டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பானது இன்று காலையில் வர்த்தக தொடக்கத்திலேயே 29 பைசா குறைந்து, 73.63 ரூபாயாக தொடங்கியது. இது அமெரிக்கா டாலரின் வலிமை மற்றும் சர்வதேச முதலீடுகளின் எதிரொலியாக இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

அதோடு உள்நாட்டு சந்தையிலும் முதலீட்டாளர்கள் தொழில்துறை உற்பத்தி குறித்தான குறியீடு குறித்து கண்கானித்து வருகின்றனர். இது பலவீனமான பொருளாதாரத்தினை எடைபோட தரவாக அமையும் என்பதால், ரூபாயின் மதிப்பானது சற்று சரிவில் காணப்படுகிறது.
அதோடு உள்நாட்டு முதலீட்டாளர்களும் சரி, அன்னிய முதலீட்டாளர்களும் சரி, இந்தியா சீனா இடையேயான எல்லை பதற்றத்தினை தொடர்ந்து கண்கானித்து வருகின்றனர். ஆக இதன் எந்தவொரு விரிவாக்கமோ அல்லது பிரச்சனையோ ரூபாயின் மதிப்பிலும் சந்தையிலும் பிரதிபலிக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக சந்தையில் பெரியதொரு மாற்றமில்லாமல் காணப்படுகிறது.
இதற்கிடையில் மோதிலால் ஆஸ்வால் நிறுவனம் இன்று டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பானது 73.20 ரூபாய் முதல் 73.82 ரூபாய் வரையில் இருக்கலாம் என்று கணித்துள்ளது.
இதே ஏஞ்சல் புரோக்கிங் நிறுவனம் கொரோனா வைரஸ் தொற்று நோயின் பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், பொருளாதாரம் மீட்பு என்பது மென்மையடையலாம். இதன் பொருளாதார வளர்ச்சி இனி வரும் காலாண்டுகளிலும் சரிவில் இருக்கலாம் என்றும் கூறியுள்ளது. இதன் காரணமாக டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பானது 72.5 ரூபாய் வரையில் வீழ்ச்சி காணலாம் என தெரிவித்துள்ளது.
இந்தியாவின் ஜிடிபி விகிதமானது அமெரிக்காவின் ஜிடிபி விகிதத்தினை விட மோசமாக தான் உள்ளது என்று தற்போது அறிக்கைகள் வெளியாகி வருகின்றன. அதோடு அமெரிக்காவில் பொருளாதாரத்தினை தூண்டும் விதமாக, மீண்டும் ஒரு பெரிய தூண்டுதல் தொகுப்பு இருக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
ரூபாயின் மதிப்பு சரிந்து காணப்பட்டாலும், மும்பை பங்கு சந்தையின் சென்செக்ஸ் 268 புள்ளிகள் அதிகரித்து, 38,685 ஆக காணப்படுகிறது, இதே தேசிய பங்கு சந்தை நிஃப்டி 67 புள்ளிகள் அதிகரித்து 11,422 ரூபாயாகவும் காணப்படுகிறது. இந்த நிலையில் டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பு 73.49 ரூபாயாக தற்போது காணப்படுகிறது.
More From GoodReturns

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!



Click it and Unblock the Notifications