விழி பிதுங்கி நிற்கும் இந்திய எண்ணெய் நிறுவனங்கள்: ஈரான் போரால் பெட்ரோல் விற்பனையில் புது பிரச்சினை

இந்தியாவிலிருந்து பல்லாயிரம் கிலோ மீட்டர் தொலைவில் இருக்கக்கூடிய ஈரானில் நடைபெறக்கூடிய போர் இந்தியாவை சேர்ந்த கோடிக்கணக்கான சாமானிய மக்கள் தொடங்கி பெரிய பெரிய நிறுவனங்கள் வரை மிகத் தீவிரமான பாதிப்புகளை ஏற்படுத்த தொடங்கிவிட்டது. எங்கோ ஒரு நாட்டில் யாரோ இருவர் சண்டை போட்டுக் கொள்கிறார்கள் என நம்மால் இருந்துவிட முடியாது. ஏனெனில் அங்கே எத்தனை நாட்கள் போர் நீடிக்கிறதோ அதைவிட அதிகமான நாட்களுக்கு அதன் வலியை நாம் உணரப் போகிறோம்.

சாமானிய மக்களை பொருத்தவரை வீட்டுக்கு தேவையான சிலிண்டர் கிடைப்பது தாமதம் ஆகிறது, ஹோட்டல் சாப்பாடு கிடைக்காத சூழல் வந்துவிட்டது, ஆட்டோக்கள் எண்ணிக்கை குறைந்ததால் ஆட்டோ கட்டணங்கள் உயர்ந்துவிட்டது, டீக்கடைகளில் டீ, காபி உள்ளிட்டவற்றின் விலையை உயர்த்தி விட்டார்கள். ஆங்காங்கே செயல்படக்கூடிய சில உணவகங்களிலும் உணவின் விலையை உயர்த்தி விட்டார்கள் அதேபோல குறைந்த எண்ணிக்கையிலான உணவுகள் தான் விற்பனைக்கு வருகின்றன.

விழி பிதுங்கி நிற்கும் இந்திய எண்ணெய் நிறுவனங்கள்: ஈரான் போரால் பெட்ரோல் விற்பனையில் புது பிரச்சினை

நிறுவனங்களை பொறுத்தவரை இந்த பாதிப்பு இன்னும் அதிகம. ஏராளமான நிறுவனங்களுக்கு எல்பிஜி கிடைக்காததால் தொழிலே செய்ய முடியாத சூழல் உண்டாகி இருக்கிறது. இது ஒரு புறம் இருக்க எல்பிஜி அடுத்து இந்தியாவில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடு ஏற்படுமோ என்ற அச்சத்தில் ஏராளமான வாகன ஓட்டிகள் பெட்ரோல் நிலையங்களில் குவிந்து டேங்குகளை நிரப்பி கொண்டு செல்வதை பார்க்க முடிகிறது.

தட்டுப்பாடு ஏற்படுமோ என்ற அச்சத்தில் மக்கள் பெட்ரோல் பங்குகளில் குவிந்ததால் ஒரே நாளில் பெட்ரோல் விற்பனை 100% டீசல் விற்பனை 75 சதவீதமும் அதிகரித்தது என சொல்லப்படுகிறது. பெட்ரோல், டீசல் விற்பனை அதிகரித்திருப்பதால் இந்த நிறுவனங்களுக்கு நல்ல லாபம் என நாம் நினைப்போம். ஆனால் உண்மை நிலவரம் வேறு மாறியாக நிற்கிறது. சிஸ்டமேட்டிக்ஸ் இன்ஸ்டிட்யூட் நிறுவனம் இந்திய எண்ணெய் விநியோக நிறுவனங்களான பாரத் பெட்ரோலியம் , ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் மற்றும் இந்தியன் ஆயில் நிறுவனங்கள் பெரிய அளவில் நஷ்டம் அடைந்திருப்பதாக கூறுகிறது.

விழி பிதுங்கி நிற்கும் இந்திய எண்ணெய் நிறுவனங்கள்: ஈரான் போரால் பெட்ரோல் விற்பனையில் புது பிரச்சினை

இந்த நிறுவனங்கள் விற்பனை செய்யக்கூடிய ஒவ்வொரு லிட்டர் பெட்ரோலுக்கும் தலா 20 ரூபாயும் ஒவ்வொரு லிட்டர் டீசலுக்கும் தலா 45 ரூபாயும் நஷ்டமடைகின்றனவாம். தினம்தோறும் இந்த நிறுவனங்கள் 2000 கோடி ரூபாய் நஷ்டத்தில் செயல்படுகின்றன என அந்த நிறுவனம் வெளியிட்டு இருக்கும் அறிக்கை குறிப்பிடுகிறது. பெட்ரோல் விற்பனையில் 1650 கோடி , டீசல் விற்பனையில் 350 கோடி நஷ்டம் ஏற்படுகிறது என கூறுகிறது.

Also Read

ஹார்முஸ் ஜலசந்தி மூடப்பட்டு கச்சா எண்ணெய் விநியோகம் தடைப்பட்டு விட்டது. இதனால் மற்ற நாடுகளில் இருந்து கச்சா எண்ணெய் வாங்க வேண்டும். போர் காரணமாக கச்சா எண்ணெய் கொண்டு வரக்கூடிய செலவு என்பது இந்த நிறுவனங்களுக்கு அதிகரித்துவிட்டது. காப்பீட்டு பிரீமியம் அதிகரித்துவிட்டது , சரக்குகளின் கட்டணம் அதிகரித்து விட்டது என சிஸ்டமேட்டிக்ஸ் நிறுவனம் கூறுகிறது. டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பும் உயர்ந்திருப்பதும் ஒரு காரணம்.

இதற்கு முன்பு இந்திய நிறுவனங்களுக்கு சந்தை விலையில் இருந்து தள்ளுபடி விலைக்கு கச்சா எண்ணெய் கொடுத்து வந்த ரஷ்யா, அமெரிக்காவின் அழுத்தத்தால் இந்தியா எண்ணெய் வாங்குவதை நிறுத்திக் கொண்டதால் தற்போது சந்தையை விலையை விட கூடுதலாக எண்ணெய் விற்பனை செய்கிறதாம். இதன் காரணமாக இந்தியாவை சேர்ந்த நிறுவனங்களுக்கு ஒவ்வொரு லிட்டர் பெட்ரோல் விற்பனையிலும் 20 ரூபாய் நஷ்டமும் ஒவ்வொரு லிட்டர் டீசல் விற்பனையிலும் 45 ரூபாய் நஷ்டமும் ஏற்படுவதாக அந்த நிறுவனம் கூறுகிறது.

Recommended For You

அதேபோல எல்என்ஜி விலையும் 50% உயர்ந்திருக்கிறதாம். இந்தியாவிற்கு எல்என்ஜி விநியோகம் செய்து வரக்கூடிய கத்தார் அதன் விலையை இந்த ஒரு மாத காலத்தில் 50 சதவீதம் அதிகரித்து விட்டதாம். எனவே எண்ணெய் விற்பனை நிறுவனங்களுக்கு இது மிக மோசமான காலம் என சிஸ்டமேட்டிக்ஸ் நிறுவனம் கூறியிருக்கிறது. அரசு வரி சலுகை ஏதேனும் வழங்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அப்படி எந்த ஒரு அறிவிப்பையும் வெளியிடவில்லை என தெரிவித்துள்ளது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+