இந்திய அரசியல் வரலாற்றில் விமானம் மற்றும் ஹெலிகாப்டர் விபத்துகள் பல முக்கிய தலைவர்களின் உயிர்களை பறிந்துள்ளது. கடந்த 25 ஆண்டுகளில் நிகழ்ந்த பல்வேறு விபத்துகள் அரசியல் உலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.
இந்தச் சம்பவங்கள் பெரும்பாலும் வானிலை, தொழில்நுட்பப் கோளாறு அல்லது மனிதத் தவறுகளால் ஏற்பட்டவை. கடந்த 25 வருடத்தில் நிகழ்ந்த முக்கிய 10 விபத்துகளை விரிவாகப் பார்க்கலாம். இன்று அஜித் பவார் பயணித்த விமான விபத்துக்குள்ளாகி அவர் மரணித்த நிலையில் அரசியல் தலைவர்களின் பாதுகாப்பு குறித்த விவாதங்களை நாடு முழுவதும் எழுந்துள்ளது.

அஜித் பவார் விமான விபத்து
ஜனவரி 28, 2026 அன்று மகாராஷ்டிரா துணை முதலமைச்சரும் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவருமான அஜித் பவார் பயணித்த Learjet 45 விமானம் பாராமதி விமான நிலையத்தில் அவசர தரையிறக்கப்பட்ட போது விபத்துக்குள்ளானது.
விபத்தில் அஜித் பவார் உள்ளிட்ட ஐந்து பேர் உயிரிழந்தனர். விமானத்தில் பவார் தவிர, இரண்டு பாதுகாப்பு அதிகாரிகள், ஒரு உதவியாளர் மற்றும் இரண்டு விமானிகள் இருந்தனர். அவர் ஜில்லா பரிஷத் தேர்தல் பிரச்சாரத்திற்காக பராமதி சென்று கொண்டிருந்தார். DGCA இந்த விபத்தில் யாரும் உயிர் பிழைக்கவில்லை என்று உறுதிப்படுத்தியது. விபத்தின் காரணம் குறித்த விசாரணை நடைபெற்று வருகிறது.
2025: விஜய் ரூபானி விமான விபத்து
ஜூன் 12, 2025 அன்று குஜராத் முன்னாள் முதலமைச்சர் விஜய் ரூபானி (பாஜக) Air India Boeing 787 Dreamliner விமானத்தில் பயணித்தபோது விபத்துக்குள்ளானார். அகமதாபாத்திலிருந்து லண்டன் சென்ற விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில் விழுந்தது. இந்த விபத்தில் 240க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். ரூபானி முக்கிய அரசியல் தலைவர்களில் ஒருவராக இருந்தார். இந்த விபத்து இந்திய விமானப் போக்குவரத்து வரலாற்றில் மிகப் பெரிய இழப்புகளில் ஒன்றாக பதிவாகியுள்ளது.
2021: ஜெனரல் பிபின் ராவத் ஹெலிகாப்டர் விபத்து
டிசம்பர் 8, 2021 அன்று இந்திய பாதுகாப்பு படையின் தலைமைத் தளபதி ஜெனரல் பிபின் ராவத் மனைவி மற்றும் பிற அதிகாரிகளுடன் IAF Mi-17V5 ஹெலிகாப்டரில் பயணித்தபோது தமிழ்நாட்டின் குன்னூர் அருகே விபத்துக்குள்ளானார். ஹெலிகாப்டர் திடீரென தீப்பிடித்து விழுந்தது. இந்த விபத்து பாதுகாப்பு படையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
2009: ஒய்.எஸ். ராஜசேகர ரெட்டி ஹெலிகாப்டர் விபத்து
செப்டம்பர் 2, 2009 அன்று ஆந்திரப் பிரதேச முதலமைச்சர் ஒய்.எஸ். ராஜசேகர ரெட்டி (YSR) Bell-430 ஹெலிகாப்டரில் பயணித்தபோது நல்லமலா வனப்பகுதியில் விபத்துக்குள்ளானார். கனமழை மற்றும் மோசமான வானிலை காரணமாக ஹெலிகாப்டர் கட்டுப்பாட்டை இழந்து விழுந்தது. இந்த விபத்து ஆந்திர அரசியலில் பெரும் இழப்பாக இருந்தது.
2011: Dorjee Khandu ஹெலிகாப்டர் விபத்து
ஏப்ரல் 30, 2011 அன்று அருணாச்சலப் பிரதேச முதலமைச்சர் Dorjee Khandu ஹெலிகாப்டரில் பயணித்தபோது சேலா பாஸ் அருகே விபத்துக்குள்ளானார். மோசமான வானிலை காரணமாக ஹெலிகாப்டர் மலைப்பகுதியில் விழுந்தது. இந்த விபத்து அருணாச்சல அரசியலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.
2001: மாதவராவ் சிந்தியா விமான விபத்து
செப்டம்பர் 30, 2001 அன்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் அமைச்சருமான மாதவராவ் சிந்தியா தனியார் விமானத்தில் கான்பூர் சென்றபோது விபத்துக்குள்ளானது. விமானம் இயந்திரப் கோளாரு காரணமாக விழுந்தது. இந்த விபத்து காங்கிரஸ் கட்சிக்கு பெரும் இழப்பாக இருந்தது.
2002: ஜி.எம்.சி. பாலயோகி ஹெலிகாப்டர் விபத்து
மார்ச் 3, 2002 அன்று லோக்சபா சபாநாயகர் ஜி.எம்.சி. பாலயோகி தனியார் ஹெலிகாப்டரில் பயணித்தபோது ஆந்திரப் பிரதேசத்தின் கைகலூர் அருகே அவசர தரையிறக்கம் செய்யப்பட்டு விபத்துக்குள்ளானார். ஹெலிகாப்டர் பழுது காரணமாக விழுந்தது.
2005: ஒ.பி. ஜிண்டால் மற்றும் சுரேந்தர் சிங் ஹெலிகாப்டர் விபத்து
மார்ச் 31, 2005 அன்று ஹரியானா அமைச்சரும் தொழிலதிபருமான ஒ.பி. ஜிண்டால் மற்றும் அவரது சகா சுரேந்தர் சிங் ஹெலிகாப்டரில் பயணித்தபோது சஹாரன்பூர் அருகே விபத்துக்குள்ளானார்கள். ஹெலிகாப்டர் தீப்பிடித்து விழுந்தது. இந்த விபத்து ஹரியானா அரசியலில் பெரும் இழப்பாக இருந்தது.
இந்த விபத்துகள் இந்திய அரசியலில் பெரும் இழப்புகளை ஏற்படுத்தியுள்ளன. பல விபத்துகளுக்கு மோசமான வானிலை, இயந்திரப் கோளாறு மற்றும் மனிதத் தவறுகள் காரணமாக இருந்தன. தற்போது DGCA மற்றும் விமான போக்குவரத்து துறை கடுமையான விதிமுறைகளை பின்பற்றி வருகின்றன. இதன் மூலம் வரும் காலத்தில் இதுபோன்ற இழப்புகளை தவிர்க்க உதவும்.
More From GoodReturns

தங்கம் - வெள்ளி: ஆனந்த் ஸ்ரீனிவாசன் வார்னிங்.. பேண்ட் சட்டை எல்லாம் ஊறிவிடுவாங்க..!

எல்பிஜி தட்டுப்பாட்டுக்கு முடிவு: இந்தியாவுக்கு வரும் 92,700 மெட்ரிக் டன் கேஸ்.. மத்திய அரசு அறிவிப்பு!!

சிலிண்டர் தட்டுப்பாட்ட விடுங்க!! ஈரான் போரால் நாட்டின் முதுகெலும்புக்கே பிரச்சினை வரப்போகுது!!

LPG தட்டுப்பாடு.. அதானிக்கு அடித்த யோகம்.. 2 நாளில் கோடி கோடியாய் பண மழை..

Work From Home.. அடுத்தடுத்து அறிவிப்பை வெளியிட்ட ஐடி நிறுவனங்கள்.. சென்னை ZOHO ஊழியர்களுக்கு 2 வார WFH..!!

முடிவுக்கு வருகிறதா ஈரான் போர்? 3 கண்டிஷன்களை வெளியிட்ட ஈரான் அதிபர்..!! அடுத்தது என்ன?

மதுரை மக்களுக்கு மோடி அரசு கொடுத்த பரிசு!! இனி நினைச்ச நேரத்துக்கு எல்லாம் வெளிநாட்டுக்கு பறக்கலாம்!!

மீண்டும் Work From Home.. கொரோனாவை விட மோசமானது இந்த ஈரான் போர்..!!

ஏஐ தொழில்நுட்பத்தின் கோரமுகம்.. Adode சிஇஓ சாந்தனு நாராயண் வெளியேற்றம்..!!

சிலிண்டர் இணைப்பு வைத்திருப்போருக்கு மத்திய அரசு முக்கிய அறிவிப்பு!! உடனே இந்த வேலையை முடிங்க!!

ஈரான் போரில் பாகிஸ்தானுக்கு மறைமுக பங்கு: வெளிச்சத்திற்கு வந்தது பாகிஸ்தானின் இரட்டை வேடம்!!



Click it and Unblock the Notifications