151 மார்டன் ரயில்கள்.. இந்திய ரயில்வே துறையின் ரூ.30,000 கோடி திட்டம்..!
இந்தியாவில் சுமார் 109 வழித்தடத்தில் புதிய பாசஞ்சர் ரயில் இயக்க சுமார் 30,000 கோடி ரூபாய் மதிப்பிலான முதலீட்டைத் தனியார் நிறுவனங்களிடம் இருந்து ஈர்க்க இந்திய ரயில்வே துறை முடிவு செய்துள்ளது. இது இந்திய ரயில்வே துறை போக்குவரத்தை மிகப்பெரிய அளவில் மாற்றும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்திய ரயில்வே துறை தற்போது தனியார் நிறுவனத்தின் ஏல விண்ணப்பத்தைப் பெற முடிவு செய்துள்ள நிலையில், ஆர்டர்-ஐ பெறும் தனியார் நிறுவனங்கள் 35 வருடம் ரயில்களை இயக்கலாம். மேலும் ரயில் இயக்குவதற்கான நிதி முதலீடு, பொருட்கள் கொள்முதல், செயல்படுத்துதல், பழுது பார்த்தல் என அனைத்தும் தனியார் நிறுவனங்களின் பொறுப்பு.
இந்தத் திட்டத்தில் தேர்வு செய்யப்படும் தனியார் நிறுவனங்கள் இந்திய ரயில்வே துறைக்கு நிலையான இழுத்துச் செல்லப்படுவதற்கான கட்டணங்கள், பயன்பாட்டிற்குத் தகுந்த மின்சாரக் கட்டணங்கள், மொத்த வருவாயில் ஒரு பங்கு தொகையைக் கொடுக்க வேண்டும்.
இலக்கு
இத்திட்டத்தின் மூலம் இந்திய ரயில்வே, மக்களின் தேவையைப் பூர்த்தி செய்யவும், அதிகப்படியாகப் பாதுக்காப்பு கொடுக்கவும், உலகதரம்வாய்ந்த அனுபவத்தைப் பயணிகளுக்குக் கொடுக்கவும், அதிகப்படியான வேலைவாய்ப்புகளை உருவாக்கவும், maintenance அளவை குறைக்கவும், கால தாமதத்தைக் குறைக்கவும் முடியும் என இந்திய ரயில்வே தெரிவித்துள்ளது.
3-5 வருடங்கள்
இத்திட்டத்தைக் கையில் எடுக்கும் தனியார் நிறுவனங்கள் போக்குவரத்துத் தளத்தைத் தயாரிக்கவும், இந்திய ரயில்வே துறையிடம் சேவைக்கான ஒப்புதல் பெறவும் குறைந்தது 3 முதல் 5 வருட காலம் ஆகும் என முன்னாள் ரயில்வே துறை நிர்வாகத் தலைவர் அருனேந்திரா குமார் தெரிவித்தார்.
நன்மை
தனியார்த் துறை 100 வருடப் பழமையான இந்திய ரயில்வே துறைக்குள் வரும் நிலையில், ரயில் பெட்டியின் டிசைன் மிகப்பெரிய அளவில் மாறும் வாய்ப்புகள் உள்ளது, இதனால் மக்களுக்கு மேம்பட்ட சேவை கிடைக்கும். இதேபோல் இந்தியாவில் 95 சதவீத ரயில்கள் தாமதமாகத் தான் வருகிறது, இந்நிலையில் தனியார் நிறுவனங்கள் களத்தில் இறங்கும் போது இந்த நிலை மாறும்.
151 ரயில், 16 பெட்டிகள்
தற்போது கொடுக்கப்பட்டுள்ள request for qualification அறிக்கையில், தற்போது இந்தியாவில் தயாரிக்கப்படும் 151 புதிய ரயில்கள் 12 குழுவாகத் தயாரிக்கப்பட வேண்டும் என்றும் இது இந்தியாவில் இருக்கும் அனைத்து ரயில் தொழிற்சாலையில் தயாரிக்கப்பட வேண்டும் என்றும், இதேபோல் ஒவ்வொரு ரயிலிலும் 16 பெட்டிகள் இருக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் அதிகப்படியான ரயில் பெட்டிகள் இந்தியாவிலேயே தயாரிக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
160 கிலோமீட்டர் வேகம்
தனியார் முதலீட்டில் தயாரிக்கப்படும் 151 ரயில்களும் மணிக்கு 160 கிலோமீட்டர் வேகம் செல்லும் அளவிற்குத் திறன் வாய்ந்தாக இருக்க வேண்டும் என்று இந்திய ரயில்வே துறை தெரிவித்துள்ளது. இந்தப் புதிய ரயில் இந்தியாவின் வேகமான ரயிலை விடவும் அதிக வேகத்தில் பயணிக்கக் கூடியதாக இருக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
More From GoodReturns

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த ஷாக்.. கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரமா..? தங்கம் விலையில் Big Jump வரபோகுது..!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

டிரம்ப்-ன் அந்த ஒரு வார்த்தை.. ஈரான் அரசு கடும் கோபம்.. வெளியான உச்சக்கட்ட எச்சரிக்கை..!!

3 வாரத்தில் சின்னாபின்னமான துபாய் ரியல் எஸ்டேட்.. தள்ளுபடி விற்பனை ஆரம்பம்.. இந்த ஏரியாவில் தடாலடி விலை சரிவு



Click it and Unblock the Notifications