இந்திய ரயில்வே டிசம்பர் 26, 2025 முதல் புதிய கட்டண அமைப்பை அமல்படுத்த உள்ளது. இதன் மூலம் ஆண்டுக்கு ரூ.600 கோடி கூடுதல் வருவாய் கிடைக்கும் என்று ரயில்வே அமைச்சகம் கணித்துள்ளது. நீண்ட தூர பயணங்களுக்கு கட்டணம் சற்று உயர்கிறது. குறுகிய தூர பயணிகள் மற்றும் புறநகர், மாதாந்திர சீசன் டிக்கெட் பயன்படுத்துபவர்களுக்கு கட்டண உயர்வு இல்லை என்பதையும் தெளிவுப்படுத்தியுள்ளது.
புதிய கட்டணம்
215 கி.மீ.க்கு மேல் பயணிப்பவர்களுக்கு கட்டண உயர்வு கொண்டுவரப்படுகிறது. அதாவது சாதாரண வகுப்பில் 215 கி.மீ.க்கு மேல் பயணிப்பவர்களுக்கு கி.மீ.க்கு 1 பைசா கூடுதல் கட்டணமும், மெயில்/எக்ஸ்பிரஸ் ஏசி அல்லாத வகுப்புகள் மற்றும் ஏசி வகுப்புகளில் 215 கி.மீ.க்கு மேல் பயணிப்பவர்களுக்கு கி.மீ.க்கு 2 பைசா கூடுதல் வசூலிக்கப்பட உள்ளது.
உதாரணமாக 500 கி.மீ. ஏசி அல்லாத பயணத்துக்கு ரூ.10 கூடுதல் செலுத்த வேண்டும். சாதாரண வகுப்பில் 215 கி.மீ.க்கும் குறைவான தூரம் பயணித்தால் எந்தவித கட்டண உயர்வும் இல்லை. அனைத்து விதமான ரயில்களிலும் ஏசி பெட்டிகளில் பயணிக்க கி.மீ.க்கு 2 பைசா கட்டணம் உயர்வு.

புறநகர் ரயில்கள் மற்றும் மாதாந்திர சீசன் டிக்கெட்களுக்கு கட்டண உயர்வு இல்லை என அறிவிக்கப்பட்டு உள்ள காரணத்தால். இது தினசரி பயணம் செய்யும் லட்சக்கணக்கான ஊழியர்கள், மாணவர்களுக்கு கூடுதல் சுமை ஏதும் இருக்காது.
மத்திய ரயில்வே துறை ஜூலை 2025இல் செய்யப்பட்ட கட்டண உயர்வு இதுவரை ரூ.700 கோடி கூடுதல் வருவாய் தந்துள்ளது. இப்போதைய மாற்றமும் அதே போல வருவாயை உயர்த்தும். ரயில்வேயின் செலவுகள் உயர்ந்துள்ள நிலையில் இது அவசியமாக பார்க்கப்படுகிறது.
மேலும் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு விடுமுறை காலத்தில் பயணிகள் அதிகரிக்கும் என்பதால் 8 மண்டலங்களில் 244 சிறப்பு ரயில் பயணங்கள் இயக்கப்படும் எனவும், தேவைக்கு ஏற்ப கூடுதல் ரயில்கள் அறிவிக்கப்படும் என்றும் மத்திய ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்திய ரயில்வேயின் புதிய கட்டண அமைப்பு டிசம்பர் 26 முதல் அமலாகிறது.
More From GoodReturns

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

அம்பானி சார் நீங்களா.. சன்டே மும்பையை ஸ்தம்பிக்க விட்ட பெங்களூர் Rameshwaram Cafe..- வீடியோ!

ஈரான் - அமெரிக்கா போர்.. நடுவில் சிக்கிக்கொண்டு தவிக்கும் ஜப்பான்.. பெரும் சீரழிவின் ஆரம்ப புள்ளி இதுதானா..?



Click it and Unblock the Notifications