நாட்டில் கொரோனாவின் தாக்கம் மிக மோசமாக பரவி வரும் நிலையில், பொருளாதாரம் வீழ்ச்சி காணுமோ என்ற அச்சமும் இருந்து வருகின்றது.
இதற்கிடையில் இன்று அமெரிக்க டாலருக்கு எதிரான இந்தியா ரூபாயின் மதிப்பானது, முந்தைய அமர்வின் முடிவு விலையானது 0.7% வீழ்ச்சி கண்டு, 74.89 ரூபாயாக வீழ்ச்சி கண்டுள்ளது.
இது ஈக்விட்டி சந்தையில் இன்று காலையில் வர்த்தக தொடக்கத்திலேயே 29 பைசா குறைந்து, 73.63 ரூபாயாக தொடங்கியது. இது 74.79 ரூபாயாக தொடங்கியது. இது வரையில் இன்று 74.964 ரூபாய் வரையில் வீழ்ச்சி கண்டுள்ளது.
அதிகரிக்கும் கட்டுப்பாடுகள்
தற்போது நாட்டில் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், லாக்டவுன் நடவடிக்கைகள் கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்டு வருகின்றன. இது பொருளாதார வளர்ச்சியில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக டெல்லியில் இன்று இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை, 6 நாட்களுக்கு முழுமையாக லாக்டவுன் அமலாகும் என டெல்லி முதல்வர் அறிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் தாக்கம்
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 2,75,196 புதிய கொரோனா வழக்குகள் பதிவாகியுள்ளது. இதே 1620 இறப்புகள் பதிவாகியுள்ளன. குறிப்பாக மகாராஷ்டிராவில் 68,631 வழக்குகள் பதிவாகியுள்ளன. இதே உத்திரபிரதேசத்தில் 30,566 வழக்குகள் பதிவாகியுள்ளன. இதே டெல்லியில் 25,462 புதிய வழக்குகள் பதிவாகியுள்ளன.
ஜிடிபி விகிதம் குறைப்பு
கொரோனாவின் தாக்கம் என்பது நாளுக்கு நாள் அதிகரித்து வரும் இந்த நிலையில், பொருளாதாரம் வீழ்ச்சியினை சந்திக்கலாம் என்ற நிலையே இருந்து வருகிறது. இதனால் மதிப்பீட்டு நிறுவனங்கள் மீண்டும் ஜிடிபி விகிதத்தினை குறைக்க ஆரம்பித்துள்ளன. முன்னணி மதிப்பீட்டு நிறுவனம் ஒன்று ஜிடிபி விகிதத்தினை 10% ஆக குறைந்துள்ளது.
ஆய்வு நிறுவனங்கள் குறைப்பு
இதே ஆய்வு நிறுவனமான நோமுரா நடப்பு நிதியாண்டின் பொருளாதார வளர்ச்சி குறித்தான கணிப்புகளை 13.5%ல் இருந்து 12.6% ஆக குறைத்துள்ளது. இதே ஜேபி மார்கன் ஜிடிபி விகிதத்தினை 11% ஆகவும், யுபிஎஸ் 10% ஆகவும், இது முன்னர் 11.5% ஆகவும் கணித்திருந்தது. இதே சிட்டியின் கணிப்பு 12% ஆகவும் குறைத்துள்ளது. ஆக இப்படியொரு நிலையில் தான் பங்கு சந்தைகள் தொடர்ந்து சரிவினைக் கண்டு வருகின்றன. இதனால் ரூபாயின் மதிப்பும் சரிவினைக் கண்டு வருகின்றது.