இந்திய ரயில்வே நிர்வாகம் நவம்பர் 1 முதல், இந்திய ரயில்வேயில் ரயில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்வதற்கான முன்பதிவு காலத்தை 60 நாட்களாக குறைத்துள்ளது. இது தற்போதைய 120 நாட்களில் இருந்து 60 நாட்களாக குறைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. எனவே வரும் நவம்பர் 1ம் தேதி முதல் ரயில்வே பயணிகள் 60 நாட்களுக்கு முன்னதாக மட்டுமே டிக்கெட் முன்பதிவு செய்ய முடியும். இந்த புதிய விதி ஏற்கனவே முன்பதிவு செய்யப்பட்ட டிக்கெட்டுகளை பாதிக்காது. அதேபோல், வெளிநாட்டு பயணிகளுக்கான 365 நாட்கள் என்ற கால அளவில் மாற்றம் செய்யப்படவில்லை.
கடந்த ஏப்ரல் 1, 2015 வரை முன்பதிவு காலம் ஆனது 60 நாட்களாக இருந்தது. பின்னர் அதனை அரசு முன்பதிவு காலத்தை 120 நாட்களாக நீட்டிக்கும் விதிமுறைகளை மாற்றியது. அந்த நேரத்தில், இந்திய ரயில்வே, முன்பதிவு காலம் அதிகமாக இருப்பின் அவை ரத்து செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளதாகவும் கூறி மாற்றியது.

அதற்கு 120 நாட்கள் தேதியை மாற்றுவது என்பது கூடுதல் 60 நாட்கள் எண்ணிக்கையிலான முன்பதிவு ரத்துசெய்தல்கள் மூலம் பணப் பற்றாக்குறை உள்ள ரயில்வே சில கூடுதல் வருவாயைப் பெறுவதை நோக்கமாகக் கொண்டு இதனை செய்துள்ளதாக கூறப்பட்டு வந்தது.
இந்த நிலையில், ஐஆர்சிடிசி ஆனது சமீபத்தில் பல மாற்றங்களைக் கொண்டு வந்துள்ளது. ஒவ்வொரு பயணிக்கும் உறுதியான பெர்த்தை உறுதி செய்வதற்காக ரயில்களில் அடுத்த ஐந்து முதல் ஆறு ஆண்டுகளுக்குள் காத்திருப்புப் பட்டியல்களின் நீண்டகாலப் பிரச்சினையை ஒழிப்பதற்கான திட்டங்கள் உட்பட புதிய மாற்றங்களை செய்துள்ளது. அதேபோல், டிக்கெட் முன்பதிவு செய்வது முதல் பயணத் திட்டமிடல் மற்றும் இந்திய ரயில்வேயில் தனிநபர்கள் ஈடுபடும் விதத்தில் மாற்றத்தை ஏற்படுத்தும் வகையில் பயணிகள் பல்வேறு சேவைகளைப் பயன்படுத்தும் ரயில்வே சூப்பர் செயலியை அறிமுகப்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.
இதற்கிடையில், ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷவ், கைத்தறி மற்றும் உணவின் தரத்தை கண்காணிப்பது மட்டுமின்றி, ரயில்களின் ஆக்கிரமிப்பை மேம்படுத்தவும் AI-செயல்படுத்தப்பட்ட கேமராக்களை செயல்படுத்தும் திட்டங்கள் உள்ளதாகவும், இது தரவுகளை ஆய்வு செய்வதன் மூலமும், முன்பதிவு விளக்கப்படம் தயாரிக்கப்பட்ட பிறகு இருக்கை கிடைப்பதை கணிப்பதன் மூலமும் செய்யப்படுகிறது என்றும் ரயில்களின் ஆக்கிரமிப்பை சரிபார்க்க நாங்கள் பயன்படுத்திய AI மாடல், உறுதிப்படுத்தப்பட்ட டிக்கெட்டின் கட்டணத்தை 30% க்கும் அதிகமாக அதிகரிக்க வழிவகுத்தது என்று கூறியுள்ளார்.
More From GoodReturns

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

அம்பானி சார் நீங்களா.. சன்டே மும்பையை ஸ்தம்பிக்க விட்ட பெங்களூர் Rameshwaram Cafe..- வீடியோ!

ஈரான் - அமெரிக்கா போர்.. நடுவில் சிக்கிக்கொண்டு தவிக்கும் ஜப்பான்.. பெரும் சீரழிவின் ஆரம்ப புள்ளி இதுதானா..?



Click it and Unblock the Notifications