கொரோனா வைரஸ் பரவலுக்கு மத்தியில் இந்த நோயிலிருந்து மக்களை பாதுகாப்பதிலும், இந்த நோயினை எப்படியேனும், நாட்டை விட்டு துரத்தியே ஆக வேண்டும் என மருத்துவ துறை போராடி வருகிறது.
அதிலும் இந்தியா மட்டும் அல்ல, உலகம் முழுக்க உள்ள மருந்து நிறுவனங்கள் இந்த கொடிய வைரஸூக்கு, எப்படியேனும் தடுப்பு மருந்து கண்டு பிடித்தால் போதும் என பல ஆயிரம் கோடிகளை முதலீடு செய்து வருகின்றன.
இந்த நிலையில் கொரொனாவின் தாக்கத்தினை முறியடிப்பதில் மருந்து உற்பத்தியாளர்களும், விநியோகஸ்தர்களும் முக்கிய பங்காற்றி வருகின்றனர்.
அரசு நடவடிக்கை
இந்த நிலையில் மருந்து உற்பத்திக்கு தேவையான மூலப்பொருட்களின் இருப்பு மற்றும் போதுமான உள்நாட்டு உற்பத்தியை உறுதி செய்வதற்காக மத்திய அரசு நடவடிக்கையினை தொடங்கியுள்ளது. மேலும் இந்திய மருந்தியல் துறை அதிகளவில் சீனாவினை நம்புவதை குறைக்க இந்த நடவடிக்கை உதவும் என்றும் கூறப்படுகிறது.
சீனாவில் இருந்து இறக்குமதி
இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் மருந்து உற்பத்திக்கு தேவையான மூலப்பொருட்கள் கால் பங்கு சீனாவில் இருந்து தான் இறக்குமதி செய்யப்படுகிறது. இந்த நிலையில் அடுத்த ஐந்து ஆண்டுகளில் மருந்தியல் துறையினை ஊக்குவிப்பதற்காக 3,000 கோடி ரூபாய் நிதி முதலீட்டில் மூன்று Bulk Drug Parks உருவாக்கப்படும் என்றும் அரசாங்கம் அறிவித்துள்ளது.
அரசு உறுதி
இது தவிர 6,940 கோடி ரூபாய் Key Starting Materials மற்றும் Active Pharmaceutical Ingredients உள்ளிட்ட மருந்துகள் உள்நாட்டு உற்பத்தியை மேம்படுத்த அடுத்த எட்டு ஆண்டுகளில் முதலீடு செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் ஆக்டிவ் பார்மசூட்டிகல் பொருட்கள் தொடர்ந்து கிடைக்கச் செய்வதில் இந்தத் துறைக்கு உதவுவதில் அரசு உறுதியாக இருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.
இந்தியாவின் பங்கு
உலகளாவிய மருந்து சந்தையில் தற்போது இந்தியா 20% பங்கு வகித்து வருகிறது. குறிப்பாக அமெரிக்காவில் விற்கப்படும் ஒவ்வொரு மூன்றாவது மாத்திரையும் இந்தியாவில் இருந்து சப்ளை செய்யப்படுவது தான். இந்த நிலையில் அனைத்து ஏபிஐகள் தயாரிக்கும் திறமையும் இந்தியாவுக்கு உள்ளது. ஆக அரசின் இந்த அதிரடி நடவடிக்கை நாட்டில் தொழில் துறையை ஊக்குவிக்கவும், மருத்துவ துறையில் பல ஆண்டுகளாக இழந்து வந்த ஆதிக்கத்தினை தொடர்ந்து பெறவும் இது உதவும்.
அரசு கோரிக்கை
ஆக இது வளர்ச்சிக்கான ஒரு படி தான். மேலும் ஏபிஐ.களை இந்தியாவிலேயே தயாரிக்க வேண்டியதன் முக்கியத்துவத்தையும் தெரிந்து கொள்ள வேண்டும். கொரோனா வைரஸ் ஆர்.என்.ஏ. பரிசோதனை உபகரணங்களை போர்க்கால அடிப்படையில் உற்பத்தி செய்ய வேண்டும் என்றும் இத்துறை தலைவர்கள் அரசு கோரிக்கை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
More From GoodReturns

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

அட்சய திருதியைக்கு தங்கம் வாங்குற பிளான் இருக்கா? இப்படி செஞ்சா குறைஞ்ச விலைக்கு தங்கம் கிடைக்கும்

90ஸ் கிட்ஸ்களின் Gmail பிரச்சினைக்கு தீர்வு தந்த சுந்தர் பிச்சை: பழைய ஐடி-க்கு குட்பை..!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

PPF-ல் ஒரு சின்ன மேஜிக்! லட்சக்கணக்கில் லாபம் பார்க்க இந்த ஒரு டிப்ஸ் போதும்!

பெட்ரோல் விலை லிட்டர் ரூ.119, டீசல் விலை லிட்டர் ரூ.192: உண்மையை போட்டுடைத்த அரசு..!!



Click it and Unblock the Notifications