2026ஆம் ஆண்டு இந்திய பங்குச்சந்தைக்கு மிகவும் மோசமான ஆண்டு, அதைவிட முக்கியமாக ஐடித் துறைக்கும், ஐடி துறை பங்குகளில் முதலீடு செய்தவர்களுக்கு மிகவும் கொடுரமான ஆண்டாகவே இருந்து வந்தது. ஆனால் கடந்த ஒரு மாதம் மொத்த கதையும் மாறி பங்குச்சந்தை முதலீட்டாளர்களின் செல்லக்குட்டியாக மாறியுள்ளது என்றால் மிகையில்லை.
சுருக்காமாக சொல்ல வேண்டும் என்றால் 2026ஆம் ஆண்டில் முதல் 6 மாதத்தில் ஏஐ தொழில்நுட்பத்தின் ஆதிக்கம் காரணமாக டிசிஎஸ் உட்பட அனைத்து பங்குகளும் பெரும் சரிவை சந்தித்தது. ஆனால் ஜூலை மாதம் மட்டும் ஐடி துறை பங்குகளில் முதலீடு செய்தவர்களுக்கு 3.82 கோடி ரூபாய் லாபத்தை அள்ளிக்கொடுத்துள்ளது. இதற்கு என்ன காரணம்..? ஏன் திடீரென ஐடி பங்குகள் உயர்கிறது..?

இந்த ஆண்டு துவக்கத்தில் ஏஐ தொழில்நுட்பம் ஒட்டுமொத்த ஐடி சேவை துறையை அழிக்கப்போகிறது என்ற தெளிவாக கருத்து நிலவியது. ஆனால் ஏஐ தொழில்நுட்பத்தை தொடர்ந்து பயன்படுத்துவதின் மூலம் செலவுகள் அதிகரிக்கிறது, ஏஐ செயல்பாடுகளை மறுஆய்வு செய்ய மனித ஊழியர்களின் தேவை அவசியம் போன்ற நிலைப்பாடு உருவானது.
இதேபோல் ஏஐ மாடல்களின் திறன் மேம்பாடும், அதன் பயன்பாடும் தேக்கம் அடைந்தது. இதன் நிலையில் தான் முதல் அடி.. ஏஐ சிப் தயாரிக்கும், விற்கும் நிறுவனங்கள் அடிவாங்க துவங்கியது. இதனால் தைவான், தென் கொரிய பங்குச்சந்தைகள் பெரும் சரிவையும் சந்தித்தது வந்தது, சந்தித்தும் வருகிறது.
இந்த நிலையில் அடுத்தக்கட்டமாக ஒட்டுமொத்த டெக் துறையும் இனி ஏஐ தொழில்நுட்பத்தின் பயன்பாட்டை நிறுவன அளவில் அதிகரித்தால் மட்டுமே தொடர்ந்து வருமானத்தையும், லாபத்தையும் பெற முடியும் என உணர்ந்து இதற்கான பணிகளை செய்ய துவங்கியது, இதற்கான தீர்வாக இந்திய ஐடி நிறுவனங்கள் இருந்தது. இதேவேளையில் Anti AI முதலீட்டு எண்ணம் முதலீட்டு சந்தையில் உருவானது.
இவை இரண்டும் இந்திய ஐடி சேவை நிறுவன பங்குகளில் முதலீட்டை அதிகரிக்க வழிவகுத்தது. இதன் வாயிலாகவே ஒரு மாதத்தில் இந்திய ஐடி சேவை துறையின் சந்தை மதிப்பு 3.82 லட்சம் கோடி ரூபாய் அதிகரித்துள்ளது. நிஃப்டி ஐடி குறியீடு ஜூலை மாதத்தில் மட்டும் 16 சதவீதம் வரையில் உயர்ந்துள்ளது, இந்த மாதத்தில் அதிக லாபம் கொடுத்த துறையாக ஐடி துறை உயர்ந்துள்ளது.
ஜூலை மாத வர்த்தகத்தில் டாப் 10 ஐடி நிறுவன பங்குகளில் சுமார் 7 நிறுவனம் 15 சதவீதத்திற்கும் அதிகமாக உயர்ந்துள்ளது என்றால் மிகையில்லை. இதில் முக்கியமாக Persistent Systems பங்குகள் ஜூலை மாதம் 26 சதவீதம் உயர்ந்துள்ளது, இதேபோல் ஹெச்சிஎல் 25 சதவீதமும், எல்டிஐ மைண்ட்ட்ரீ 24.6 சதவீதமும், டிசிஎஸ் 20 சதவீதமும், டெக் மஹிந்திரா 16.9 சதவீதமும், கோபோர்ஜ் 16.67 சதவீதமும், இன்போசிஸ் 15.35 சதவீதமும் வரையில் ஜூலை மாதம் உயர்ந்துள்ளது.
இதன் மூலம் டிசிஎஸ் அதிகப்படியாக அதன் சந்தை மதிப்பு 1.48 லட்சம் கோடி வரையில் ஜூலை மாதம் உயர்ந்துள்ளது, ஹெச்சிஎல் 73000 கோடி, இன்போசிஸ் 62000 கோடி ரூபாய் வரையில் அதிகரித்துள்ளது.
இந்த உயர்வு தொடருமா அல்லது இது வெறும் சென்டிமென்ட் மாற்றம் மூலம் ஏற்பட்ட முதலீடா என்ற கேள்வி எழுகிறது. இன்று ஜூலை மாத பியூச்சர்ஸ் முடிந்த நிலையில் அடித்த மாதத்திற்கான பியூச்சர்ஸ்-ன் open interest 30 சதவீத்திற்கு மேல் சரிந்துள்ளது. இதனால் முதலீட்டாளர்கள் மிகவும் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும்.


Click it and Unblock the Notifications

