இந்தியாவில் ரியல் எஸ்டேட் துறையும் சரி, ஆட்டோமொபைல் துறையும் சரி மிகப்பெரிய அளவிலான மாற்றம் நடந்துள்ளது. இந்தியாவில் பணக்காரர்கள் எண்ணிக்கை பெரிய அளவில் அதிகரித்துள்ள காரணத்தால் சந்தையில் ஆடம்பர பொருட்களுக்கான சந்தை மிகப்பெரிய அளவிலான மாற்றம் நடந்துள்ளது.
இந்தியா முழுவதும் தற்போது சென்னை உட்பட டாப் 7 நகரங்களில் ஆடம்பர வீடுகளுக்கான தேவை அதிகரித்துள்ளது. குறிப்பாக 1 - 1.5 கோடி ரூபாய் மதிப்பிலான வீடுகள் அதிகளவில் விற்பனை செய்யப்பட்டு வருகிறுது. இதேபோன்ற ஒரு மாற்றம் ஆட்டோமொபைல் துறையிலும் நடந்துள்ளது தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

இந்தியாவில் காஸ்ட்லியான கார்களின் விற்பனை கடந்த சில ஆண்டுகளாக அசாதாரண வளர்ச்சியை கண்டு வருகிறது. இந்த ஆண்டு, 50 லட்சம் ரூபாய்க்கு மேல் விலை கொண்ட ஆடம்பர கார்கள் ஒவ்வொரு 10 நிமிடத்திற்கும் 1 கார் விற்பனை செய்யப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது.
ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு இதே காலகட்டத்தில் ஒரு மணிநேரத்திற்கு இரண்டு கார்கள் மட்டுமே விற்பனையான நிலையில் தற்போது 6 கார்கள் விற்பனை செய்யப்படும் அளவுக்கு உயர்ந்துள்ளது.
இதன் எதிரொலியாக ஆடம்பர கார் உற்பத்தியாளர்கள் 2025-ம் ஆண்டில் 24-க்கும் மேற்பட்ட புதிய மாடல்களை அறிமுகம் செய்ய தயாராக உள்ளதால், இந்த வளர்ச்சி 2025ஆம் ஆண்டிலும் தொடர்வது மட்டும் அல்லாமல் விற்பனை எண்ணிக்கை அதிகரிக்க கூடும்ம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. 2020ல் வருடம் முழுவதும் 20500 கார்கள் மட்டுமே விற்கப்பட்ட நிலையில் 2025-ம் ஆண்டில் இதன் விற்பனை 50,000 எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
2024-ம் ஆண்டிற்கான மெர்சிடிஸ்-பென்ஸ் விற்பனை விவரங்கள் இன்னும் வெளியிடப்படவில்லை என்றாலும், தொழில் வட்டார தகவல்களின்படி, இந்த ஆண்டு மட்டும் 13 சதவீத வளர்ச்சி உடன் 14,379 கார்களை விற்பனை செய்திருக்க கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதேபோல் BMW நிறுவனம் இந்திய சந்தையில் வலுவான வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. 2024-ம் ஆண்டின் முதல் ஒன்பது மாதங்களில் விற்பனை சுமார் 5% அதிகரித்து 10,556 வாகனங்களை விற்பனை செய்துள்ளது.
இந்தியாவில் ஆடம்பர கார்களின் விற்பனை அதிகரிக்க மிக முக்கியமான காரணம் தனிநபர் செல்வந்தர்களான UHNWI-களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதே இந்த வளர்ச்சிக்கு முக்கிய காரணம். நைட் பிராங்க் நிறுவனத்தின் 'தி வெல்த் ரிப்போர்ட் 2024' படி, 2023 முதல் 2028 வரை UHNWI-களின் எண்ணிக்கை 13,263-லிருந்து 50% அதிகரித்து 19,908 ஆக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
More From GoodReturns

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

அமெரிக்காவுக்கு சத்தமேயில்லாமல் செக் வைத்த ஈரான்: டாலர் ஆதிக்கத்தை முடக்க சீனா வகுத்த வியூகம்!

முதலிடத்தில் விஜய், இரண்டாமிடத்தில் ஸ்டாலின் – அப்போ எடப்பாடி பழனிசாமி , சீமான்?

அண்டார்டிகாவில் மறைந்து கிடக்கும் தங்கப் புதையல்!! இந்த நாடுகளுக்கெல்லாம் ஜாக்பாட்!!

தங்கம் விலை ஏற்ற இறக்கம் குறித்து கவலையே வேண்டாம்: இப்படி முதலீடு செஞ்சா லாபம் கொட்டும்!!



Click it and Unblock the Notifications