இந்தியாவில் ஒவ்வொரு நாளும் லட்சக்கணக்கான சாமானிய மக்கள் பயன்படுத்தக்கூடிய ஒரு பொதுப் போக்குவரத்து ரயில்வே. குறைந்த கட்டணத்தில் சௌகரியமான பயணம் மேற்கொள்ள முடியும் என்பதால் இந்தியர்களுக்கு பிடித்தமான போக்குவரத்தாக ரயில்கள் இருக்கின்றன.
இந்திய ரயில்வேயில் பயணம் செய்யக்கூடிய லட்சக்கணக்கான ரயில் பயணிகளுக்கு மிக முக்கியமான ஒரு அறிவிப்பினை இந்திய ரயில்வே வெளியிட்டிருக்கிறது.ரயில் பயணிகள் தங்களுடைய உறுதி செய்யப்பட்ட டிக்கெட்டுகளை ரத்து செய்வதற்கான விதிமுறைகளும், போர்டிங் பாயிண்ட் விதிமுறைகளும் மாற்றப்பட்டுள்ளன. இதனை பயணிகள் தெரிந்து வைத்து கொள்வது நல்லது.

பயணிகளுக்கு டிக்கெட் ரத்து செய்யும் போது அதிக பட்ச தொகை ரீஃபண்ட் கிடைக்க வேண்டும் என்பதற்காகவும், பல்வேறு சௌகரியங்கள் கிடைக்க வேண்டும் என்பதற்காகவும் இந்த மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளதாக ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். வரும் ஏப்ரல் ஒன்றாம் தேதியில் இருந்து நடைமுறைக்கு வரக்கூடிய இந்த மாற்றங்களை ரயில் பயணிகள் தெரிந்து வைத்துக் கொள்வது நல்லது.
திருத்தி அமைக்கப்பட்டு இருக்கக்கூடிய ரயில் டிக்கெட் ரத்து விதிமுறையின் படி பயணிகள் தங்களுடைய ரயில் புறப்படுவதற்கு 72 மணி நேரத்திற்கு முன்னர் தங்களின் உறுதி செய்யப்பட்ட டிக்கெட்டை ரத்து செய்யும்போது அவர்களுக்கு அதிகபட்ச பணம் ரீஃபண்ட் ஆக கிடைக்கும். அதாவதி டிக்கெட் ரத்துக்கான ஒரு குறிப்பிட்ட தொகை மட்டுமே அபராதமாக பெறப்படும்.

அதே வேளையில் 72 மணி நேரத்தில் இருந்து ரயில் புறப்படும் 24 மணி நேரத்திற்குள் டிக்கெட்டை ரத்து செய்யும்போது மொத்த டிக்கெட் கட்டணத்தில் 25% கழித்துக் கொள்ளப்படும், அதேபோல ரயில் புறப்படுவதற்கு 24 மணி நேரத்திலிருந்து 8 மணி நேரத்திற்குள் டிக்கெட்டை ரத்து செய்யும் போது டிக்கெட் கட்டணத்தில் 50 % அபராதமாக பிடித்துக் கொள்ளப்பட்டு மீதமுள்ள தொகை தான் ரீஃபண்ட் ஆக கிடைக்கும்.ரயில் புறப்படுவதற்கு 8 மணி நேரத்திற்கு முன்பு டிக்கெட்டை ரத்து செய்தால் எந்த ஒரு ரீஃபண்டும் கிடைக்காது என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
அடுத்ததாக பயணிகள் தங்களுடைய போர்டிங் பாயிண்ட்டை மாற்றிக் கொள்வதற்கான வசதி கொண்டு வரப்பட்டிருக்கிறது. ரயில் புறப்படுவதற்கு 30 நிமிடங்களுக்கு முன்னர் வரை பயணிகள் தங்களுடைய போர்டிங் பாயிண்ட் அதாவது தாங்கள் ரயில் ஏறக்கூடிய நிலையத்தை மாற்றிக் கொள்ளலாம். எழும்பூரில் ஏற முடியாதவர்கள் தாம்பரத்திற்கு மாற்றிக் கொள்ளலாம் கிண்டியில் ஏற முடியாதவர்கள் செங்கல்பட்டுக்கு மாற்றிக் கொள்ளலாம்.
அந்த வகையில் பயணிகளின் போர்டிங் பாயிண்ட் விதிமுறைகளும் மாற்றி அமைக்கப்பட்டு இருக்கிறது. தற்போதைக்கு போர்டிங் பாயின்ட் மாற்றம் என்பது சார்ட் தயாரிப்புக்கு முன்பு வரை மட்டுமே அனுமதிக்கப்பட்டு இருந்தது. தற்போது ரயில் புறப்படும் 30 நிமிடங்களுக்கு முன்பு வரை மாற்றும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
தரகர்கள் பலரும் முன் கூட்டியே பல்க்காக டிக்கெட்டை முன்பதிவு செய்துவிட்டு ரயில் புறப்படும் முன்பு திடீரென அதனை ரத்து செய்கிறார்கள். இதில் அதிக பணம் ரீ ஃபண்ட் கிடைப்பதால் இதனை வாடிக்கையாக கொண்டிருக்கிறார்கள் இதனால் சாதாரண மக்களுக்கு உறுதி செய்யப்பட்ட டிக்கெட்டுகள் கிடைப்பதில் சிக்கல் நீடிப்பதால் டிக்கெட் ரத்து விதிமுறைகளை மாற்றியுள்ளதாக ரயில்வே அதிகாரிகள் கூறுகின்றனர்.
இதற்கு முன்பு ரயில் புறப்படும் 48 மணி நேரத்திற்கு முன்பு டிக்கெட்டை ரத்து செய்தால் ஒரு டிக்கெட்டுக்கு தலா 180 ரூபாய் மற்றும் ஜிஎஸ்டி (டிக்கெட்டை வகுப்பை பொறுத்து மாறும்) பிடித்தம் செய்யப்படும், இது இப்போது 72 மணிநேரம் முன்பு என மாற்றப்பட்டுள்ளது. இதற்கு முன்பு ரயில் புறப்படும் 4 மணி நேரம் முன்பு வரை டிக்கெட் ரத்து செய்யப்பட்டால் கூட 50% தொகை ரீஃபண்ட் கிடைக்கும், ஆனால் இப்போது 8 மணி நேரம் முன்பு வரை என மாற்றப்பட்டுள்ளது.
More From GoodReturns

இப்படியே போனா கஜானா காலியாகிடும்: அமெரிக்க டாலரை கைவிடும் இந்தியா? ஈரான் போரால் நடக்கும் மாற்றம்?

தங்கம் விலை ரூ.9000 குறைவு, வெள்ளி விலை ரூ.50,000 சரிவு: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன்: படிச்சு படிச்சு சொன்னேன்.. யாரும் கேட்ல 'Big Drop'.. வெள்ளி அதோ கதி..!!

ரேஷன் அட்டை வைத்திருப்பவர்களுக்கு முக்கிய அப்டேட்.. 3 மாதத்திற்கான பொருள் ஒரே நேரத்தில்.. மத்திய அரசின் முடிவு

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

1986-ல் ஒரு புல்லட் இவ்வளவு தானா? வைரலாகும் பழைய பில்! அப்பவே கெத்து தான்!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

52 வார சரிவில் HDFC வங்கி பங்குகள்.. ஓரேயொரு நபர் செய்த வேலையால்.. ரூ.1 லட்சம் கோடி காலி..!!!

இந்தியர்கள் உடனே வெளியேறலாம்; நாங்களே டிக்கெட் போட்டு தரோம்: அமெரிக்க அரசின் அட்டூழியம்

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஈரான் போரில் டிரம்ப் போடும் கணக்கே வேற..! குறி வச்சது கமேனிக்கு இல்ல..! வெளிவரும் உண்மை..!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!



Click it and Unblock the Notifications

