் தெரிவித்துள்ளார். இதன் மூலம் ஐடி நிறுவனங்கள் மட்டும் அல்லாமல் ஐடி துறையில் அதிகளவிலான வேலைவாய்ப்புகள் உருவாகும் வாய்ப்பு உள்ளதாகக் கூறப்படுகிறது.
டாப் 5 ஐடி நிறுவனங்கள்
2021ஆம் ஆண்டில் இந்தியாவின் டாப் 5 ஐடி நிறுவனங்கள் மட்டுமே புதிதாக ஒரு லட்சம் வேலைவாய்ப்புகளை உருவாக்கத் திட்டமிட்டு இருந்த நிலையில் தற்போது இப்புதிய மாற்றம் மூலம் புதிய வேலைவாய்ப்பு எண்ணிக்கை இரட்டிப்பு வளர்ச்சி அடையவும் வாய்ப்பு உள்ளது.
150 பில்லியன் டாலர் ஐடி துறை
இந்தியாவில் கொரோனா தொற்று மூலம் பாதிக்கப்படாத ஓரே துறை, ஐடி சேவைத் துறை மட்டுமே. 99 சதவீத ஊழியர்களும் வீட்டில் இருந்து பயணியற்ற முடியும் காரணத்தால் எவ்விதமான பாதிப்பு இல்லாமல் வர்த்தகம் செய்யப்பட்டு வருகிறது. இந்திய ஐடி சேவை துறையின் மொத்த மதிப்பு 150 பில்லியன் டாலர் அளவிற்கு உயர்ந்துள்ளது.
More From GoodReturns

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

மேற்கு ஆசிய போர் நெருக்கடி: இந்திய அரிசி, எரிசக்தி, ரத்தினங்கள் என 15 துறைகளுக்கு எச்சரிக்கை?

வெளியான ரகசியம்.. ஈரான் மீதான போர்.. டிரம்ப் சொன்னது பொய்யா..? Pentagon-ல் நடந்தது என்ன..?

ஈரான் - அமெரிக்கா போர்.. நடுவில் சிக்கிக்கொண்டு தவிக்கும் ஜப்பான்.. பெரும் சீரழிவின் ஆரம்ப புள்ளி இதுதானா..?

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போரை விடுங்க.. இந்திய -அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் என்ன ஆச்சு? அமெரிக்க அரசு பதில்

ஈரான்-இஸ்ரேல் மோதல்: இந்தியாவுக்கு தான் பெரிய பாதிப்பு.. அடுத்தடுத்து நடக்கும் பாதிப்பு..!!

ஈரான் போர் நீடிப்பதால் மனம் மாறிய அமெரிக்கா!! திடீரென இந்தியாவுக்கு சலுகை!!

படாத பாடு படுத்தும் ஏஐ!! 30,000 பேரை பணிநீக்கம் செய்ய தயாராகும் டெக் நிறுவனம்!!

இந்திய ஐடி பங்குகளை கைக்கழுவும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்!! எல்லாம் ஏஐ செய்யும் வேலை!!

பங்குச்சந்தை சரிவிலும் ஏற்றம் கண்ட ரயில்வே துறை பங்குகள்: இப்போது முதலீடு செய்யலாமா?



Click it and Unblock the Notifications