2020ல் பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்குப் பெரிய அளவில் உதவிய ஐபிஓ முதலீடுகள் 2021லும் களைக்கட்டத் துவங்கியுள்ளது என்று தான் சொல்ல வேண்டும். ஆம் இந்த வருடம் ஆரம்பமே அரசு கட்டுப்பாட்டில் இருக்கும் முக்கியமான என்பிஎப்சி நிறுவனமான இந்தியன் ரெயில் பைனான்ஸ் கார்ப் ஐபிஓ வெளியிட உள்ளதால் முதலீட்டாளர்கள் மத்தியில் ஆர்வம் அதிகரித்துள்ளது.
ஐபிஓ முதலீட்டாளர்களுக்கு மறக்க முடியாத ஒன்றாக இருக்கும் ஐஆர்சிடிசி நிறுவனத்திற்கு அடுத்தாகத் தற்போது இந்தியன் ரெயில் பைனான்ஸ் கார்ப் ஐபிஓ மூலம் பங்குச்சந்தையில் பட்டியலிட உள்ளது.

இந்தியன் ரெயில் பைனான்ஸ் கார்ப் நிறுவனம் ரயில்வே அமைச்சகத்தின் நேரடி கட்டுப்பாட்டில் உள்ளது. இந்நிறுவனம் ரயில்வே துறையின் நிதியியல் சேவை பிரிவாக இயங்குகிறது.
ரயில்வே துறைக்குத் தேவையானவற்றை வாங்குவது, ரயில்வே துறையின் சொத்துக்களைக் குத்தகைக்கு விடுவது, ரயில்வே துறையின் கீழ் இருக்கும் பிற நிறுவனங்களை நிர்வாகம் செய்வது என மிகவும் முக்கியமான பணிகளைச் செய்கிறது.
2020 ஐபிஓ வெற்றியைத் தொடர்ந்து 2021ஆம் ஆண்டில் 30க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் ஐபிஓ வெளியிட முடிவு செய்துள்ள நிலையில் முதல் நிறுவனமாக இந்தியன் ரெயில் பைனான்ஸ் கார்ப் வருகிற ஜனவரி 18ஆம் ஐபிஓ வெளியிட உள்ளது.
இந்தியன் ரெயில் பைனான்ஸ் கார்ப் இந்த ஐபிஓ திட்டத்தின் வாயிலாகச் சுமார் 178.20 கோடி பங்குகளை விற்பனை செய்து சுமார் 4,600 கோடி ரூபாய் அளவிலான முதலீட்டைத் திரட்ட முடிவு செய்துள்ளது. 10 ரூபாய் முகமதிப்புக் கொண்ட இந்தியன் ரெயில் பைனான்ஸ் கார்ப் பங்குகள் 25 முதல் 26 ரூபாய்க்கு ரீடைல் சந்தையில் விற்பனை செய்யப்பட உள்ளது.
இதன் மூலம் முதலீட்டாளர்கள் 25 முதல் 26 ரூபாய் மதிப்பீட்டில் சுமார் 575 பங்குகளை வாங்க வேண்டும். இந்த ஐபிஓ வில் இந்தியன் ரெயில் பைனான்ஸ் கார்ப் சுமார் 16 சதவீத பங்குகளை விற்பனை செய்ய உள்ளது குறிப்பிடத்தக்கது.
More From GoodReturns

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

அட்சய திருதியைக்கு தங்கம் வாங்குற பிளான் இருக்கா? இப்படி செஞ்சா குறைஞ்ச விலைக்கு தங்கம் கிடைக்கும்



Click it and Unblock the Notifications