இந்தியன் ரயில்வே தினமும் கோடிக்கணக்கான ரயில் பயணிகளுக்கு சேவை அளித்து வருகிறது. பயணிகளுக்கு வசதியான ரயில் பயணத்தை வழங்க ரயில்வே துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த வகையில் தற்போது, நாட்டிலேயே முதல் முறையாக ஓடும் ரயிலில் ஏடிஎம் சேவையை அறிமுகம் செய்துள்ளது. ரயில் இயக்கத்தில் இருக்கும்போது, பயணிகள் ரயில் பெட்டியில் பொருத்தப்பட்டுள்ள ஏடிஎம் ஏந்திரத்தில் பயணிகள் பணத்தை எடுத்துக் கொள்ளலாம்.
ரயில்வே இந்த திட்டத்தை சோதனை அடிப்படையில், கடந்த தினங்களுக்கு முன் நாசிக்கில் உள்ள மன்மாட் மற்றும் மும்பை இடையே இயங்கும் பஞ்சவதி எக்ஸ்பிரஸ் ரயிலின் ஏசி பெட்டியில் ஏடிஎம் எந்திரத்தை நிறுவி சோதனை ஓட்டத்தை நடத்தியது. சோதனையின்போது, ரயில் இயக்கத்தில் இருக்கும்போது பயணிகள் ஏடிஎம் எந்திரத்தில் எந்தவித சிரமமும் இல்லாமல் பணத்தை எடுத்தனர். இதனையடுத்து ஓடும் ரயிலில் ஏடிஎம் சேவை சோதனை வெற்றியடைந்தது.

சோதனை ஓட்டம் குறித்து ரயில்வே அதிகாரிகள் கூறுகையில், இகத்புரி மற்றும் கசாரா இடையே குறுகிய கால நெட்வொர்க் இழப்பை தவிர்த்து, சோதனை சீராக நடந்தது. சுரங்கப்பாதைகள் மற்றும் குறைந்த மொபைல் கவரேஜ் காரணமாக மோசமான சிக்னலுக்கு அந்த பகுதி பெயர் பெற்றது என்று தெரிவித்தனர்.
பூசாவலின் கோட்ட ரயில்வே மேலாளர் இட்டி பாண்டே கூறுகையில், பூசாவல் பிரிவு ஏற்பாடு செய்த ஐஎன்எஃப்ஆர்ஐஎஸ் கூட்டத்தின்போது, ரயில்களில் ஏடிஎம் வசதியை அறிமுகப்படுத்தும் யோசனை முன்வைக்கப்பட்டது. இதனையடுத்து இந்த திட்டத்தை எப்படி நடைமுறைப்படுத்துவது என்பது குறித்து விவாதித்தோம்.
ரயில்வேயின் பூசாவல் பிரிவு மற்றும் மகாராஷ்டிரா வங்கியின் கூட்டாண்மை மூலம் புதுமையான மற்றும் கட்டணம் அல்லாத வருவாய் ஐடியா திட்டத்தின் கீழ் இந்த ஏடிஎம் அறிமுகப்படுத்தப்பட்டது. ரயிலின் ஏசி பெட்டியில் இந்த ஏடிஎம் பொருத்தப்பட்டுள்ளது. இருப்பினும் இந்த ரயிலின் 22 பெட்டிகளும் வெஸ்டிபுல்கள் மூலம் இணைக்கப்பட்டுள்ளதால், ரயிலில் உள்ள அனைத்து பயணிகளும் இந்த வசதியை பயன்படுத்திக் கொள்ளலாம்.
பாதுகாப்பிற்காக, ஏடிஎம் ஒரு ஷட்டர் அமைப்புடன் நிறுவப்பட்டுள்ளது. 24 மணி நேரமும் சிசிடிவி கண்காணிப்புடன் மேற்பார்வை செய்யப்படுகிறது. இப்போது மக்கள் ஓடும் ரயிலில் பணம் எடுக்க முடியும். ஏந்திரத்தின் செயல் திறனை நாங்கள் தொடர்ந்து கண்காணிப்போம் என்று தெரிவித்தார்.
ரயில் ஏடிஎம் சேவை பிரபலமடைந்தால் மேலும் பல ரயில்களுக்கு விரிவுப்படுத்தப்படலாம் என்று ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர். அனைத்து ரயில்களிலும் ஏடிஎம் சேவை வந்துவிட்டால் இனி புதிய இடங்களுக்கு செல்லும்போது, ஏடிஎம் எங்கு உள்ளது என்று தேடி அலைய வேண்டிய அவசியம் இனி இருக்காது.
More From GoodReturns

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!



Click it and Unblock the Notifications