நாட்டில் கொரோனாவின் தாக்கம் இருந்து வரும் நிலையில், நடப்பு ஆண்டில் ஆறு முக்கிய நகரங்களில் அலுவலக இடங்களுக்கான குத்தகை ஒப்பந்தம் 58 சதவீதம் குறையலாம் என்கிறது ஒர் அறிக்கை.
இது குறித்து வெளியான செய்தியில், 2020ம் ஆண்டில் 58 சதவீதம் குறைந்து, 3.4 மில்லியன் சதுர அடியாக இருக்கும் என்று சொத்து ஆலோசகரான சாவில்ஸ் இந்தியா தெரிவித்துள்ளது.

இது டெல்லி என் சி ஆர், மும்பை, பெங்களூரு, ஹைதராபாத், சென்னை மற்றும் புனே ஆகிய ஆறு முக்கிய நகரங்களில் கடந்த ஆண்டில் 8.1 மில்லியன் சதுர அடி அலுவலக இடத்தினை நிறுவனங்கள் குத்தகைக்கு எடுத்திருந்தன.
ஆனால் இதே நகரங்களில் நடப்பு ஆண்டில் 3.4 மில்லியன் சதுர அடியினை மட்டுமே நிறுவனங்கள் எடுத்துக் கொள்ளலாம். இது மொத்த அலுவலக நடவடிக்கையில் 11 சதவீத பங்கினை பதிவு செய்கிறது. ஆக ஒட்டுமொத்த குத்தகை செயல்பாடு 2019 ஆண்டை விட, 2020ம் ஆண்டில் கணிசமாக குறையும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
ஏனெனில் அலுவலகங்களை குத்தகைக்கு எடுப்பதில் நிறுவனங்கள் முடிவெடுப்பதில் தாமதமாக உள்ளன என்றும் சாவில்ஸ் ஆலோசகர் கூறியுள்ளார்.
எனினும் அடுத்த இரண்டு ஆண்டுகளில் இந்த எண்ணிக்கை சீராக இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இது அடுத்த 2021ம் ஆண்டில் சுமார் 15 சதவீதம் வரை திரும்ப தயாராக உள்ளது. இதே 2022ம் ஆண்டில் இந்த விகிதம் 25 சதவீதம் வரை வளர்ச்சி காணலாம் என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த காலகட்டங்களில் 6.1 மில்லியன் சதுர அடியில் அலுவலக இடங்கள் குத்தகைக்கு எடுக்கப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
ஒரு புறம் கொரோனாவின் தாக்கத்தினை கட்டுப்படுத்தும் பொருட்டு சமூக இடைவெளியை கடைபிடிக்க அரசு ஊக்குவித்து வருகிறது. இதன் காரணமாக பல அலுவலகங்களில் ஊழியர்களை வீட்டில் இருந்து பணியாற்ற ஊக்குவித்து வருகின்றன. எனினும் இது இனி வரும் காலங்களில் அலுவலகத்திற்கு திரும்பும்போது, நிறுவனங்களுக்கு தேவை அதிகரிக்கலாம்.
இதனால் பல நிறுவனங்கள் தங்களுக்கு தேவையான அதிக இடமுள்ள அலுவலகங்களை தேடிப்பிடித்து, பணியை தொடங்கலாம். ஆக ஒருபுறம் வீட்டில் இருந்து பணி புரிவது இருந்தாலும், மறுபுறம் வலுவான வெளிப்பாடு இருக்கலாம் என்றும் இங்கிலாந்தை தளமாகக் கொண்ட சாவில்ஸ் தனது இந்திய நடவடிக்கைகளை கடந்த 2016ல் தான் தொடங்கியது.
More From GoodReturns

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

ஹார்முஸ் ஜலசந்தியில் சிக்கி இருக்கும் 700 எண்ணெய் கப்பல்கள்:ஒரு இன்ச் நகர்ந்தா கூட சோலி முடிஞ்சிடும்

சவுதி அரேபியாவில் இருக்கும் இந்தியர்களே உஷார்.. இந்திய தூதரகத்தின் முக்கிய அறிவிப்பு வெளியானது..! #NRI



Click it and Unblock the Notifications