இந்தியன் ரயில்வே அவ்வப்போது தனது வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு வசதிகளை செய்து தருகிறது என்பதை பார்த்து வருகிறோம்.
அந்த வகையில் தற்போது இஸ்ரோ நிறுவனத்துடன் இந்தியன் ரயில்வே கைகோர்த்து இருப்பதால் ரயில் பயணிகளுக்கு புதிய வசதி கிடைத்துள்ளது.
இஸ்ரோவுடன் இந்தியன் ரயில்வே கைகோர்த்த நிலையில் ரயில்களின் புறப்பாடு மற்றும் சேரும் நேரம் ஆகியவைகளை இனி துல்லியமாக பயணிகள் தெரிந்து கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
இஸ்ரோவுடன் இந்தியன் ரயில்வே
இந்திய ரயில்வே அமைச்சகம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் இஸ்ரோவுடன் இணைந்து உருவாக்கப்பட்ட நிகழ்நேர ரயில் தகவல் அமைப்பு (RTIS) என்ற தொழில்நுட்பத்தை நிறுவி இருப்பதாக தெரிவித்துள்ளது. இதன் காரணமாக இனி ரயில்களின் புறப்பாடு,சேரும் நேரம் ஆகியவற்றை துல்லியமாக பயணிகள் தெரிந்து கொள்ள முடியும்.
ரியல் டைம் ரயில் தகவல் அமைப்பு
இஸ்ரோவுடன் இணைந்து உருவாக்கப்பட்ட ரியல் டைம் ரயில் தகவல் அமைப்பு (RTIS) என்பது, ரயில்களின் முழு தகவல்களை பெறுவதற்காக அமைக்கப்பட்ட தொழில்நுட்பம் ஆகும். இதன் மூலம் ரயில் நிலையங்களில் ரயில்கள் வந்து சேரும் நேரம் மற்றும் புறப்படும் நேரம் மற்றும் ரன்-த்ரூ ஆகியவைகளை துல்லியமாக அறிந்து கொள்ளலாம்.
30 வினாடிகளில் தகவல்
கண்ட்ரோல் ஆபிஸ் அப்ளிகேஷன் (COA) என்ற தொழில்நுட்ப அமைப்பு ரயில்களின் முழு கட்டுப்பாடுகளையும் கொண்டிருக்கும் என்றும், இது பயணிகளின் தேவையை பூர்த்தி செய்யும் என்றும் கூறப்படுகிறது. பயணிகள் கேட்கும் எந்த தகவலையும் இந்த அப்ளிகேஷன் 30 வினாடிகளுக்குள் தந்துவிடும் என்பது குறிப்பிடத்தக்கது.
கண்காணிப்பு
RTIS தொழில்நுட்ப கொண்ட ரயில்களின் தற்போதைய இருப்பிடம் மற்றும் வேகத்தை ரயில்வே அதிகாரிகளும் கண்காணிக்க முடியும். ரயில்களுக்கு ஏதேனும் பிரச்சனை என்றால் அதற்கான தீர்வுகளையும் அதிகாரிகளிடம் இருந்து கேட்டு தெரிந்து கொள்ள முடியும்
இஸ்ரோ
இஸ்ரோ அமைப்புடன் கைகோர்த்த நிலையில் இதுவரை 21 மின்சார லோகோ ஷெட்களில் 2700 ரயில் இன்ஜின்களுக்கு RTIS சாதனங்கள் நிறுவப்பட்டுள்ளதாகவும், இஸ்ரோவின் சாட்காம் மையத்தை பயன்படுத்தும் வசதிகளை இந்த ரயில்கள் பெற்றிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.