இந்திய ரியல் எஸ்டேட் துறை, கடந்த சில ஆண்டுகளில் வேகமாக வளர்ந்து வந்த நிலையில், 2025இல் மந்தநிலையை சந்தித்துள்ளது. தேசிய அளவில் வீடு விற்பனை 2024ஐ விட சுமார் 12% குறைந்துள்ளது என்று பல அறிக்கைகள் தெரிவிக்கின்றன. பெங்களூரு மற்றும் ஹைதராபாத் போன்ற ஐடி துறை வர்த்தகம் பிரதானமாக இருக்கும் நகரங்களில் இந்த சரிவு மிகவும் தெளிவாகத் தெரிகிறது. வீடு வாங்குபவர்கள் பெரிய சொத்து முடிவுகளை தாமதப்படுத்துவதால், வீடு விற்பனை மெதுவாக நடக்கின்றன. இது ஐடி துறை ஊழியர்களின் வருமான நிலைத்தன்மை, வேலைவாய்ப்புக்கு உத்தரவு இல்லைமை போன்ற பிரச்சனையால் ஏற்பட்டுள்ளது.
ஐடி துறை அச்சம்:
பெங்களூரு மற்றும் ஹைதராபாத் போன்ற நகரங்களின் ரியல் எஸ்டேட் துறை ஐடி மற்றும் ஸ்டார்ட்அப் நிறுவனங்களை நம்பியுள்ளன. இங்கு வேலை செய்யும் ஊழியர்களுக்கு வருமானம் சம்பளம் மட்டுமின்றி, போனஸ், ஈஎஸ்ஓபி (ஊழியர் பங்கு விருப்பங்கள்) போன்றவற்றை சார்ந்துள்ளது. சமீபகாலமாக ஐடி நிறுவனங்களில் பணிநீக்கங்கள் மற்றும் பங்குச் சந்தை ஏற்ற இறக்கங்கள் எதிர்கால வருமானம் குறித்த சந்தேகத்தை அதிகரித்துள்ளன. "வேலை பாதுகாப்பாக இருக்குமா?" என்ற கேள்வி பலரை வீடு வாங்குவதை தள்ளிப்போட வைக்கிறது. இதனால், பலர் பட்ஜெட்டை குறைத்து சிறிய வீடுகளை தேடுகின்றனர் அல்லது முழுமையாக காத்திருக்கின்றனர்.

பெங்களூரு 5%, ஹைதராபாத் 14% குறைவு
பெங்களூருவில் 2025இல் வீடு விற்பனை முந்தைய ஆண்டை விட சுமார் 5% குறைந்துள்ளது. ஒயிட்ஃபீல்ட், அவுட்டர் ரிங் ரோடு போன்ற ஐடி வழித்தடங்களில் இந்த மந்தநிலை அதிகம்.
இதேபோல் ஹைதராபாத்தில் ஜனவரி 2025 பதிவுகள் 14% குறைந்துள்ளன. காச்சிபௌலி, ஹை-டெக் சிட்டி போன்ற பகுதிகளில் வாங்குபவர்கள் பல திட்டங்களை சரிபார்த்து, நீண்ட நேரம் எடுத்துக்கொள்கின்றனர். முன்பு சில நாட்களில் விற்ற வீடுகள் இப்போது நீண்ட காலம் சந்தையில் இருக்கின்றன என்று டெவலப்பர்கள் கூறுகின்றனர்.
விலை உயர்வு மற்றும் கடன் சுமை:
முக்கிய பகுதிகளில் விலை உயர்வு அதிகமாக உள்ளதால் சம்பளம் வாங்கும் வாங்குபவர்களின் கடன் தகுதி பாதிக்கப்படுகிறது. நடுத்தர மற்றும் உயர் நடுத்தர குடும்பங்கள் சேமிப்பு, கடன் மற்றும் முதலீடுகளை நம்பியுள்ளன. வேலை இழப்பு ஈஎம்ஐ திருப்பிச் செலுத்துவதில் இடையூறு ஏற்படுத்தும் என்ற அச்சம் உள்ள நிலையில் ரிஸ்க் எடுத்து அதிக தொகைக்கு வீடு வாங்குவதை மக்கள் விரும்பவில்லை என்பது இதன் மூலம் தெளிவாக தெரிகிறது.
ரெடி-டு-மூவ்-இன் வீடுகளுக்கு அதிக விருப்பம்:
மக்கள் மத்தியில் தற்போது கட்டுமானத்தில் இருக்கும் சொத்துகளை விட ரெடி-டு-மூவ்-இன் வீடுகளுக்கு அதிகம் ஆர்வம் காட்டுகின்றனர். கட்டுமான தாமதங்கள், திட்ட அபாயங்கள் மற்றும் வாடகை + ஈஎம்ஐ இரட்டை செலவை தவிர்க்க மக்களுக்கு இது உதவுகிறது. ரெடி டூ மூவ் இன் வீடுகள் அதிக விலைக்கு விற்கப்பட்டாலும் வாங்க மக்கள் தாயாராக உள்ளனர். ஆனால் சந்தையில் இத்தகைய வீடுகள் கிடைப்பது தற்போது அரிதாகியுள்ளது.

கட்டுமான நிறுவனங்களின் உத்தி மாற்றம்:
மந்தநிலையை சரி செய்ய திட்டமிடும் டெவலப்பர்கள், புதிய கட்டிடத்தின் அறிமுக அட்டவணையை மறுபரிசீலனை செய்து, விரைவாக டெலிவரி செய்யக்கூடிய கட்டங்களில் கவனம் செலுத்துகின்றனர். குறைவான விலை கொண்ட வீடுகள், நெகிழ்வான கட்டண திட்டங்கள், சிறிய வீடுகள் மீண்டும் சந்தையில் அதிகரிக்க துவங்கியுள்ளது. ப்ரீமியம் வீடுகளை நம்பியிருந்த ரியல் எஸ்டேட் துறை தற்போது அந்தர் பல்டி அடித்துள்ளது.
தற்காலிக பாதிப்பா? அல்லது நீண்டகால பாதிப்பா?
நிபுணர்கள் இந்த மந்தநிலை தற்காலிகமானது என்று கருதுகின்றனர். ஐடி துறையில் ஆட்சேர்ப்பு மேம்பட்டு, பங்குச் சந்தை நிலையானால் நம்பிக்கை திரும்பும். தற்போது வீடு வாங்குபவர்கள் நிதி ஒழுக்கத்தை கடைபிடிக்க வேண்டும். வேலை ஸ்திரத்தன்மை, அவசர சேமிப்பு, எதிர்கால வருமான வளர்ச்சியை ஆராய வேண்டும். வங்கிகள் அதிக கடன் அளித்தாலும், ஈஎம்ஐ உங்கள் வருமானத்திற்கு ஏதுவான அளவில் இருக்க வேண்டும் என்று நிதி ஆலோசகர்கள் அறிவுறுத்துகின்றனர்.
More From GoodReturns

வேறு வழியில்லை.. சீனாவிடம் உதவி கேட்கும் இந்தியா.. ஈரான் போருக்கு மத்தியில் புது பிரச்சனை..!!

தங்கம் - வெள்ளி: ஆனந்த் ஸ்ரீனிவாசன் வார்னிங்.. பேண்ட் சட்டை எல்லாம் ஊறிவிடுவாங்க..!

எல்பிஜி தட்டுப்பாட்டுக்கு முடிவு: இந்தியாவுக்கு வரும் 92,700 மெட்ரிக் டன் கேஸ்.. மத்திய அரசு அறிவிப்பு!!

சிலிண்டர் தட்டுப்பாட்ட விடுங்க!! ஈரான் போரால் நாட்டின் முதுகெலும்புக்கே பிரச்சினை வரப்போகுது!!

LPG தட்டுப்பாடு.. அதானிக்கு அடித்த யோகம்.. 2 நாளில் கோடி கோடியாய் பண மழை..

Work From Home.. அடுத்தடுத்து அறிவிப்பை வெளியிட்ட ஐடி நிறுவனங்கள்.. சென்னை ZOHO ஊழியர்களுக்கு 2 வார WFH..!!

முடிவுக்கு வருகிறதா ஈரான் போர்? 3 கண்டிஷன்களை வெளியிட்ட ஈரான் அதிபர்..!! அடுத்தது என்ன?

மதுரை மக்களுக்கு மோடி அரசு கொடுத்த பரிசு!! இனி நினைச்ச நேரத்துக்கு எல்லாம் வெளிநாட்டுக்கு பறக்கலாம்!!

மீண்டும் Work From Home.. கொரோனாவை விட மோசமானது இந்த ஈரான் போர்..!!

ஏஐ தொழில்நுட்பத்தின் கோரமுகம்.. Adode சிஇஓ சாந்தனு நாராயண் வெளியேற்றம்..!!

சிலிண்டர் இணைப்பு வைத்திருப்போருக்கு மத்திய அரசு முக்கிய அறிவிப்பு!! உடனே இந்த வேலையை முடிங்க!!



Click it and Unblock the Notifications