புறநகர் ரயில் சேவைகளில் தொடங்கி நீண்ட தொலைவிலான எக்ஸ்பிரஸ் ரயில் சேவைகள் வரை நமக்கு குறைந்த கட்டணத்தில் நிறைவான சேவையை வழங்குகிறது இந்திய ரயில்வே. இதனால் தான் உள்ளூரிலேயே வேலைக்கு மற்றும் பள்ளி கல்லூரிக்கு செல்பவர்களும் வெளியூர்களுக்கு செல்பவர்களும் என நாள்தோறும் லட்சக்கணக்கானவர்கள் ரயில்களை பயன்படுத்துகின்றனர்.
இந்திய ரயில்வே பொருத்தவரை நவீன தொழில்நுட்பங்களின் வளர்ச்சிக்கு ஏற்ற வகையில் டிக்கெட் முன்பதிவு முறையில் பல்வேறு மாற்றங்களை கொண்டு வந்திருக்கிறது. இப்போது நாம் ரயில்வே டிக்கெட் வேண்டும் என்றால் நாம் ரயில் நிலையத்திற்கு சென்று வரிசையில் காத்திருக்க வேண்டியதில்லை. நாம் இருக்கும் இடத்திலேயே மொபைல் போனில் ஒரு செயலி வாயிலாகவே டிக்கெட்டை முன்பதிவு செய்துவிட முடியும்.

அந்த வகையில் வரும் மார்ச் ஒன்றாம் தேதியில் இருந்து ரயில்வே டிக்கெட் பெறுவதில் மிகப்பெரிய மாற்றம் அமலுக்கு வர இருக்கிறது. அடிக்கடி வெளியூர் செல்பவர்களும், புறநகர் ரயில்களில் பயணம் செய்பவர்களும் இந்த மாற்றத்தை தெரிந்து வைத்துக் கொள்வது கட்டாயம். இல்லை என்றால் பெரும் சிக்கலுக்கு ஆளாக நேரிடலாம். அன்ரிசர்வ்டு டிக்கெட் மற்றும் பிளாட்பார்ம் டிக்கெட் , சீசன் பாஸ்களை பெற Unreserved ticketing system அதாவது யுடிஎஸ் ( UTS ) செயலியை பயன்படுத்தி வருகிறோம்.
வரும் மார்ச் 1ஆம் தேதியிலிருந்து இந்த யுடிஎஸ் செயலி இயங்காது என இந்திய ரயில்வே அறிவித்திருக்கிறது. அதாவது வரக்கூடிய ஞாயிற்றுக்கிழமை முதல் இந்தியா முழுவதுமே யுடிஎஸ் செயலியின் சேவை நிறுத்தப்படுவதாக இந்திய ரயில்வே அறிவித்திருக்கிறது. அப்படி என்றால் அன்ரிசர்வ்டு டிக்கெட்டுகள் மற்றும் பிளாட்பார்ம் பாஸ்கள், சீசன் டிக்கெட்டுகளை எங்கே சென்று வாங்குவது என்ற சந்தேகம் ஏற்படலாம்.

இதற்கு இந்திய ரயில்வே அண்மையில் அறிமுகம் செய்த ரயில் ஒன் செயலியை பயன்படுத்திக் கொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. இந்திய ரயில்வே கடந்த ஆண்டு ரயில் ஒன் செயலியை அறிமுகம் செய்தது. ரயில்வே சம்பந்தப்பட்ட சேவைகளையும் ஒருங்கிணைத்த ஒரு பிரத்தியேக செயலியாக இது இருக்கிறது.. ரயில் ஒன் செயலியில் நாம் டிக்கெட் முன்பதிவு செய்து கொள்ளலாம், உணவு ஆர்டர் செய்து கொள்ளலாம் ,நம்முடைய புகார்களை பதிவு செய்து அதற்கான நிவாரணத்தை பெறலாம்.
இதற்கு முன்பு ரயில்வே சம்பந்தப்பட்ட ஒவ்வொரு சேவைக்கும் ஒவ்வொரு செயலியை நாம் பயன்படுத்த வேண்டி இருந்தது. ஆனால் ரயில் ஒன் செயலி இவை அனைத்தும் ஒருங்கிணைந்த ஒரு செயலியாக இருக்கிறது. எனவே உங்கள் மொபைல் போனில் ரயில்வே சம்பந்தப்பட்ட அனைத்து செயலிகளையும் அன் இன்ஸ்டால் செய்துவிட்டு இந்த ரயில் ஒன் செயலியை இன்ஸ்டால் செய்து கொண்டால் போதும் என ரயில்வே கேட்டு கொண்டுள்ளது.
அதிகபட்சமான பயணிகளிடம் இதனை கொண்டு சேர்க்க வேண்டும் என்பதற்காக யுடிஎஸ் செயலியின் பயன்பாட்டை நிறுத்துவதாகவும் அறிவித்துள்ளது. யுடிஎஸ் செயலியை பயன்படுத்தக்கூடிய பயணிகள் அதே லாகின் ஐடி மற்றும் பாஸ்வேர்டை கொண்டு ரயில் ஒன் செயலியில் லாகின் செய்து பயன்படுத்தலாம் என தெரிவித்திருக்கிறது. மார்ச் 1 வரை காத்திருக்காமல் இப்போது ரயில் ஒன் செயலியில் அன்ரிசர்வ்டு, பிளாட்பார்ம் டிக்கெட்டுகளை பதிவு செய்து பழகி கொண்டால் சிரமங்களை தவிர்க்கலாம் என கூறுகிறது.
More From GoodReturns

வேறு வழியில்லை.. சீனாவிடம் உதவி கேட்கும் இந்தியா.. ஈரான் போருக்கு மத்தியில் புது பிரச்சனை..!!

தங்கம் - வெள்ளி: ஆனந்த் ஸ்ரீனிவாசன் வார்னிங்.. பேண்ட் சட்டை எல்லாம் ஊறிவிடுவாங்க..!

எல்பிஜி தட்டுப்பாட்டுக்கு முடிவு: இந்தியாவுக்கு வரும் 92,700 மெட்ரிக் டன் கேஸ்.. மத்திய அரசு அறிவிப்பு!!

LPG தட்டுப்பாடு.. அதானிக்கு அடித்த யோகம்.. 2 நாளில் கோடி கோடியாய் பண மழை..

Work From Home.. அடுத்தடுத்து அறிவிப்பை வெளியிட்ட ஐடி நிறுவனங்கள்.. சென்னை ZOHO ஊழியர்களுக்கு 2 வார WFH..!!

முடிவுக்கு வருகிறதா ஈரான் போர்? 3 கண்டிஷன்களை வெளியிட்ட ஈரான் அதிபர்..!! அடுத்தது என்ன?

மதுரை மக்களுக்கு மோடி அரசு கொடுத்த பரிசு!! இனி நினைச்ச நேரத்துக்கு எல்லாம் வெளிநாட்டுக்கு பறக்கலாம்!!

மீண்டும் Work From Home.. கொரோனாவை விட மோசமானது இந்த ஈரான் போர்..!!

ஏஐ தொழில்நுட்பத்தின் கோரமுகம்.. Adode சிஇஓ சாந்தனு நாராயண் வெளியேற்றம்..!!

சிலிண்டர் இணைப்பு வைத்திருப்போருக்கு மத்திய அரசு முக்கிய அறிவிப்பு!! உடனே இந்த வேலையை முடிங்க!!

ஈரான் போரில் பாகிஸ்தானுக்கு மறைமுக பங்கு: வெளிச்சத்திற்கு வந்தது பாகிஸ்தானின் இரட்டை வேடம்!!



Click it and Unblock the Notifications