இந்தியாவில் வேகமெடுத்தும் வரும் கொரோனா வைரஸ் தாக்கத்தினால், நாட்டில் பொருளாதாரம் வீழ்ச்சி கண்டு வருகிறது. இதன் எதிரொலியாக அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பானது தொடர்ந்து 75 ரூபாய்க்கு மேலேயே இருந்து வந்தது.
எனினும் இன்று சற்றே அதில் தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது. இன்று காலை நேர வர்த்தகத்தில் ரூபாயின் மதிப்பு சற்றே அதிகரித்து, 74.73 ரூபாயாக வர்த்தகமாகியது.

இது நாட்டில் கொரோனாவின் தாக்கம் மிக வேகமாக பரவி வந்தாலும், கொரோனா தடுப்பூசியானது வெற்றிகரமான மனிதர்களுக்கு போட்டு சோதனை முடிந்து விட்டதாக ஆக்ஸ்போர்டு வெளியிட்டது. இது வீழ்ச்சி கண்டு வரும் பொருளாதார வீழ்ச்சிகளுக்கு மத்தியில், நம்பிக்கையூட்டும் விதமாக இருந்து வருகிறது.
இந்த தடுப்பூசியானது அதிகாரப்பூர்வமாக இன்னும் செயல்பாட்டுக்கு வரவில்லை என்றாலும், இது அமலுக்கு வரும் பட்சத்தில் பொருளாதாரம் விரைவில் மீண்டும் விடும். நாடு விரைவில் இயல்பு நிலைக்கு திரும்பலாம் என்றெல்லாம் என்னப்படுகின்றது. இதற்கு மத்தியில் தான் இன்றைய பங்கு சந்தைகளும் ஏற்றம் கண்டு வருகின்றன.
இதே இந்தியாவில் கொரோனா தடுப்பூசியை செலுத்திக் கொள்ள விருப்பமுள்ளவர்களையும் தேர்தெடுத்து வருவதாகவும் எய்ம்ஸ் கூறியுள்ளது. ஆக இது முதலீட்டாளர்களுக்கு ஒரு நம்பிக்கையை கொடுத்துள்ளது எனலாம். இதற்கிடையில் தான் பங்கு சந்தையில் அன்னிய முதலீடுகளும் அதிகரித்துள்ளன. கடந்த திங்கட்கிழமையன்று மட்டும், 1,709.97 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளை முதலீட்டாளர்கள் வாங்கிக் குவித்துள்ளனர்.
நாட்டில் கொரோனாவின் தாக்கம் 1.47 கோடியினை தொட்டுள்ள நிலையில், பலி எண்ணிக்கையும் 6.09 லட்சத்தினை தொட்டுள்ளது. குறிப்பாக இந்தியாவில் மட்டும் பலி எண்ணிக்கையானது 28 ஆயிரத்தினை கடந்துள்ளது. இதே பாதிப்பு எண்ணிக்கையானது 11 லட்சத்தினையும் கடந்துள்ளது.
ஆனால் இந்த நிலையிலும் கூட முன்பை பங்கு சந்தையின் சென்செக்ஸ் 466 புள்ளிகள் ஏற்றம் கண்டு, 37,883 ரூபாயாக ஏற்றம் கண்டுள்ளது. இதே தேசிய பங்கு சந்தை நிஃப்டி 130 புள்ளிகள் ஏற்றம் கண்டு, 11,152 ரூபாயாக வர்த்தகமாகி வருகிறது.
ஆக இப்படி ஒரு நிலையில் தான் அமெரிக்கா டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பானது தற்போது 74.77 ரூபாயாக வர்த்தகமாகி வருகிறது.
More From GoodReturns

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

அம்பானி சார் நீங்களா.. சன்டே மும்பையை ஸ்தம்பிக்க விட்ட பெங்களூர் Rameshwaram Cafe..- வீடியோ!



Click it and Unblock the Notifications